Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Wednesday, 15 April 2020

அன்பெனும் அம்புலிமாமா கதை!


No photo description available.

அவனுக்கு புற்றுநோய்
அவளுக்கு என்றால் நீங்கள்
எனக்கா(?!)என்பீர்கள் என்பதால்
அவனுக்கு என்கிறேன்

தேடி உழைத்தச் செல்வங்கள்
பலகோடி என்றாலும்
அதைப்பங்கீட உறவுகள்
பல இருந்தது
எதார்த்தமாய் சிந்திப்போம்
சொத்துகளை மாற்றி எழுதென்றாள்
மனைவி
நீ இருக்கும்போதே மரியாதையில்லை
எங்களையும் கொஞ்சம் யோசியென்றார்
தந்தை
எஞ்சியிருக்கும் மகளுக்கான
சீர்வரிசைகளை நினைத்து அம்மா
கண்ணீர்விட
வீடியோ கேம்களில் மூழ்கியிருந்தார்கள்
பிள்ளைகள்
அவரவர் விரும்பியதை தந்துவிட்டு
நிமிர
மருத்துவம் தொடரலாமென்று
வெற்று ஆறுதல் தந்தக்குடும்பம்
கரிய இரவின்
பொருளாதார வெளிச்சத்தில்
நிம்மதியாய் உறங்க
முன்தேதியிட்ட உறக்கத்தின் சுமையில்
விழித்திருந்தான் அவன்
எல்லாம் இருக்கிறது எதுமில்லையென்ற
உண்மையில்
நவீன சித்தார்த்தானாய்
இரவில் பயணம் தொடங்க
“ஐயா தம்பி நானும் வரேன் ராசா”
என்று வந்து நின்றாள் முதிய தாதி
வெறும் தாதியென்றால்
உங்கள் மனதில் ஆஹாவென்று
காமம் கிளுகிளுப்பு கள்ளக்காதல் என்றே
அன்பு அடையாளப்படுத்தப்படுமென்பதால்
முதிய தாதியாக அவள் உடன்செல்ல
வந்து நின்றாள்
மௌனமாய் தலையசைத்து
அவள் கைப்பிடித்து கண்ணொற்றி
அவன் உடைந்தழ
பின்னேயே வாலாட்டிக்கொண்டு வந்தது
அவ்வப்போது
அவன் பரிவுக்காட்டி வளர்த்த
நாயொன்று
தொலைதூரம் சென்ற அவன்
நேசமிக்க எளிய மனிதர்களின்
உதவியாலும்
பிரியாது பரிவுக்காட்டிய நாயினாலும்
புற்று நீங்கி
உயிர்பிழைத்தான் என்றால்
நீங்கள் நம்பவா போகிறீர்கள்?
அன்பும் கருணையும்
உயிர் காக்கும் மந்திரமென்றால்
அதெல்லாம் அம்புலிமாமா கதைதான்
என்பீர்கள்
எங்கோ அம்புலிமாமா கதைகள்
நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன
நீங்கள் எப்போதாவது நாய்க்கு
காட்டும் பரிவைப்போலவேனும்
நேசிக்கும் உயிர்களுக்கு
நேரமெடுத்து பரிவுக்காட்டுங்கள்
அன்பெனும் மந்திரம்
அம்புலிமாமாக்களை மீட்டெடுக்கும்!

காதலின் குறுங்கதை!


No photo description available.

















தன் வேரை பூமியில்
பரப்பியிருந்த மரத்தின்
கிளையோன்று
வானமே வாழ்க்கையென்று
லயித்திருந்தது

ஒரு பருவத்தில் பூக்களையும்
மறு பருவத்தில் காய்ந்த
இலைச்சருகுகளையும்
பூமியில் உதிர்க்கும் மரம்
சில வேளைகளில்
பூக்களும் இலைகளும் இல்லா
மொட்டைக்கிளைகளுடனும்
காட்சிதரும்!!
நிழலிலும்
பூக்களின் மணத்திலும்
திளைத்திருக்கும் பூமி
இலையுதிர் காலத்திலும்
மரத்தின் வேரினை
இன்னும் பலமாய் பற்றியிருக்கும்
நெடுநேரம் இம்மரத்தினடியில்
நாம் கதைத்திருக்கிறோம்
நீ இல்லா இப்பொழுதுகளில்
இந்த பூமி நானாகவும்
வெறும் நெடுமரம்தான் நீயெனவும்
தோன்றுகிறது
இனியென்ன
நீ வானம் நோக்கி வாழ்ந்திரு
நான் அன்பெனும் பூமியில்
நேசத்தை ஆழப்புதைக்கிறேன்
அது
உன் நலத்திற்கு உரமாகட்டும்!!

Friday, 20 December 2019

அன்பெனும்_அம்புலிமாமா_கதை!

#அன்பெனும்_அம்புலிமாமா_கதை!

