Showing posts with label Politics!. Show all posts
Showing posts with label Politics!. Show all posts

Monday, 20 February 2023

குருட்டுப்பூனைகள்

 

அவர்கள் வியாபாரம் செய்ய வந்தார்கள்
இவர்கள் முழுக்கவே வியாபாரிகள்
 
அவர்கள் நம் நாட்டைச் சுரண்டினார்கள்
இவர்களும் பொதுத்துறைகளை விற்று
தனியார் கடன்களை தள்ளுபடி செய்து
அதையே செய்துக்கொண்டிருக்கிறார்கள்
 
அவர்கள் பிரிவினைகளை வளர்த்தார்கள்
இவர்கள் பிரிவினைகளில்தான் செழிக்கிறார்கள்
அவர்கள் கொத்துக்கொத்தாக 
மக்களை கொன்றார்கள்
இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக
உதவாத திட்டங்களின் மூலம்
பிரிவினை அரசியல் மூலம் 
மக்களை கொல்கிறார்கள்
 
அவர்கள் வரலாற்றில் கொஞ்சமே கொஞ்சம்
அறிவுடன் செயல்பட்டார்கள்
இவர்கள் மறைகழண்ட அறிவோடு 
நிறைய ஆணவத்தோடு 
நாளும் வரலாற்றை திரிக்கிறார்கள்
 
அவர்களின் அரசி பெண்
பெண்ணுரிமை பேணினார்கள்
இவர்கள் தலைமை நடிகர்கள்
நாளும் வன்கொடுமைகளை மறைத்து
பாலியல் குற்றவாளிகளுக்கு துணை நிற்கிறார்கள்
 
அவர்கள் சுயநலத்துக்கேனும் நாட்டின்
கட்டமைப்பை பலப்படுத்தினார்கள்
இவர்கள் வியாபாரிகளின் சுயநலத்துக்காக
இருக்கும் வளங்களை 
அழித்துக்கொண்டிருக்கிறார்கள்
 
அவர்களிடமும்
இந்த நாட்டின் எட்டப்பன்கள் கட்சி மாறி
மதம் மாறி கொள்கை மாறி
பிறர் ரத்தத்தை உறிஞ்சினார்கள்
இவர்களிடமும் மாநிலத்துக்கு மாநிலம்
எட்டப்பன்கள் பதவிக்காக பணத்திற்காக
பல்லிளிக்கிறார்கள் 
 
சொந்த மண்ணின் மொழி, உரிமை
அழிக்கிறார்கள்
அவர்கள் மொத்தமாய் சுரண்டி 
ஓடிவிட்டார்கள்
இவர்கள் மொத்தமாய் சுருட்டிக்கொண்டு
நம்மை தேச விரோதி என்று விரட்டுகிறார்கள்
 
அவர்களும் கொள்ளையர்கள்தான்
இவர்களும் கொடூரர்கள்தான்
அவர்களிடமிருந்து விடுபட 200 ஆண்டுகளானது
இவர்களிடமிருந்து விடுபட 
சூடும் சுரணையும் மிகும் ஆண்டு வரவேண்டும்
 
எதை வேண்டுமானாலும் செய்
எனக்கு பதவியைக் கொடு என்று அடிபணிகிறார்கள்
சாதித்தலைமைகள் மதப்போர்வையில்
இவர்களை நம்பும் மக்களோ
உரிமைகளை பறிகொடுத்து ஒரு கேடுகெட்ட வரலாற்றை
வருங்காலத்திற்காக விட்டு வைக்கிறார்கள்
அவர்களும் இவர்களும் யாரென்று உலகுக்குத் தெரியும்
ஆனாலும் குருட்டுப்பூனைகளாய் மக்கள்
விடியல் வரும் காலமே உண்மையானச் சுதந்திரம்!

Thursday, 16 April 2020

காட்டுத்தர்பார்

#காட்டுத்தர்பார்
குழந்தைகள் பள்ளி செல்லும் நேரத்தில் ஆளும் கட்சி அதன் கூட்டணி கட்சிகளும் லாயிட்ஸ் ரோடில் அணிவகுத்திருக்கிறார்கள், ஆளுக்கு ஒரு கொடியை வண்டியில் கட்டிக்கொண்டு வெள்ளை சட்டையில் இருசக்கர வாகன ஓட்டிகள் யார் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்று வண்டியை ஆங்காங்கே நிறுத்தி வைக்க, ஓரே ஒரு காவல்துறை அதிகாரி போக்குவரத்தை சீர்செய்ய, நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களை தானே சிரமப்பட்டு தள்ளி வைக்கிறார், பள்ளிக்கு தாமதமாகும் பதட்டம் வண்டிகளின் ஹாரன் ஒலியில் காதை அறைகிறது!
இங்கே இருக்கும் பிரச்சனை ஒன்றுதான், கட்சி கொடியை கட்டிக்கொண்டால் படித்தவன், படிக்காதவன், ரவுடி, இத்யாதி இத்யாதி என எல்லோருக்கும் ஒரு திமிர்த்தனமும் அலட்சியமும் வந்துவிடுகிறது, ஒரு சாதாரண கட்சியின் அடிமட்ட தொண்டனை கூட கேள்வி கேட்கவோ அதட்டவோ திராணியில்லாமல் நம் காவல்துறை இருக்கிறது, அடிமட்ட தொண்டர்களே காவல்துறைக்கு மரியாதை தராத போது இந்த அமைச்சர்களிடம் இந்த அதிகாரிகள் என்ன பாடுபடுவார்கள்?
குறைந்தபட்சம் மக்களுக்கு இடையூறில்லாமல் வாகனங்களை நிறுத்தக்கூட தெரியாத இந்த அரசுதானா மீத்தேன், அணுவுலைகளின் ஆபத்தையுணர்ந்து மக்களின் பாதுகாப்புக்கு மெனக்கெடப் போகிறது? தமிழகத்திற்கு விடிவு காலம் எப்போது?

