Showing posts with label Quotes. Show all posts
Showing posts with label Quotes. Show all posts

Thursday, 16 April 2020

அதிகபட்ச ஆசை

அதிகபட்ச ஆசையென்பது
நாம் நேசிப்பவர்
நாம் நேசிப்பது போலவே
நம்மை நேசிக்க எதிர்ப்பார்ப்பது!

உலகம்

வெற்றியும் தோல்வியும்
யாருக்கும் வரும்
எனினும் வெற்றி பெற்ற பின்னரே
உலகம் உங்களுக்கு
தன் காதுகளைத் தரும்!

வரம்

காத்திருப்பின் நீளம்
அன்பில்லாதவர்களுக்கு புரிவதில்லை
பணம் சார்ந்து மாறிவரும் உலகில்
காத்திருப்பின் வலி யாரும் அறிவதில்லை
நீண்ட கால காத்திருப்பில்
மரணம் மட்டுமே நிதர்சனமே என்பதால்
எதிர்ப்பார்ப்புகளை துறந்துவிட்டு
இன்று வாழ்ந்துவிடுதலே வரம்!

நகர மறுக்கிறது என் காலம்!

கதிர் மறைக்கும் மேகத்தால்
பொழுது உறைவதில்லை
இருள் சூழும் இரவால்
மனிதம் மரிப்பதில்லை
எனினும் காற்றின்றி
திண்டாடும் சுவாசம் போல
நீயின்றி
நகர மறுக்கிறது என் காலம்!

மௌனம்

நாம் கடைசியாய் சந்தித்தபோது
ஏமாற்றம் தரும் வார்த்தைகளை
நீதான் பேசினாய்
பழகிய காலத்தில்
எதிலும் எப்போதும்
உன் விருப்பமே முதன்மையென்று
நீ நடந்துக்கொண்டிருந்ததில்
அப்போதும் உனக்கு பிடித்த
மௌனத்தையே நான்
பரிசாக தந்தேன்
எப்போதும் போல
என் விருப்பம் கேளாமல்
நீ விலகிச்சென்றாய்!

அறம்

ஏணியாகவும்
ஊறுகாயாகவும்
சுமைதாங்கியாகவும்
நம்மை நினைக்க வைக்கும்
மனிதர்களுக்கிடையே
நம் இருப்பை
தன் உயிரின் அவசியமாக
உணர்த்தும் ஓர் உறவு
கிடைக்கப்பெற்றால்
அதுவே வரம்
அந்த வரமே
வாழ்தலுக்கான அறம்!

சாளரம்

வெளியே இருக்கும் நீ
என் சாளரத்தின் வழி
வளமையென்று பொறுமுகிறாய்
உள்ளே இருக்கும் நான்
என் சாளரத்தின் வழி
உன் சுதந்திரம் கண்டு
மகிழ்கிறேன்
அவரவர் சாளரத்தின் வழி
எடைபோடுதலை விட
தத்தமது மனச்சாளரத்தை
விரிவுப்படுத்திக்கொண்டால்
அன்பின் காற்று
நெஞ்சை நிரப்பும்!

ஆறாத காயங்கள்

அம்மாச்சிக்களுக்கும்
அம்மாவுக்களுக்கும்
ஆறாத காயங்கள் பலவுண்டு
மகள்களுக்கு ஏற்படும்
காயங்களை அவர்களால்
தடுக்க முடிவதில்லை
எனினும்
ஆறாத காயங்களையும்
துடைத்துப்போட்டு
வாழ்க்கையில் எதிர்நீச்சலிடும்
மனத்துணிவை மட்டும்
எப்படியோ மரபணுக்களில்
கடத்திச்சென்று பரிசாய்
தம் பெண் மகவுகளுக்கு
தந்துவிட்டு சென்றுவிடுகிறார்கள்!

Dark Whispers

The night whispers to me
The music that solace the heart
The beauty that fills the eyes
And the peace hidden in the dark!

அந்த இரவு என்னிடம் கிசுகிசுக்கிறது:
மனதிற்கு ஆறுதல் தரும் இசையை
கண்கள் நிறைத்திடும் அழகை
பிறகு அந்த இருளில் ஒளிந்திருக்கும் அமைதியை!

மாயக்கண்ணாடி!

மரணத்திற்கு நிகரான
வேதனைகளையும்
மரணத்தின் வாயிலிலிருக்கும்
நொடிகளையும்
ஒரு புன்னகையில் மறைத்து
பிறர் வாழ யோசித்து
வலம்வரும் மனிதர்களின்
உள்ளமொரு
#மாயக்கண்ணாடி!