அவனுக்கு புற்றுநோய்
அவளுக்கு என்றால் நீங்கள்
எனக்கா(?!)என்பீர்கள் என்பதால்
அவனுக்கு என்கிறேன்

தேடி உழைத்தச் செல்வங்கள்
பலகோடி என்றாலும்
அதைப்பங்கீட உறவுகள்
பல இருந்தது
எதார்த்தமாய் சிந்திப்போம்
சொத்துகளை மாற்றி எழுதென்றாள்
மனைவி
நீ இருக்கும்போதே மரியாதையில்லை
எங்களையும் கொஞ்சம் யோசியென்றார்
தந்தை
எஞ்சியிருக்கும் மகளுக்கான
சீர்வரிசைகளை நினைத்து அம்மா
கண்ணீர்விட
வீடியோ கேம்களில் மூழ்கியிருந்தார்கள்
பிள்ளைகள்
அவரவர் விரும்பியதை தந்துவிட்டு
நிமிர
மருத்துவம் தொடரலாமென்று
வெற்று ஆறுதல் தந்தக்குடும்பம்
கரிய இரவின்
பொருளாதார வெளிச்சத்தில்
நிம்மதியாய் உறங்க
முன்தேதியிட்ட உறக்கத்தின் சுமையில்
விழித்திருந்தான் அவன்

எல்லாம் இருக்கிறது எதுமில்லையென்ற
உண்மையில்
நவீன சித்தார்த்தானாய்
இரவில் பயணம் தொடங்க
“ஐயா தம்பி நானும் வரேன் ராசா”
என்று வந்து நின்றாள் முதிய தாதி
வெறும் தாதியென்றால்
உங்கள் மனதில் ஆஹாவென்று
காமம் கிளுகிளுப்பு கள்ளக்காதல் என்றே
அன்பு அடையாளப்படுத்தப்படுமென்பதால்
முதிய தாதியாக அவள் உடன்செல்ல
வந்து நின்றாள்

மௌனமாய் தலையசைத்து
அவள் கைப்பிடித்து கண்ணொற்றி
அவன் உடைந்தழ
பின்னேயே வாலாட்டிக்கொண்டு வந்தது
அவ்வப்போது
அவன் பரிவுக்காட்டி வளர்த்த
நாயொன்று

தொலைதூரம் சென்ற அவன்
நேசமிக்க எளிய மனிதர்களின்
உதவியாலும்
பிரியாது பரிவுக்காட்டிய நாயினாலும்
புற்று நீங்கி
உயிர்பிழைத்தான் என்றால்
நீங்கள் நம்பவா போகிறீர்கள்?
அன்பும் கருணையும்
உயிர் காக்கும் மந்திரமென்றால்
அதெல்லாம் அம்புலிமாமா கதைதான்
என்பீர்கள்
எங்கோ அம்புலிமாமா கதைகள்
நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன
நீங்கள் எப்போதாவது நாய்க்கு
காட்டும் பரிவைப்போலவேனும்
நேசிக்கும் உயிர்களுக்கு
நேரமெடுத்து பரிவுக்காட்டுங்கள்
அன்பெனும் மந்திரம்
அம்புலிமாமாக்களை மீட்டெடுக்கும்!


No photo description available.

காதலின்_குறுங்கதை



#காதலின்_குறுங்கதை!

தன் வேரை பூமியில்
பரப்பியிருந்த மரத்தின்
கிளையோன்று
வானமே வாழ்க்கையென்று
லயித்திருந்தது

ஒரு பருவத்தில் பூக்களையும்
மறு பருவத்தில் காய்ந்த
இலைச்சருகுகளையும்
பூமியில் உதிர்க்கும் மரம்
சில வேளைகளில்
பூக்களும் இலைகளும் இல்லா
மொட்டைக்கிளைகளுடனும்
காட்சிதரும்!!

நிழலிலும்
பூக்களின் மணத்திலும்
திளைத்திருக்கும் பூமி
இலையுதிர் காலத்திலும்
மரத்தின் வேரினை
இன்னும் பலமாய் பற்றியிருக்கும்

நெடுநேரம் இம்மரத்தினடியில்
நாம் கதைத்திருக்கிறோம்
நீ இல்லா இப்பொழுதுகளில்
இந்த பூமி நானாகவும்
வெறும் நெடுமரம்தான் நீயெனவும்
தோன்றுகிறது
இனியென்ன
நீ வானம் நோக்கி வாழ்ந்திரு
நான் அன்பெனும் பூமியில்
நேசத்தை ஆழப்புதைக்கிறேன்
அது
உன் நலத்திற்கு உரமாகட்டும்!!

Image may contain: plant, tree and outdoor

Thursday, 17 August 2017

வண்ணக்குதிரைகள்


ராதிகாவை அந்த அலுவலகத்தில் தான் முதன்முதலில் பார்த்தேன், நெடுநெடுவென்ற உயரத்தில், இரண்டு கரிய முட்டைகளா, இல்லை நாவல் பழமா என்ற அளவிற்குப் பளீரென்ற பெரிய கண்கள், அழகிய கருமை நிறம், ஆமாம் அத்தனை அழகாய் இருந்தது அக்காவின் கண்கள் மட்டுமல்ல, ஈர்க்கும் அந்தக் கருமை நிறமும்தான், எனக்கு அத்தனை வசீகரமாய்த் தோன்றியது!

கிட்டத்தட்ட எட்டு வயது மூத்தவளை அக்கா என்று சொல்ல மனம் வரவில்லை, பார்த்தவுடன் நெடுநாள் பழகியது போல், "ஹேய் குட்டி" என்று வந்து அணைத்துக்கொண்டாள். கொஞ்சம் பூசினார் போல இருந்ததால் "சப்பிச் சீக்ஸ்" என்று அவ்வப்போது கன்னத்தையும் கிள்ளி எடுத்துப் பாடாய்ப் படுத்தியவளை எப்படி அக்கா சொக்கவென்று அழைப்பது. அன்றுமுதல் அவளை ராதி என்றே அழைக்கலானேன். ராதிகாவுக்குப் பெரிய பின்புலம் இருந்தது பின்னே தெரிய வந்தது, தி நகரில் பெரிய கடை வைத்திருக்கும் முதலாளியின் செல்ல மகள்களில் இவள் ஒரு மகள், சொந்தக்காலில் தான் நிற்பேன் என்று போர்க்கொடித் தூக்கி அப்பாவின் விருப்பத்திற்கு மாறாக அந்தத் தொலைத்தொடர்பு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். அமைதியாய் கஸ்டமர்களிடம் நான் பேசிக்கொண்டிருந்தால், நடுவே வந்து சத்தமாய் எதையோ கேட்டுவிட்டுக் கொஞ்சம் என்னைத் திருத் திரு வெனக் குழப்படித்து முழிக்க வைத்துச் செல்வதில் அவளுக்கு அப்படியொரு ஆனந்தம்.