Wednesday, 15 April 2020

தேர்தல்_வியாபாரமும்_அடியாட்கள்_வளர்க்கும்_தேசமும்!

#தேர்தல்_வியாபாரமும்_அடியாட்கள்_வளர்க்கும்_தேசமும்!
“2000 தருகிறோம்
6000 தருகிறோம்”
கட்சிகள் வண்ணமயமான அறிக்கைகள் விடுகிறார்கள், அடேங்கப்பா, மக்களின் வரிப்பணத்தை வாய்க்கூசாமல் ஏலம் விடுவதற்கு பதில், குறைந்த பட்சம் “நாடு முழுக்க கல்வியை இலவசமாக்குவோம்” என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்? செய்ய மாட்டார்கள், ஏனென்றால்;

1. ஓரே கல்வி அதுவும் இலவசம் என்றால் “வர்ணாசிரம” தர்மம் அதிர்ந்து விடும்

2. எல்லோரும் படித்துவிட்டால், அடிதடி செய்ய, தீக்குளித்துச்சாக அடியாட்கள், அடிமைகள் கிடைக்க மாட்டார்கள்

3. கல்விக்கொள்ளைக் கும்பல் அனுமதி தராது

4. அரசியல்வாதிகளின் வாரிசுகள் நடத்தும் தனியார் பள்ளிகள் கல்லூரிகள் அதிகம், வருமானம் பாதிக்கும்

5. “நான் ஏழைத்தாயின் மகன்” என்று மேடையில் விடும் கண்ணீர் நாடகங்களை நம்ப ஆட்கள் இல்லாமல் போய் விடுவார்கள்

6. பள்ளிகளில் கல்லூரிகளில் புதிய மாணவர்கள் சேர்க்கை தொடங்கி, புத்தக விற்பனைவரை, தாளாளர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அடிக்கும் கொள்ளைகள் நின்றுவிடும்

7. சாராயக்கடைகளில் வியாபாரம் குறைந்துவிடும்
இதெல்லாம் நடந்தால், கட்சி நடத்த பணம் இருக்காது, இதுநாள் வரைக்கும் பொதுச்சேவைக்காக (?!) பாடுபடும் அரசியல்வாதிகள் அரசியலை விட்டுவிட்டு வேறு தொழில் பார்க்க போய்விடுவார்கள்!
யோசித்துப்பாருங்கள், இன்றைய இந்தியாவில், லஞ்சம் லாவண்யம், நேர்மையற்ற அமைப்பு, தொடர் குற்றங்கள் என்று எத்தனையோ பலகீனங்களுக்கு காரணங்கள் பலவாக இருந்தாலும், 72 ஆண்டு காலங்கள் ஆகியும் இன்னமும் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு சாத்தியமாகவில்லை, கல்வியைக்கூட எட்டாக்கனியாக ஆக்கிவைப்பதே ஆட்சியாளர்களின் சாதனை!

சாதாரண ரவுடியாகவோ, வியாபாரியாகவோ வலம் வரும் மனிதர்கள் ஆட்சிக்கு வந்ததும் தலைநகரில் சொத்துகளை குவிக்கிறார்கள், உயர்ரக கார்களில் வலம் வருகிறார்கள், வாரிசுகள் உறவினர்கள் எல்லோரும் எளிதாக தொழிலதிபர்கள் ஆகிறார்கள், ஒருபக்கம் மக்களிடம் வரிகளாக சுரண்டி, மறுபக்கம் மலிவான இலவசங்களை வீசி, மக்களை மந்தையாடுகளாகவே வைத்திருக்கிறார்கள், இவர்களிடம் கல்விப்புரட்சியை எப்படி எதிர்ப்பார்க்க முடியும்? பாலியல் வன்கொடுமைகளின் புரட்சியை வேண்டுமென்றால் எதிர்ப்பார்க்கலாம்!

தேர்தல்

நேற்று வரை ச்சீய் தமிழ் என்று முகஞ்சுளித்து, சாலையில் மைல் கற்களில் தமிழ் அழித்து இந்தியைத்திணித்தவர்கள், தமிழ்நாடு அரசுப்பணிகளில் வடநாட்டை நிரப்பியவர்கள், இன்று மேடைகளில் “வண்க்கம், என்கு தமில் மக்கல புடிக்கும்” என்கிறார்கள், பதவிக்காக ஈயென்று அத்தனைப்பற்களையும் காட்டிக்கொண்டு பக்கத்தில் நிற்கிறார்கள் தமிழர்கள்!
#தேர்தல்

தேர்தல்_என்பது_எதுவரை?!