மயிலிறகாக

எப்போதும் உன்னைச் சுற்றியே என் கனவுகள்
நீ புரிந்துக்கொள்ளும் நாளில்
உன் நினைவுகளில் நான் மயிலிறகாக
மாறியிருக்கலாம்
அப்போதெனும் அன்பை
மறைக்காமல் அளித்து
மகிழ்வாய் வாழ்ந்திரு!

My_Shoes

#My_Shoes
You don’t know what’s inside my shoes
Neither compare nor criticise my steps
With the wounds my feet had borne
You don’t know what I’ve undergone
All that you need to admire and talk
Is my wounded feet’s ability to walk
Covered up with fancy shoes!

என் காலணிகளின் உள்ளே என்ன இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியாது
ஒப்புமைப்படுத்தவோ விமர்சிக்கவோ வேண்டாம்
என் பாதங்கள் சுமக்கும் காயங்களும்
அது கடந்த பாதைகளும்
உங்களுக்குத் தெரியாது
நீங்கள் ரசிக்கவும் பேசவும் வேண்டியது
என் காயப்பட்ட பாதங்களின் நடக்கும் திறனை
போர்த்தியிருக்கும் இந்த ஆடம்பர காலணிகளுக்குள்!

Death

Death
Provokes painful memories for the beloved
Leaves a feeling of guilt for those who betrayed
And
The ultimate peace for the dead!

ஒரு வழிப்பாதை

அன்போ கடனோ
எதையும் கேட்காதவரை
பிரச்சனையில்லை
அன்பை எதிர்ப்பார்த்தும்
கடனை திருப்பிக்கேட்டும்
நின்றவர்கள் வென்றதாய்
சரித்திரமும் இல்லை
இரண்டுமே பெரும்பாலும்
ஒரு வழிப்பாதை!

கால வெள்ளத்தில்

தன் கனவுகள் விடுத்து
யாருடைய கனவுகளுக்காகவோ படித்து
யாருடையோ விருப்பதிற்காகவோ மணந்து
பெற்றப் பிள்ளைகளின் வாழ்க்கைக்காக வாழ்ந்து
சமூகத்தின் கட்டாயத்துக்காக வளைந்து
குனிந்துக்கொண்டே போகும்
பெண்களின் வாழ்க்கையெல்லாம்
வெறும் காகிதப் பூக்களாக
கால வெள்ளத்தில் கரைந்துப்போகிறது

வாசம்!

ஆண்டுகள் பல கடந்தாலும்
நம் சந்திப்புகளில்
பற்றிக்கொள்ளும்
அந்த விரல்களின் பிணைப்பில்
எப்போதும் எனக்கு
அதே முதல் மழைத்துளியின்
வாசம்!

தேர்தல்

இந்தத் தேர்தலில் கட்டாயம் ஓட்டுப்போடுங்கள், கூடவே ஒரு மரக்கன்றையும் நட்டு வைத்துவிடுங்கள், ஐந்து வருடங்களில் மரக்கன்று நிச்சயம் பலன் தரும்!
தேர்தல்

Wednesday, 15 April 2020

அன்பென்பது

அன்பென்பது
கடிகாரத்தின் முள்ளில் அடைபடுவது இல்லை
அது காலம் தாண்டி
நமக்காக நிற்கும் மனங்களில் வாழ்வது!

கடவுள் ஒன்றுதான்

மைதானத்தில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கிறது,
“டேய் சாமிகிட்ட வேண்டிக்கடா”
“நோடா நாங்க முஸ்லீம்டா”
“சோ வாட் டா?”
“முஸ்லீம் இந்து சாமியை கும்பிடக்கூடாதுடா!”
“ஓ முஸ்லீம்னா கும்பிடக்கூடாதா? பட் எல்லாரும் சாமிதானேடா?!”
“சரிடா” என்றவன் திரும்பிக்கோவிலை பார்த்துவிட்டு நகர்கிறான்!

சலசலவென்று பேசிக்கொண்டே தோளில் கைப்போட்டுக்கொண்டுச்சென்ற கும்பலில் இருந்த இரு குழந்தைகளுக்கும் வயது 6ல் 8க்குள் தான் இருக்கும், அவர்களுக்கு மதம் மெதுவாய் போதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது, இருப்பினும் நட்பு மதத்தை தோற்கடிக்கிறது என்பதுதான் அழகு! கடவுள் ஒன்றுதான், வழிபடும் முறை மட்டுமே வேறு என்று பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்குமா சமூகம்?! ❤️

செய்திகள்

Image may contain: text that says 'Your uote.in செய்திகள் செய்திகளை அழித்து திருத்தி எழுதி செய்திகளாகவே மடிந்துப்போகின்றன! -AMUDHA M'

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...