பரபரப்பாய் வேலையில் மூழ்கி இருந்த ஒரு நாளில், ராதி வந்தால், "ஹேய் குட்டி, உனக்கொரு சர்ப்ரைஸ், கொஞ்சம் வாயேன்" என்றால். "குட்டி இல்லைடி எருமை, ஐ ஹவ் எ நேம்" என்ற சிடுசிடுக்க, "சரிதான் வாடி" என்று இழுத்துப்போனாள்.

ஆறடி உயரத்தில் அக்காவிற்கு ஏற்ற அளவில், மைதாவைக் குழைத்துப் பூசியது போல ஒருவன் நின்றிருந்தான். ஆமாம் அவன் வெள்ளையாய் இருந்தான், அது எனக்கு மைதாவை பூசியது போல என்றுதானே தோன்றியது. "அடடா அழகு" என்று நான் சொல்ல ராதி எதிர்பார்க்க, "பச்" என்று உதட்டைப் பிதுக்கி, "ஹலோ" என்றேன்.

இந்தப் பக்கம் கருமை நிற அழகி, அந்தப்புறம் மைதாவில் நிறத்தில் ஓர் ஆண்மகன், மன்னிக்கவும் எனக்கு அன்று அப்படிதான் தோன்றியது. அந்தக் கண்களை இதற்கு முன் எங்கோ பார்த்த ஞாபகம், அந்தக்கண்களை உற்றுநோக்கினேன், "ம்ம், சம்திங் மிஸ்ஸிங், ஒகே கேரி ஆன்" என்று நகர்ந்துவிட்டேன்.

ராதி நிறையச் சண்டைபோட்டாள், மரியாதை தெரியாதவள் என்றாள், "சரி இருந்து தொலையட்டும், போ" என்றேன்.

காதல் ஒன்று வந்துவிட்டால் தோழியின் நிலைமை கந்தல்தான், எத்தனை சொன்னாலும் ராதியின் காதல் புராணம் ஓயவில்லை. "அவன் ரொம்பக் கஷ்டப்படுற குடும்பம், சின்ன வயசிலே இருந்து என்னையே சுத்தி சுத்தி வாரான், ரொம்பவும் போர்ஸ் பண்ணினான், அப்புறம் ஒத்துக்கிட்டேன்" என்றவள், "ஏய் சொல்லு, நான் கருப்பாத்தானே இருக்கேன், அம் ஐ ஏ குட் மேட்ச் ஃபார் ஹிம்?" என்று சந்தேகித்தாள்.

"ஏய் லூசு, கருப்பா இருந்தா என்ன, நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு அண்டர் ஸ்டாண்டிங் ல இருக்கீங்க, உங்களுக்கு என்ன முக்கியம்ன்னு பாருங்க, போதும்"

கால வெள்ளத்தில் நான் வேறு ஒரு வேலைக்கும், ராதி ஒரு தீம் பார்க்கிலும் வேலைக்குச் சேர்ந்தாலும், தொடர்பு விட்டுப்போகவில்லை.
ராதியின் புண்ணியத்தில், ராதையின் கண்ணனுக்கு அவளே வேலையும் வாங்கிக்கொடுத்து, அவனுக்குரிய வசதிகளையும் தன் உழைப்பில் செய்துக்கொடுத்திருந்தாள்.

அன்று ராதியின் தீம் பார்க் அலுவலகத்துக்குச் சென்றேன், அடடா என் ராதியா இது, எந்த விழிகளைப் பார்த்து அழகியென்று கொண்டாடினேனோ அந்த விழிகளில் ஜீவனில்லை, எந்த நிறம் பார்த்து ரசித்தேனோ அது சோபை இழந்திருந்தது. "என்ன ஆச்சு ராதி?", பதிலேதும் சொல்லாமல் அவள் கண் நோக்கிய திசையில் செல்ல, ராதையின் மைதா மாவு கண்ணன் (பின் வேறு எப்படிச்  சொல்ல?) வேறொரு மைதா கோதையிடம் அளவளாவி கொண்டிருந்தான். "என்ன இது, என்னமோ மிஸ்ஸிங் னு சொன்னேனே அது இதுதான், அவன் படிப்புக்கு உதவி செஞ்சே, வேலை வாங்கிக்கொடுத்தே, பைக் வாங்கிக்கொடுத்தே, ஹி ஹாட் யுடிலைஸெட் யு (அவன் உன்னை உபயோகப்படுத்திகிட்டான்) ", என்று நறநறவென்க