அந்தப்பெண் மாலையில் வேலை முடித்து தன் இருசக்கர வாகனத்தில் அண்ணா மேம்பாலத்தின் மேலேறி, அமெரிக்க தூதரகத்தை பார்த்தப்படி நிற்கும் காவலர்களை தாண்டி நுங்கம்பாக்கம் செல்ல இடதுபுறம் திரும்புகிறார், பின்னேயே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர் தோள்பட்டையைப் பற்றி இழுத்து கழுத்தில் இருந்த 8 பவுன் தாலியையும், இன்னுமொரு சங்கிலியையும் பறித்துச்செல்கின்றனர், காவல்துறை அமெரிக்க தூதரகத்தை பார்த்தப்படியே நிற்கிறது, காட்சி மாறி காவல்துறை புகார், நீதிமன்றம் என்று நகர்கிறது, தோழியின் செயினை வாங்கி, திருடனைப் பிடித்து கிடைத்துவிட்டதாக நீதிமன்றத்தில் காட்டி, வழக்கை முடித்து, காவல்துறை வேறு ஒரு வழக்கில் மீட்டெடுத்தாகச் சொல்லி 4 பவுன் கல் வைத்த சிறு சிறு நகைகளைக் கொடுத்து வழக்கு முடிந்ததாக ஆவணப்படுத்துகிறார்கள், இதில். வழக்கின் செலவாக, தவிர்க்க முடியாத “லஞ்ச” வகையில் 50 ஆயிரத்துக்கும் மேல் செலவாக, கிட்டதட்ட 11 பவுன் இழப்பிற்கு கிடைத்தது 3.5 பவுன் நகை, அதுவும் 50 ஆயிரம் இழப்பு, கழுத்தில் காயம், மனவுலைச்சல்!
இன்னொரு பக்கம் பிரபல ஐடி அலுவலங்கள் நிறைந்த சாலை, பட்டப்பகலில் பைக்கில் இருவர் நடத்திக்கொண்டிருந்த பெண்ணிடம் கைபேசியை பறித்துச்செல்கின்றனர், சிசிடிவி கேமரா இருந்தும் 20 ஆயிர பேரத்தில் வழக்குப்பதிய காவல்துறை மறுக்கிறது, உயர்மட்ட கவனத்துக்கு எடுத்துச்செல்ல, அது மறுபடியும் லஞ்சம் கேட்ட அதிகாரிக்கே விசாரணைக்கு அனுப்பப்படுகிறது!
இன்னொரு புறம், அரசாங்க அதிகாரிகளால் சான்றிதழ் தரப்பட்ட கட்டிடம் இடிந்து விழுகிறது, கடன் வாங்கியர்கள் தாள முடியாத சுமையில் சிக்குகிறார்கள், அதிகாரிகள் வழக்கம் போல உலா வருகிறார்கள், இப்படி ஒவ்வொரு துறையிலும் நடக்கும் நிகழ்வுகள் அத்தனையும் கற்பனை என்றே வைத்துக்கொள்ளுங்கள், நாள்தோறும் இந்தக்கற்பனை காட்சிகள் நிதர்சனத்தில் தமிழ்நாடு முழுக்க பரவலாக, குறிப்பாக சென்னையில் அதிகமாக நிகழ்கிறதா இல்லையா? எல்லா வழக்குகளும் தீர்க்கப்பட்டால் குற்றங்கள் நாள்தோறும் நிகழ்கிறதே ஏன்?

ஊழல்களை விட்டுவிடுவோம், வழிப்பறி? ஒவ்வொரு வழிப்பறியிலும் திருடன் பிடிபட்டால் திருட்டு ஏன் தொடர்கிறது? திருடினால் பிடிபடுவோம் என்று தெரிந்தும் ஏன் திருடுகிறார்கள்? உண்மையில் திருடர்கள் பெரும்பாலும் பிடிபடுவதேயில்லை, மாட்டிக்கொண்டால் ஒரு திருடன் பல வழக்கு, மாட்டாத வரை (சம்பந்தபட்டவர்களின் கருணை இருக்கும்வரை) பல திருட்டுகள், அதே திருடர்கள் இல்லையா?

சாதாரண வழிப்பறிக்கொள்ளையின் பின்னே இருக்கும் அரசியலே மோசமாக கட்டுகட்டான பணத்துடன் மறைந்த கண்டெயினர் லாரிகள் வரை தொடர்ந்தது! இப்படி சிறிதும் பெரிதுமாய் எத்தனை நடந்தாலும் மக்கள் எதையும் கண்டுக்கொள்ள மாட்டார்கள் என்ற துணிச்சல்தானே வளர்ந்து இன்று எத்தனை எளிதாக இராணுவத்தின் இழப்பை தேர்தல் களமாக மாற்றிக்கொண்டிருக்கிறது?

ஒவ்வொரு அடியிலும் லஞ்சமும் ஊழலும் கரையானைப்போல தேசத்தை அரித்துக்கொண்டிருக்கும்போது, நம் வீட்டின் கதவுகள் பத்திரமாய் இருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்! ஒரு பன்முகம் கொண்ட தேசத்தில் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், காட்டை அழித்து சிலை எழுப்பி, ஒரு மதத்தை வியாபார பொருளாக்கி மதக்கூட்டமென்ற பெயரில் நடத்தும் சாமியாரின் நிகழ்ச்சிகளுக்குச்செல்கின்றனர், இதில் மக்கள் யாரிடம் போய் நீதி கேட்பார்கள்?
தேர்தல் வைத்து, ஆட்சி அதிகாரம் கொடுத்தும், நாட்டை பொதுநல வழக்குகளே காப்பாற்றுகிறது, பொதுநல வழக்குகளில் தீர்ப்பாகும் போது, மக்களின் நலனில் மெத்தனமாய் இருந்த அதிகாரிகள் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் தானே? யாரைப்பற்றி புகார் சொல்கிறோமோ அவர்களிடமே மீண்டும் செல்லவேண்டும், யாரை ஊழல் செய்தவர்கள் என்று ஒருமுறை ஒதுக்குகிறோமோ அவரையே பித்தனுக்கு எத்தன் மேல் என்று அடுத்தமுறை வாக்களித்து அரியணையில் அமர வைக்கிறோம், “கழுதைக்கெட்டால் குட்டிச்சுவர்” என்ற ரீதியில் மீண்டும் மீண்டும் அவர்களே, இதில். அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை ஊழலில் திளைக்கும் அதிகார வரம்பு அப்படியே இருக்கும், இதில் மாற்றம் என்பது எப்படி வரும், ஏமாற்றத்தைத் தவிர?