"குட்டி, அவன் காதல் இல்லைன்னு சொன்னாலும், ஒரு நண்பனா இருந்திருந்தா கூட அவனுக்கு இதெல்லாமும் நான் செஞ்சிருப்பேன், அவனுக்கு அவனோட ஏழ்மை பிடிக்கலையாம், நான் கருப்பா இருந்தாலும் (அழுகிறாள்) எதை அழகுன்னு சொன்னானோ, அதையே சொல்லி (மீண்டும் அழுகிறாள்) ...நான் கருப்பா இருந்தாலும் என்னைக் காதலிச்சது என் பணத்துக்காகத்தானாம், கருப்பா இருந்தாலும் பணம் தனி அழகை கொடுக்குமாம், என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்க நினைச்சானாம், இப்போது இந்தக் கம்பெனியின் முதலாளியின் பொண்ணு ப்ரொபோஸ் பண்ணினதால, என்னை விட அவ பெட்டெர் ஆப்ஷனாம், அவனோட அம்மாவுக்கும் வெள்ளையா இருக்கறவனுக்கு நான் சரியான மேட்சா இருக்க மாட்டேன்னு பீல் பண்றங்களாம்" சொல்லிவிட்டு இன்னும் அழுகிறாள்.

அவளை அழவிட்டு அந்தக் கண்களை யோசித்துப் பார்க்கிறேன், பொய்யும் பித்தலாட்டமும் நிறைந்த நான் பார்த்த அதே ஆணின் கண்ணை அது ஒத்திருந்தது, அலைபாயும் அந்தக் கண்களை ஏன் காரணேமேயில்லாமல் எனக்குப் பிடிக்காமல் போனது என்று தாமதமாகப் புரிந்தது. "ராதி, நீ அவனை அப்படியேவா விட்டே, அவன் உன் வீட்டுக்கு பக்கத்திலே தானே? அவன் அம்மா இப்படியெல்லாம் சொல்லியிருப்பாங்களா? அவன் கதை சொல்றான், நீ ஏன் அவனை எதுவும் கேக்கலை? சரி இப்போ இங்கேயே இரு, நானே அவனை உண்டு இல்லைன்னு பண்ணிட்டு, அவன் வண்டவாளத்தை அந்தப்பொண்ணுகிட்டேயே சொல்லிட்டு வரேன்" என்றவளை, கையைப் பிடித்து இழுத்தவள்,

"குட்டி, அவளுக்கு அவன் என்னைக் காதலிச்சது தெரியும், இருந்தும் அவ அவனை இழுத்துகிட்டா, இவனும் ஓடிட்டான், இப்பவே ஓடியது நல்லதுதானே, கல்யாணத்துக்கு அப்புறம் அவளை விடவும் பணக்காரிக் கிடைச்சா அவன் ஓடுவான், அதோட குட்டி, உனக்கு ஒரு கதை தெரியுமா, என் அப்பா தராதரத்தைப் பத்தி உணர்த்த இதை எனக்குச் சொல்லுவாரு, ஜெர்மனி பிரிவுபட்டிருந்தபோது பெர்லின் சுவர் அவங்களை இரண்டா பிரிச்சு வெச்சிருந்தது, அப்போ கிழக்கு பிராந்திய மக்கள், அந்தச் சுவருக்கு அந்தப்பக்கம் உள்ள மக்களுக்கு லாரி நிறையக் குப்பைகளைப் போட்டாங்களாம், அவங்களுக்கு அவ்வளவு வெறுப்பு, பதிலுக்கு அந்தப்பக்கம் இருந்த மக்கள் குப்பைக்கு மாற்றா நிறையா உணவுப் பண்டங்களையும் பரிசுகளையும் சுவர் மேல அடுக்கி வெச்சு, யார்கிட்டே எது இருக்கோ அதைத்தானே தர முடியும், நாங்க உங்களுக்கு இதைத்தரோம்ன்ன்னு எழுதி வெச்சாங்களாம். யார்கிட்டே என்ன இருக்கோ அதைத்தானே அவங்க தருவாங்க, என்கிட்டே அன்பு இருந்தது, அவன்கிட்டே சூழ்ச்சி இருந்தது, அவன் சூழ்ச்சியும் பொய்யில்லை, என் அன்பும் பொய்யில்லை, அவன் நல்லா இருக்கட்டும், விட்டுடு குட்டி" என்றாள்.

அழும் அந்தக் கண்கள் அத்தனை அழகாய்த் தெரிந்தது எனக்கு. நான் கடைசியாக அந்தக் கண்களை அன்றுதான் பார்த்தேன், நான் கடைசியாகப் பார்த்த அழகிய கண்களும் அவளுடையதுதான்.


Tuesday, 27 June 2017

தற்கொலைகள்







No automatic alt text available.

நேற்றிரவு நான்
தற்கொலைச் செய்துகொண்டேன்
அப்படித்தான் எல்லோரும்
சொல்கிறார்கள்

தெளிவாய் படித்து
பரீட்சை எழுதி
எதிர்ப்பார்த்த மதிப்பெண்
கிடைக்காதபோது
அப்பனுக்கு கடன்சுமை
தந்து
மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து
ஆற அமர வந்த
எதிர்ப்பார்த்த மதிப்பெண்ணில்
இந்த கல்வியமைப்பின்
கசப்பான வணிக
நோக்கத்தைக் காண
நேர்ந்தபோது

வாங்கியக் கடனின்
வட்டிக்காக
உழைத்துத்தேய்ந்த
அப்பனின் கூன்முதுகை
நிமிர்த்த முடியாதபோது

குடிகாரத் தமையனிடம்
சிக்கிச் சிதைந்த
அண்ணியின் கண்ணீரை
மவுனமாய் கடந்தபோது

உற்றத்தோழி
காதல் தோல்வியில்
கண் எதிரே
உத்திரத்தில் தொங்கியபோது

பக்கத்துவீட்டு பிஞ்சை
எதிர்வீட்டு மாணிக்கம்
கசக்கி கொன்ற
செய்தியின் போது

காதலித்து மணந்த
அடுத்தவீட்டு இசக்கியை
கர்ப்பக் கோலத்தில்
அவள் பெற்றோர்
வெட்டிச் சாய்த்தப்போது

நன்றாய் படித்த
சண்முகத்தை
டாஸ்மாக் கடையில்
அவன் அப்பன்
வேலைக்குச் சேர்த்தப்போது

குண்டுக்குழி கன்னத்துடன்
கட்டாயப் போதையில்
குழந்தைகளுடன்
பெண்கள் சாலையில்
பிச்சையெடுத்த போது

கடன் வாங்கி
ஓடிப்போன எதிர்வீட்டுக்காரன் மீது
புகார் கொடுக்கச்சென்ற
ஆனந்தியின் அம்மாவை
ஒரு இராத்திரி படுக்க அழைத்த
அந்த காவல்துறை அதிகாரியின்
கண்களைக் கண்டபோது

ஒரு மழைநேரத்துக்
காலையில் அவனுக்காக
காய்ச்சலுடன் கால்கடுக்க
காத்திருந்த வேளையில்
வராது சென்ற அவன்
அலட்சியத்தின்போது

ஆயிரம் நம்பிக்கைத்தந்து
காரணங்கள் சொல்லி
காசுக்காக அவன்
வேறொரு கழுத்தில்
தாலி பூட்டியபோது

மறுக்க மறுக்க
கேளாமல்
ஒரு குடிகாரச் சுப்பனுக்கு
அப்பன் கட்டிவைத்தப்போது

உழைத்து உழைத்து
தேய்ந்து
அடிஉதையில் கர்ப்பம்
கலைந்து குருதியாக
வெளியேறியபோது

முன்னம் காதலித்தவன்
இப்பொழுதும்
வைத்துக்கொள்கிறேன்
என்று அழைத்தப்போது

இப்படி
ஒவ்வொரு முறையும்
நான் செத்துப்போய்
அழுதபோது
ஒவ்வொருமுறையும்
என்னைக் கொன்றவர்கள்
கடந்தப்போது
கரிய விழிகளில்
கண்ணீருடன்
உறைந்துவிட்ட புன்னகையுடன்
என் மனம் நோக்கும்
கருணைக்காக காத்திருந்தேன்
அன்பெல்லாம் துன்பமாக
மாறிய வேளைகளில்
நம்பிக்கையெல்லாம்
தகர்ந்துப்போய்
நொடித்துப்போன வேளைகளில்
தோன்றாத எண்ணமெல்லாம்
நேற்றிரவு தோன்றியது விந்தைதான்

ஆமாம் நான் தற்கொலைச்
செய்துக்கொண்டேன்
அப்படித்தான் எல்லோரும்
சொல்கிறார்கள்

கிடத்தப்பட்டிருக்கும்
என் வெற்றுபிண்டத்தின்
மீது சிலருக்கு கருணைப்பொங்குகிறது
சிலருக்கு ஒழுக்கச்சீல
கற்பனைக்கதைகள்
நெஞ்சில் விண்டுகிறது

உறைந்துக்கிடந்த மனதை
அறியாதவர்கள்
துவண்டுக்கிடந்த மனதை
கொன்றவர்கள்
நம்பிக்கைத்துரோகம்
செய்தவர்கள்
நம்பிக்கைத்தந்தவர்கள்
எல்லோருக்கும் இதோ
இந்தச் சவம் கண்ணை
உறுத்துகிறது
சில மணித்துளிகளில்
சில வருடங்களில்
இந்தக் கதைகளும்
இந்தக் காட்சிகளும்
அவரவர் மனதைவிட்டு
அகன்றுவிடும்

ஏய்த்தவர்
சுரண்டியவர்
சுகப்பட்டவர்
சாகடித்தவர்
எல்லாம் வாழ
என்னைப்போல தற்கொலைச்
செய்துக்கொண்ட
இந்த ஆவிகள் சூழ்
உலகத்தில்
இந்தக் கோழைத்தனத்திற்காக
இப்பொழுது
நானும் வருந்துகிறேன்!

 

மரணத்தின்_வெளிச்சம்!

Image may contain: one or more people

பட்டாபிக்கு ஏத்த ஜோடியென்று
அலமு மாமி நெட்டுயிர்த்ததில்
அத்தனை சிலிர்த்தது
ஏன் என்று இன்றுவரை
எனக்கு புரியவில்லை

ஒரே அலுவலகத்தில்
வேலைப்பார்த்தும்
கீதாவிடமோ மாலாவிடமோ
உனக்கு வராத காதல்
என்னிடம் ஏன் வந்தது
அவா வேறு சாதியென்றாய்
நினைவிருக்கிறது
பின்னாளில் அத்தைப் பெண்
பாக்கியத்திற்குச்
சொத்திருந்தாலும்
அதைப் பிரிக்க உடன்பிறந்தார்கள்
உயிருடன் இருந்தது
உனக்கு பிடிக்கவில்லை
அத்தைப் பாக்கியத்துக்கும்
அது புரியாமலில்லை

புக்ககத்தில் காலடியெடுத்து
வைத்த வேளையில்
அத்தையின் கண்களிலும்
அவளின் பெண்ணின் பார்வையிலும்
தப்பித்தலுக்கான ஆசுவாசத்தை
நீ பொறாமையென்றாய்
உன் விரல் தீண்டலில்
உன் பார்வையின் குரூரத்தை
நான் கவனித்தேனில்லை