கல்வி தொடங்கி சுடுகாடு வரை ஊழல், வழிப்பறி திருட்டுத்தொடங்கி அரசியல் வரை திருடர்கள், இதில் இப்போதைய தேர்தல் மாற்றம் கூட யார் குறைவாய் ஊழல் செய்வார்கள் என்பதில்தானே தவிர நேர்மையான ஒரு ஆட்சிக்காக அல்ல!

எத்தனைக் கொள்ளையடித்தாலும் அதை பரிபூரணமாய் அனுபவித்து சாகும்போதும் அதை எடுத்துச்சென்றவர் யாருமில்லை, எத்தனைதான் அன்பைப்பற்றி பேசினாலும், பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு செத்தப்பிறகு ஊர்மெச்ச படையலிடும் பிள்ளைகளைப்போல, இயற்கை, “மரணம் நிதர்சனம், அதுவும் உங்களைப்போன்றவர்களுக்கு (ஊழல்வாதிகளுக்கு) கொடூர மரணம் நிச்சயம்” என்று எத்தனை முறை நிரூபித்தாலும் கொள்ளைகள் தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கின்றன!
ஏதோ ஒரு தலைமுறை மாற்றத்தை முன்னெடுக்கும் என்று நம்புவோம், அதுவரை வரும் தேர்தலில் மாற்றமா ஏமாற்றமா என்பதை ஆட்சி மாற்றமே உணர்த்தும்!
#தேர்தல்_என்பது_எதுவரை?!

நவீன_மன்னராட்சி

மொத்த தமிழகத்திலும் சாராயம் ஓடும்
விவசாயம் அழித்து சாலைகள் போடும்
சாலைகள் முழுக்க சுங்கச்சாவடிகள் அமைக்கும்
குண்டும் குழியுமான சாலைகளுக்கும் காசு பறிக்கும்

பள்ளிகள் மூடி கல்விக்கனவு குலைத்துவிடும்
நீட் நுழைத்து ஏழைகளை ஏட்டுச்சுரைக்காயுடன்
தள்ளி வைக்கும்
மீத்தேன் உறிஞ்ச நீர் வற்றும்
காப்பர் உருவாக்கி உயிர் உறிஞ்சும்

நீயூட்ரினோ என்று மலைகள் சுரண்டும்
சாமியார்கள் வளத்தில் காடுகள் அழியும்
காடுகள் அழிந்து யானைகள் களவுப்போகும்
யானைகள் துரத்தி சிலைகள் எழும்

புகையிலையிலும் ஊழல் செய்யும்
தெர்மாக்கோலிலும் அணைகள் கட்டும்
ஆட்சியைப்பிடிக்க பேரம் பேசும்
பணமதிப்பிழப்பென்று சில்லறைகள் தேடும்

கேள்வியென்று வந்துவிட்டால் ஊரைச்சுற்றும்
தேர்தல் மேடைகளில் கண்ணீர் விடும்
ஊழல்வாதிகள் ஒன்றுசேர உளவுத்துறை உதவும்
அவ்வப்போது மிரட்டி வைக்க வருமானவரித்துறை வரும்

துறைகளுக்கொரு அமைச்சர்கள் பெயருக்கு மட்டும்
கரன்சி வரும் வழித்தவிர வேறில்லை நாட்டம்
வீதிக்கொரு சாதிக்கூட்டம் சமூகநீதி பேசும்
எதிர்ப்பவன் சாதியறிந்து அரிவாளில் வெட்டும்

சாமியார்கள் தயவில் கோடிகள் புழங்கும்
கேடிகளின் வன்முறையில் குரல்வளை நசுங்கும்
சில்லறைக்கடன்களுக்கு கோவணம் பறிபோகும்
வரைமுறையற்ற கடன் கொள்ளைகளுக்கு தள்ளுபடி கருணையாகும்

திரையில் நடித்தவர்கள் மேடையில் நடிப்பது எதார்த்தம்
ரசிகர்கள் தொண்டர்கள் என்று விழும் விட்டில்பூச்சிகளும் அதிகம்
போராளிகள் மாயமாவது மறந்துவிடும் நாடகம்
வாக்குறுதிகளை மறந்துவிடுவது அரசியலுக்கான நரித்தந்திரம்

திருடர்களின் வகைக்கொரு கூட்டணி கொண்டாட்டம்,
மக்கள் மட்டுமே எதிரிகள் என்பது வேடிக்கைவிநோதம்
வேடிக்கைப்பார்ப்பது மக்களின இயலாமைச்சோகம
இதில் தேர்தலெல்லாம் மீளமுடியா உரிமைகளின் ஏலம்!
#நவீன_மன்னராட்சி