ஒன்றாய் பணியிடத்தில்
வேறு வேறு பணி செய்தாலும்
உன்னைவிட அதிகமாக
உழைத்தாலும்
அதிகமான ஊதியத்தின்
கால்காசு பெற
உன் கால்கள் பற்ற வைத்தாய்
அடுத்திருக்கும் தங்கைகளுக்கு
அப்பனின் சம்பாத்தியம்
போததென
உன் முதல் தாக்குதலை
சகித்துக்கொண்டேன்
அது தோல்வியில்லை

காலையில் பெட் காபியில்
நீ தொடங்க
நான் அவ்வேளையில்
மதிய சமையலை முடித்திருப்பேன்
உன் பள்ளியெழுச்சிக்குப் பின்
உன் மடிப்புக் கலைந்த
சட்டைக்காக
என்னை சோம்பேறியென்றாய்
நிறைந்த வயிற்றுடன்
நீ முன்னே செல்ல
வயிற்றில் கால்பங்கு உணவுடன்
நான் பின்னே வர
"என் ஆத்துக்காரிக்கு மேக்கப்
செய்யவே நேரம் போதலை!"
என்று சுப்புவிடம் விட் அடித்துக்
கொண்டிருந்தாய்
என் வயிற்றில் எரிந்த நெருப்பை
கழுத்தில் இருந்த மாங்கல்யம்
தாங்கிக் கொண்டது
உள்ளே குவிந்த வெப்பத்தை
நீ அறிந்ததேயில்லை

அடுத்த சீட்டு
பங்கஜம் வற்புறுத்தி
வாங்கச் செய்த சேலையை
"யாரை மயக்க
இதுவெல்லாம்" என்ற நீ
சாதாரண சேலைக்கும்
"நான் என்ன பிச்சைக்காரனா
ஏண்டி வேஷம்?"
என்று துவேஷித்தாய்
சேலையில்லாமல்
நடுத்தெருவில் நின்றால்
உன் ஆண்மை பறிபோகுமா
என்ற குரூரம் ஏன் உதித்தது
நான் யோசிக்கவில்லை

கடும் காய்ச்சலில்
நானிருந்தாலும்
காலையில் காபி தொடங்கி
இரவில் புணர்ச்சி வரை
உன் உலகம் வழக்கம்போல்
இயங்கியது
"ஏன் லீவ் போடுறாய்
டிராமா பண்ணாமே கிளம்புடி"
என்ற உனக்கு
உன்னை தொற்றிய காய்ச்சலிலோ
உலகமே நின்றுவிட்டது
ஆருயிர் உனக்கு அலுவலகம்
செல்ல மனமில்லை
உடன் உனக்கு
பணிவிடை செய்ய
"ஆத்துக்காரிக்கும் தொத்துஜீரம்"
என்று இரட்டை அர்த்தத்தில்
கெக்கேபிக்கவேன இளித்து
எனக்கும் சேர்த்து
நான் நடத்தாத
நாடகத்தை
நீ அரங்கேற்றினாய்
எனக்கு சகிக்கவில்லை

பால்காரனிலிருந்து
கீரைக்காரத் தாயம்மா வரை
போலிகளில் ஒளிந்த
உன் உருவத்தில்
நீ காவியத்தலைவன்
நானுன் அடங்கா
அசட்டுக்குதிரை
அலுவலகம் செல்லும்போதும்
மேலாதிகாரியின் நினைவில் கூட
உன் வன்புணர்ச்சி
காவியக்கூடலாக விரியும்வண்ணம்
உன் வர்ணனைகள்
என்னை முகஞ்சுளிக்க வைக்கின்றன
முணுக்கென மூக்கில் விடைத்த
கோபம் கூட
சட்டென கரைந்துவிட்டது
இன்னமும் நான் கருவுறவில்லை!

காலத்தின் மாறுதலில்
உன் வஞ்சமும் வன்மமும்
உன்னை மரணமாய்
தழுவிய நாளில்
அலமுவுக்கும் அத்தைக்கும்
பொங்கிய கண்ணீரில்
சில துளிகள் கடனாய் தர
அவர்கள் சித்தமாய் இருந்தார்கள்
நானோ சித்தத்தில் இருந்த
சிறுதுளி பித்தத்தையும்
விரட்டிக்கொண்டிருந்தேன்
அழுது கரைய விரும்பவில்லை

காவியத்தலைவனின்
ஆண்மையில் குறையென்று
உறுதிசெய்த நாளில்
உன் நண்பனுடன்
நீ செய்த
காரியத்தில் எனக்கு தெளிவில்லை
எனினும்
கருப்பைக்குள் உன் ஆணாதிக்கம்
உருண்டு திரண்டிருக்கிறது
ஊரறியா ரகசியத்தை
என்னால்
ஏற்றுக்கொள்ளமுடியவில்லை

அழு அழு என்கிறது உலகம்
வயித்துப்பிள்ளைக்காரி வாய்விட்டழு
என்கிறாள் அத்தை
அவள் பெண்ணைக் காப்பாற்றிய
சாமர்த்தியத்தில் அவள் சிறு
துளி எனக்கு ஈந்தாளில்லை
இப்போது அவளின் இந்த ஈரத்தில்
எனக்கு உடன்பாடில்லை

மாப்பிள்ளையின் மரணம்
மைத்துனனின் மரணம்
என்று உறவுகள் உன் மரணத்தில்
கரைந்துக்கொண்டிருக்க
உள்ளுக்குள் எனக்கும் கரைந்து
குருதிக் கொப்பளிக்க
ஓரே நேரத்திலடைந்த
இரு விடுதலையில்
உலகம் சூட்டப்போகும்
பட்டப்பெயர்கள் பற்றிய கவலையின்றி
நான் வெடித்துச்சிரிக்கிறேன்
மன்னவா மறந்தும் நீ வந்துவிடாதே!!!