கல்வி

இந்தக் கல்வியையும், மருத்துவத்தையும் இலவசம் என்று அறிவித்துவிட்டால் போதும், இந்தச் சாதிய, இடஒதுக்கீடு, ஏழை பணக்காரன் பிரச்சனை பாதியளவு தீர்ந்துவிடும்! யோசித்துப்பாருங்கள், அடிப்படையான இந்த இரு தேவைகளையும் தீர்த்துவிட்டால் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பாதி ஏழைகளாகிவிடுவார்கள், மதவாத கட்சிகளுக்கு அரசியல் செய்யும் வாய்ப்பும் கொஞ்சம் குறைந்துவிடும்! முடியாது என்று நினைத்தால், கோடிகளை மிஞ்சும் வாரா கடன்கள் இந்தியாவில் எவ்வளவு என்று பாருங்கள், ஓடிப்போகும் முதலாளிகளுக்கும், ஊரைச்சுற்றும் அரசியல்வாதிகளுக்கும் ஆகும் விரயங்களில் இந்த இலவசக்கல்வியும், மருத்துவமும் 72 ஆண்டுகாலச் சுதந்திரத்தில் சாத்தியமாகாதா?
700 கோடியில் ஒரு திருமணம் நடக்கிறது, சில நூறுகள் இல்லாமல் தன் மனைவியின் பிணத்தை தோளில் சுமக்கிறான் ஒருவன், 4000 கோடியில் ஒருவர் சுற்றுலா செல்கிறார், 10 லட்சப் பாக்கிக்காக சில நூறு குழந்தைகளை ஒர் அரசு சாகவிடுகிறது, சில ஆண்டுகால ஆட்சியில் சில நூறு பணக்காரர்கள் கோடிசுவர குபேரன்களாக, பல கோடி ஏழைகள் இன்னும் ஒரு மோசமான வறுமைநிலைக்கு தள்ளப்படுகிறார்கள், 72 ஆண்டுகால சுதந்திரத்தில் மக்களுக்கான அடிப்படைத்தேவைகள் இன்னமும் சாத்தியப்படவில்லை!
இருந்தும் என்ன இது தேர்தல் காலம், நேற்றுவரை அம்பானிகளிடத்திலும் அதானிகளிடத்திலும் மட்டுமே கைகோர்த்த ஏழைத்தாயின் புதல்வர்கள், ஆட்சிக்காக மக்களை மறந்து குளுகுளு ரிசார்ட்டில் பதுங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள், நேற்றுவரை ஒருவரையொருவர் இகழ்ந்தவர்கள், விவசாயிகளை அழித்தவர்கள், என்று எல்லோரும் தங்கள் வசதியான ரதங்களை விட்டு உங்களிடம் கையெடுத்துக்கும்பிட்டு, “தேர்தலுக்காக” மட்டும் சேவை செய்ய வருகிறார்கள், வருவதை வாங்கிப்போட்டுக்கொண்டு நாம் அரசியல் பேசுவோம் வாருங்கள்!

Thursday, 2 April 2020

பாகிஸ்தானை ஏன் எதிர்க்க_வேண்டும்?

பாகிஸ்தானை ஏன் எதிர்க்க வேண்டும்?
--------------------------------------------------------------


ஜின்னாவின் பிரிவினைக்குப்பிறகு, இந்துக்கள் கொல்லப்பட்டார்கள், தீவிரவாதிகளை வளர்த்தெடுத்தார்கள், காஷ்மீரை பலவந்தமாக ஆக்கிரமித்தார்கள், அந்த தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தி பல நூறு பேரை கொன்றுக்குவித்தார்கள், நாசகார சக்திகள், சோ எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிகள்! நிற்க!
கொஞ்சம் வரலாற்றின் உள்ளே சென்று சில முக்கிய விஷயங்களை பார்ப்போம், இங்கிலாந்தின் பிரித்தாளும் சூழ்ச்சியில் உருவானது இந்த பிரிவினை, இதில் ஜின்னா மட்டுமல்ல காந்தியின் பங்கும் இருக்கிறது, உண்மையில் முதன்முதலில் ஒன்றுபட்ட இந்தியாவில் இந்து முஸ்லிம் பேதமில்லாமல் லட்சக்கணக்கில் (ஜாலியன் வாலாபாக் உதாரணம்) கொன்று குவித்தது இங்கிலாந்து, உலகப்போரில் இந்தியா இவ்கிலாந்துக்கு துணையாக கூட்டணி சேர்ந்து அதே கொன்றுக்குவித்தலை செய்தது, ஆனால் கோடிக்கணக்கில் நம் மூதாதையர்களை இரக்கமின்றிக் கொன்று நம் வளங்களை கொள்ளையடித்து இன்றும் மிச்சமிருக்கும் பராம்பரிய மேல்தட்டு குணத்துடன் “ப்ளடி இந்தியன்” என்று நடத்தும் இங்கிலாந்தில் இந்த பெரும்பாலான டேஷ் பக்தர்களின் பிள்ளைகள் கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டியில் படித்துக்கொண்டிருப்பார்கள்!
உலகப்போரின் சமயத்தில் இருந்து இன்றுவரை இந்தியாவுக்கு நண்பனாய் ரஷ்யா நிற்க, அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பனிப்போரில், இந்தியாவுக்கு நிகராக ஒரு வலிமையை வளர்க்க, அமெரிக்க தேர்ந்தெடுத்த நாடுதான் பாகிஸ்தான், தீவிரவாதம் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு அமெரிக்காவும் ஒரு காரணம் என்பதை அவர்களே மறுக்கமாட்டார்கள், இந்த அமெரிக்காவின் சிலிக்கான் சிட்டியில் இந்த தேஷ் பக்தர்களின் பிள்ளைகள், தலைமுறைகள் பல துறைகளில் மத்திய மட்டத்தில் இருந்து மேல்பட்ட பதவிகள் வரை அமர்ந்திருக்கும், அவர்களில் பெரும்பாலானோர் சொல்லும் வார்த்தை, “ச்சே இந்தியாவா, நோ வே!” தேஷ் பக்தர்களின் வாரிசுகளைப்பற்றி மட்டும் சொல்கிறேன், மற்றவர்களை அல்ல!

அடுத்து சீனா, சீனப்பட்டாசுகள் தொடர்ந்து சீப்பு வரை வாங்குவது தேசத்துரோகம் என்று முழங்கும் பக்தர்களின் வாரிசுகள் இங்கேயும் உண்டு என்பது வேறு விஷயம், ஆனால் ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி சிலையை, தேசப்பக்தர்களின் தலைவர் “மேக் இன் இந்தியா” என்று முழங்கிவிட்டு, 3000 கோடியை மட்டும் சீனர்களுக்கு காண்ட்ராக்ட் கொடுத்து முடித்தார், வல்லபாய் பட்டேல் ஆன்மா கூட இதை ஏற்றுக்கொண்டிருக்காது! இறக்குமதியாகும் பல்வேறு பொருட்கள் சீனாவில் தான் உற்பத்தியாகிறது! அடுத்து பசு வதை என்ற பெயரில் உள்நாட்டில் மனிதர்களை கொன்றுக்குவித்து, சீனாவுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்துக்கு வந்தது, தெய்வமென கும்பிட்டுவிட்டு அதன் இறைச்சியை பதப்படுத்திய உணவுகளாக விற்பதும், காலணிகளாக மாற்றி ஏற்றுமதி செய்வதிலும் தேஷ் பக்தர்கள் உண்டு!

இதெல்லாம் சில உதாரணங்களே, வரலாற்றின் போர் பக்கங்களையும், ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொரு நாட்டிலும் நிகழும் அரசியலின் மோசமான சதிராட்டங்களை எழுதினால் இந்தக்கட்டுரை நீண்டுவிடும், ஆனால் மற்ற நாடுகளுக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம் உண்டு, அவர்கள் அரசியலையும் தேசத்தையும் குழப்பிக்கொள்வதில்லை, நாம் ஐந்து வருடமே நாட்டுக்கு ஊழியம் செய்ய தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரை, அவரின் மோசமான திட்டங்களை விமர்சனம் செய்தால் அது தேச விரோதம் என்று கூறுகிறோம், அவரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று கொதிக்கிறோம், உண்மையில் நாட்டை நேசிக்கும் ஒருவன்தானே தன் நாடு மோசமான நிலைக்கு போவதைக்கண்டுத்துடிப்பான், பதறுவான், அந்த பதற்றம் தானே “போர் வேண்டாம்” என்ற வேண்டுதலோடு, தேர்தலுக்காக எந்த நிலைக்கும் செல்லும் கீழ்த்தரமான அரசியலைச்சாடுகிறது?
அழகான இந்த நாடு, தேர்தல் சதிராட்டத்துக்காக சில முதலாளிகளின் லாபத்துக்காக யுத்த பூமியாவதை எந்த உண்மையான குடிமகனும் விரும்பமாட்டான், இராணுவத்தில் இருப்பவர்களின் உயிர்களும் மனித உயிர்கள்தான், அவர்கள் நாட்டைக்காப்பதற்காகவும், நீங்கள் மிக்சர் தின்றுக்கொண்டு, “போர் என்றால்...ப்ளா ப்ளா” என்று எழுதும் சுதந்திரத்திற்காகவும் இரவு பகல் பாராமல் உண்மையான தன் தேசப்பற்றை எல்லையில் உயிரைக்கொடுத்து நிரூபித்து இருக்கிறார்கள், உங்கள் மதவாத கட்சிகள் இந்து மதத்தின் வேறு எந்த மதத்தின் பிரதிநிதிகள் அல்ல, இந்தியாவைத் துன்பப்படுத்திய பல நாடுகளில் உங்கள் வளம் கொழிக்க உறவுக்கொண்டு, அடுத்தவரின் தேசப்பற்றைப் பேச உங்களுக்கு எந்தத்தகுதியும் இல்லை!

இந்தியா எல்லா வளமும் நிறைந்த ஒரு பன்முக கலாச்சார நாடு, பாகிஸ்தான் நம் அண்டை நாடு, தீவிரவாதத்தை ஒழித்து அவர்களும் நிம்மதியான வாழ்க்கையைப்பெறட்டும்!
வாழ்க பாரதம்!