Wednesday, 20 January 2016

வாரிசு

“சார் சார்” என்று அழுதுக்கொண்டே வந்து நின்றான் ஏழாம் வகுப்பு படிக்கும் கண்ணன், தன் வகுப்பாசிரியர் சரவணனிடம்!

 “
என்னடா, ஏன் அழுறே?”

 “
சார் சார் எங்கப்பா ....”

 “
என்னடா ஆச்சு உங்கப்பாவுக்கு ....”

 “
சார் சார் எங்கப்பாவை வர்ற சனிக்கிழமை நடக்கப் போற பேரணியிலே தீ வெச்சுக் கொளுத்த போறாங்களாம் சார் ....”என்று அழுதான் கண்ணன்

 “
யாருடா என்ன சொல்றே?” என்ற சரவணனிடம், எதிர்க்கட்சியில் அதிதீவிர விசுவாசியாய் இருக்கும் தன் தகப்பனை அக்கட்சியின் உள்ளூர் கவுன்சிலர் மாரப்பன் தன் சொந்தப்  பகைக்காகத் தீர்க்கப் போவதாகவும், அதையே தீக்குளிப்பாய் மாற்றிக் கட்சியின் லாபத்திற்கு மாற்றிக் கொள்ளலாம் என்று தலைவர் என்றும் இருவரும் பேசிக்கொண்டதை அப்பாவை அழைக்கக் கட்சி அலுவலகத்திற்குச் சென்ற போது எதேச்சையாய் கேட்க நேர்ந்ததைச் சொல்லிவிட்டு

 “
சார் சார் எங்கப்பாகிட்டே சொன்னா, என் தலைவனைப் பத்தியா சொல்றே அப்படின்னு என்னையே திட்டிட்டுப் போய்ட்டார் சார் ...சார் தயவு செஞ்சு எங்கப்பாவை காப்பாத்துங்க சார்”, என்ற கண்ணனிடம், அதற்கு ஒரு முடிவு கட்டுவதாய்ச் சொல்லிவிட்டு, பள்ளியில் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றான் சரவணன்

 
கடந்த சில வருடங்களாக வந்த செய்திகளைத் தான் திரட்டிய தகவல்களை, ஆதாரங்களை எடுத்துக் கொண்டு ஆளுங்கட்சியின் ஒரு முக்கியப் பிரமுகரிடம், ஏற்கனவே பெற்ற அனுமதியின் பேரில் நேரில் சென்றான்

 “
என்னப்பா சரவணா என்ன விஷயம், நீ நம்ம சாதிக்காரப்  பயல இருக்கறதுனாலத்தான் தலைவர் பார்க்க அனுமதிக் கொடுத்திருக்கார், ஏன்  எங்ககிட்டேலாம் சொல்ல மாட்டியா”, என்று எரிச்சலை மறைத்துக்கொண்டு வரவேற்ற பி வுக்குப் புன்னகையைப் பதிலாக்கி , உள்ளே சென்றான் சரவணன்

 “
வாப்பா சரவணா , என்ன சொல்லு” , அமர்த்தலாகக் கேட்ட பிரமுகர் வேலப்பனிடம்....

 “
தலைவரே, இதைப் படிச்சுப் பாருங்கஎன்று ஒரு சில நாளிதழ்களையும் தன் குறிபேட்டையும் தந்தான்

“எங்கே கொடு”, என்று படிக்க ஆரம்பித்தார் வேலப்பன்........முழுதாய் பத்து நிமிடம் கரைந்தப்பின்
 “
அடப்பாவி , எதிர்கட்சியா இருக்கும்போதே  இவ்வளவு தில்லுமுல்லா?!” என்று வேலப்பன் கோபப்பட ....

 “
தலைவரே, அது மட்டுமில்ல அவரோட ஆளையே அவங்க வர சனிக்கிழமை, தீர்த்துக் கட்ட போறாத பேச்சு ...”

இரு இப்பவே அந்தப் பயலை பயங்காட்டி வைப்போம்” என்ற வேலப்பன்,
 
போனை எடுத்து,

"
என்னையா உங்க கட்சி பண்ற கட்டப்பஞ்சாயத்து எல்லாம் இப்போ என் டேபில் மேல இருக்கு, இதை அப்படியே தலைவரோட பார்வைக்குக் கொண்டு போன என்ன ஆகும் தெரியுமா ?"

 
அந்தப் பக்கம் எதிர்கட்சி "யோவ் வேலப்பா, உன் தலைவரே சும்மா இருக்கும்போது நீ ஏன் துள்ளுறே? ஆலங்கோட்டையிலே பாலம் இடிஞ்சு வுழுந்துதே, அதுக்குச் சிமெண்ட் சப்ளை உம்ம மருமவந்தானே?, என்னையா, சத்தத்தையே காணோம்? ஸ்கூல் சுவர் இடிஞ்சு விழுந்து பத்துப் புள்ளைங்க போச்சுதே, அது உன் மவனோட காண்ட்ராக்ட் தானே ...எங்களுக்கும் டேபிள் இருக்குயா....."

இந்தப்பக்கம் ஏசி யிலும் வியர்த்தது வேலப்பனுக்கு.....கைபேசியை மியுட் செய்துவிட்டு "இந்தாச் சரவணா கொஞ்சம் வெளியில் இரு, இந்தப் பயலை கொஞ்சம் மிரட்ட வேண்டியிருக்கு, உனக்கு எதுக்கு இதெல்லாம் .... ?"

 
சரவணன் வெளியில் சென்றான்

கைபேசியைப் பவ்வியமாய் எடுத்த வேலப்பன்,
"ஏன்யா செய்யுறது சாட்சி வெச்சுகிட்டா செய்வே? அதுவும் உன் கட்சி ஆளையே போட போறியாமே? என்னையா இப்போ நீ ஊமையாயிட்டியா?" என்று கொஞ்சம் நிமிர்ந்தார் வேலப்பன்

"
யோவ், நான் எதுக்கு ஊமையாகுறேன், அதுக்குள்ள உனக்கெப்படி தெரிஞ்சதுன்னு யோசிக்கிறேன் .... "

"
நம்ம சாதிக்கார பையன் நம்ம ஸ்கூலில் தான் வேலை பாக்குறான், என்ன, நான் கேள்விபட்டது உண்மையா ?"

"
அட ஆமாம்யா, நம்ம கவுன்சிலர் நாச்சிமுத்துக்கும் அவனுக்கும் பகை, கழுத சும்மா ஏன் சாவனும், அவன் போட்டுத்தள்ளியே ஆவனும்னு துடிக்குறான், சரி அப்படியே நம்ம கட்சியை வளர்க்கலாம்ன்னு முடிவு பண்ணேன் ....சரி நீ என்ன பண்றே, உன்னோட ஆளு சரவணனை அங்கேயே புடிச்சு வை ...
நான் யாரை தீக்குளிக்க வைக்கப் போறேனோ  அவனை அனுப்பியே அந்தச் சரவணனை முடிச்சுடுறேன் ...." என்று அந்தப் பக்கம் எதிர்கட்சி சொல்ல

"
யோவ் என்னையா சொல்றே? நான் ஆளுங்கட்சியில் இருக்கேன், அதுவும் என் சாதிக்கார பயலையெ போடுவேன்னு சொல்றே .... ?"

"
யோவ் வேலப்பா, உன் டேபில இருக்கிறது எல்லாம் பிசாத்து, நம்ம டேபில இருக்கிறது வெயிட்டு, அது என்னையா உனக்குச் சாதிப்பாசம்? அதெல்லாம் நீயும் நானும் இந்தப் பயலுகளை ஓட்டவைக்கறதுக்கு நமக்காக உயிர விடுறதுக்கும்  சொல்றது, நமக்கு ஒன்னுனா அவனுகளைப் போட்டுத்தள்ளி போயிட்டே இருக்கணும் .... "

கொஞ்சம் நேரம் யோசித்த வேலப்பன், "உன் ஆளை வெச்சு என் ஆளை எப்படியா முடிக்கப் போறே ?"

"
வேலப்பா, இந்தப் பய என்மேல ஊசுரையே வெச்சிருக்கான் , நானே சாவுடான்னு சொன்னாலும் செத்துடுவான், இருந்தாலும் எதிலேயும் நமக்கு ஒரு ஆதாயம் வேணுமில்ல? அந்தச் சரவணன் என்னைக் கொல்ல முயற்சி செய்யுறான்னு சொல்லி, இவனை அனுப்பி அவனை அடிச்சு ட்ராக்கில் தூக்கி போட்டுட சொல்றேன், அப்புறம் அவனை நான் பேரணியில் முடிச்சுக்குறேன்....நீ ஒரு பொண்ணை ரெடி பண்ணி அதே ட்ராக்கில் போட்டுடு, இந்தப் பயலும் அந்தப் பொண்ணும் காதலோ கள்ளக் காதலோ ஏதோ ஒரு எழவில் செத்துப் போய்ட்டாங்கன்னு உன் ஆளுகளை வெச்சுக் கதையை முடி , முடிச்சுவைய்யு! பொண்ணுக்கு எங்கே போறதுன்னு கேக்காதே, உன் மவன்கிட்டே சொல்லு"

 "
யோவ் இருய்யா நீ பாட்டுக்கு பேசிட்டே போறே? என் ஆளு உன்னைபத்தி ஆதாரங்களை வெச்சிருக்கான் அவனைப் போடப்போறே சரி, உன் ஆளை விட்டா உனக்கு நம்பிக்கையான ஆளு கிடைப்பானா, கொஞ்சம் யோசி", என்ற வேலப்பனை இடைமறித்துச் சொன்னான் எதிர்கட்சி பூமிநாதன்

"
யோவ் இவன் போனா என்ன? இவன் புள்ளை இருக்கான், என்னமோ படிக்கிறான், அப்பன் போனா புள்ளைய புடிச்சுபோட்டா போதும், வெட்டுடான்னு நாம சொன்னா வெட்ட வேண்டிய இந்தப் பயலுகளுக்குப் படிப்பெதுக்கு ...அதெல்லாம் நான் பாத்துக்குறேன் நீ ஜோலியை முடி" என்று சொன்ன பூமிநாதன்

"
யோவ் பி. யே மாடசாமியை கூப்பிடு", என்ற சொல்ல

"
ஐயா!" என்று பவ்வியமாக வந்து நின்றான் கந்தனின் தகப்பன் மாடசாமி, அங்கே ஒரு நாடகம் கச்சிதமாய் அரங்கேறத் தொடங்கியது ........

வீட்டில் பாடப்  புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தான் கண்ணன், விதியும் அரசியல் சதியும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது! 

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...