Friday, 20 December 2019

நவீன_மன்னராட்சி

மொத்த தமிழகத்திலும் சாராயம் ஓடும்
விவசாயம் அழித்து சாலைகள் போடும்
சாலைகள் முழுக்க சுங்கச்சாவடிகள் அமைக்கும்
குண்டும் குழியுமான சாலைகளுக்கும் காசு பறிக்கும்
பள்ளிகள் மூடி கல்விக்கனவு குலைத்துவிடும்
நீட் நுழைத்து ஏழைகளை ஏட்டுச்சுரைக்காயுடன்
தள்ளி வைக்கும்
மீத்தேன் உறிஞ்ச நீர் வற்றும்
காப்பர் உருவாக்கி உயிர் உறிஞ்சும்
நீயூட்ரினோ என்று மலைகள் சுரண்டும்
சாமியார்கள் வளத்தில் காடுகள் அழியும்
காடுகள் அழிந்து யானைகள் களவுப்போகும்
யானைகள் துரத்தி சிலைகள் எழும்
புகையிலையிலும் ஊழல் செய்யும்
தெர்மாக்கோலிலும் அணைகள் கட்டும்
ஆட்சியைப்பிடிக்க பேரம் பேசும்
பணமதிப்பிழப்பென்று சில்லறைகள் தேடும்
கேள்வியென்று வந்துவிட்டால் ஊரைச்சுற்றும்
தேர்தல் மேடைகளில் கண்ணீர் விடும்
ஊழல்வாதிகள் ஒன்றுசேர உளவுத்துறை உதவும்
அவ்வப்போது மிரட்டி வைக்க வருமானவரித்துறை வரும்
துறைகளுக்கொரு அமைச்சர்கள் பெயருக்கு மட்டும்
கரன்சி வரும் வழித்தவிர வேறில்லை நாட்டம்
வீதிக்கொரு சாதிக்கூட்டம் சமூகநீதி பேசும்
எதிர்ப்பவன் சாதியறிந்து அரிவாளில் வெட்டும்
சாமியார்கள் தயவில் கோடிகள் புழங்கும்
கேடிகளின் வன்முறையில் குரல்வளை நசுங்கும்
சில்லறைக்கடன்களுக்கு கோவணம் பறிபோகும்
வரைமுறையற்ற கடன் கொள்ளைகளுக்கு தள்ளுபடி கருணையாகும்
திரையில் நடித்தவர்கள் மேடையில் நடிப்பது எதார்த்தம்
ரசிகர்கள் தொண்டர்கள் என்று விழும் விட்டில்பூச்சிகளும் அதிகம்
போராளிகள் மாயமாவது மறந்துவிடும் நாடகம்
வாக்குறுதிகளை மறந்துவிடுவது அரசியலுக்கான நரித்தந்திரம்
திருடர்களின் வகைக்கொரு கூட்டணி கொண்டாட்டம்,
மக்கள் மட்டுமே எதிரிகள் என்பது வேடிக்கைவிநோதம்
வேடிக்கைப்பார்ப்பது மக்களின இயலாமைச்சோகம
இதில் தேர்தலெல்லாம் மீளமுடியா உரிமைகளின் ஏலம்!

#நவீன_மன்னராட்சி

ஜீன் மாற்ற சதி

குடிசையில் தொடங்கி மாளிகை
சைக்கிளில் இருந்து விமானம்
மாருதி தாண்டி லம்போர்கினி
எஸ்பிஐ யில் தொடங்கி சுவிஸ்
பாம்பே ஸ்டாக் கடந்து பனாமா பேப்பர்
வயக்காடு விரிந்து பண்ணை எஸ்டேட்டுகள்
மரணப்புள்ளி வரை ஆசை தீர்வதில்லை
அரசியல்வாதிகளுக்கு!

நிச்சயம் அந்நிய நாட்டின்
ஜீன் மாற்ற சதிதான் - இந்த
இந்திய அரசியல் ஏலியன்களும்
இலவசத்துக்காக மட்டும்
ஒன்றுகூடும் மக்களும்!

Thursday, 16 May 2019

கார்ப்பரேட்டுகள் ராஜ்ஜியம்

முதலில் கிழக்கிந்திய கம்பெனி
பின் பிரிட்டிஷ் ராஜ்ஜியம்
சமீபத்தில் மோடி அரசாங்கம்
இப்போதும் எப்போதும் குஜராத்
கார்ப்பரேட்டுகள் ராஜ்ஜியம்
1947 ஆகஸ்ட் 15 இல் கிடைத்தது
2014 மே 26 இல் தொலைந்து போனது
மதியாத சுதந்திரம்!


No photo description available.

Saturday, 20 April 2019

Naxal - தீவிரவாதி

தடதடவென்று
குண்டும் குழியுமான
ரோட்டில்
சுங்கச் சாவடி
கட்டணம் கட்டி
பயணித்து
காற்றில் பறந்து
முகத்தில் விழும்
குப்பைகளை மாசுகளை
ஒதுக்கி
நாடு சுத்தமாகிட
சுவச் பாரத் வரிகட்டி
சுவாசித்து
அடாது செய்யும்
அரசியல்வாதிகளின்
நிறத்தை சட்டென்று
மறந்து
இரண்டாயிரம்
ரூபாய்க்கு
நாடு நலம்பெறும்
என்று
நம்பிக்கையோடு
ஓட்டுப்போடுகிறவன்
போடாமல்
வீட்டிலேயே
உட்கார்ந்து இருப்பவன்
எல்லாம்
#UrbanNaxals
#RuralNaxals

பொய்யின் ஆட்சி

கூடங்குளம்
மீத்தேன் - கெயில்கள்
நியூட்ரினோக்கள்
மாயமான கண்டெனைர்கள்
மறைந்த முதல்வரின் 72 நாட்கள்
ஜல்லிக்கட்டு வன்முறைகள்
ஸ்டெர்லைட்கள் ஸ்னைப்பர் குண்டுகள்
மீனவர்களின் படுகொலைகள்
காவிரி வாரியப் பொய்கள்
நீட் படுகொலைகள்
மாட்டின் பெயரில் படுகொலைகள்
ஆக்ஸிஜன் இன்றி இறந்த குழந்தைகள்
பெண் குழந்தைகள் மீதான வக்கிரங்கள்
உயிர் பிழைக்க பாலியல் பலாத்காரத்தை 

எதிர்க்காமல் இருந்திருக்கலாம் என்ற
அமைச்சர்களின் வக்கிர அறிவிப்புகள்
தெர்மாக்கோல் அணைகள்
ஸ்காட்லாந்துயார்ட் காவல்துறைக்கு
சவால்விடும் நடிகர்கள் அரசியல் ரவுடிகள்
சாராயம் நிறுத்த உயிர்கொடுத்த பிள்ளைகள்
கந்துவட்டியால் தீக்குளித்த குடும்பங்கள்
சாதியால் கொல்லப்பட்டவர்கள்
நசிந்துப் போன தொழில்கள்
விலை உயர்ந்துபோன கல்விக்கொள்ளைகள்
ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல் டீசல் விலைகள்
கை மீறிச்செல்லும் விலைவாசி
ராணுவத்தில் நிகழும் ஊழல்கள்
உரிமையை விலைபேசும் மக்கள்
இப்படி எல்லாவற்றையும்
அடுக்கினாலும்
“ஐயையோ, கொலை மிரட்டல்!?”
என்று நீங்களும் அவர்களும்
வேஷம் போடுவது போதுமானதாய்
இருக்கிறது
மக்களை மடைமாற்றும்
உங்கள் தேர்தல் யுத்திக்கு!
யாருக்கு தெரியும்
ஊழலில் திளைத்தக்கூட்டம்
பதவிக்காக இன்னொரு
மருத்துவமனை நாடகத்தை
பின்னாளில் உங்களுக்கும்
தயார் செய்யக்கூடும்
ஆசைதீர சுற்றிவாருங்கள்
உலகத்தை
ஆசைதீர சுட்டுக்கொல்லுங்கள்
மக்களை!

தலைமுறை தூற்றும்

காற்று, நீர், நிலம் நச்சுப்படுத்தும் வேதானந்தா தனியாருடையது, இதற்காக அரசு ஏன் துடிக்கிறது?

வேதாந்தா பாஜகவுக்கு வெளிப்படையாகவே நன்கொடை தந்திருக்கிறது, ஒவ்வொரு கார்ப்பரேட்டுகளும் தேர்தல் நிதி என்றும் நன்கொடையென்றும் கார்ப்பரேட்டுகளிடம் வாங்குவதெல்லாம் நன்கொடை என்று சொல்லிக்கொண்டாலும் அதுவும் லஞ்சமே, காசுக்கொடுத்தவன் “எது எப்படி இருந்தாலும் ஆலையை தொடர்ந்து இயக்குவோம்” என்று செல்லுவதற்கான துணிச்சலெல்லாம் நம்முடைய “நீதி வழுவாத நீதிமன்றங்களாலும்” “நச்சைக் கலக்காத அவர்களுடைய நேர்மையான வியாபாரத்தின் மூலம்” என்று நினைத்துவிட்டால் நம்மை விட முட்டாள்கள் இருக்க முடியாது, நம் நாட்டில் வேதாந்தா என்றில்லை, தாமிரபரணியின் நீர் உறிஞ்சும் கோலா கம்பெனியும், மொத்தமாய் நீர் உறிஞ்சும் கார் கம்பெனிகளும், குடிக்கும் நீரை அரசு சுத்திகரிக்காமல் அதையும் வியாபாரமாக்கிய தனியார் நிறுவனங்களும், சாயப்பட்டறைகளும், அரசின் கூடங்குளமும், மீத்தேனும் என்று தொழில் வளம் என்ற பெயரில் நாட்டில் ஏகப்பட்ட தொழிற்சாலைகள் மண்ணை, நீரை, காற்றை மாசுப்படுத்தும் பணியை கனகச்சிதமாக நிறைவேற்றி வருகின்றன! 

அதுவும் நீதிமன்ற தீர்ப்பு வரும் நாளுக்கு முந்தைய தினம் பெப்ஸிக்கோவின் இந்திரா நூயி பிரதமரை சந்தித்துப் பேசுகிறார், கார்ப்பரேட்டுகள் பிரதமரை சந்திப்பது எளிது, விவசாயிகள் சந்திப்பதுதான் கடினம், இந்தக் கார்ப்பரேட்டுகளும் அரசுக்கும் உள்ள இணக்கத்தில் மக்கள் போராட்டம் செய்தும், தங்கள் உயிர்களை விட்டும்தான் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது!

இத்தனை துணிச்சல் கார்ப்பரேட்டுகளுக்கு, கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரைக்கும் இறைக்கும் காசினாலும், எதையும் ஏற்பாடு செய்து தரும் சாமர்த்தியத்தாலும் வருகிறது!
மைலாப்பூரில் ஒரு கடையில் முதலாளி பிரத்யேகமாக தன் காரை அதிகாரிகளின் சுற்றுலாவிற்கென்றே வைத்திருப்பதாக, “இதையெல்லாம் செஞ்சுதான் இங்கே வியாபாரம் செய்ய வேண்டியிருக்கு” என்று யாரிடமோ நொந்துக்கொண்டிருந்தார், மிக சிறிய கடைகளுக்கே இப்படியென்றால் வேதாந்தா போன்ற பெரிய நிறுவனங்கள் துணிச்சலாய் நிற்பதில் ஆச்சரியமில்லை!

அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் “பணம்” மட்டுமே தெரிகிறது, நாளை நச்சுப்பட்ட இந்தப் பூமியில் அவர்களின் வாரிசுகள் பணத்தை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்று தெரியவில்லை!

நம்முடைய முன்னோர்கள் சுதந்திரம் வாங்கித்தந்ததாய், மரம் நட்டு வைத்ததாய், காடு வளர்த்ததாய், அணைகள் கட்டியதாய், குளங்கள் வெட்டியதாய் பெருமைப்பட்டுக் கொள்கிறோம், அவர்களால் வாழ்கிறோம், ஆனால் நாளை நம் சந்ததி (அரசியல், அதிகார, தொழில் மட்டத்தையும் சேர்த்து) என்ன சொல்லும்,
“சில கோடிகளுக்காக என் அப்பன் இந்தப்பூமியை பாலைவனமாக்கினான்”
“சில கேடிகளுக்காக என் அப்பன் இங்கேதான் பலரை சுட்டுக்கொன்றான்”
“சில கோடிகளுக்காக என் அப்பன் இந்தக் காடு அழித்தான்”
“சாதிக்காக என் அப்பன் கொலைகாரர்களை ஆதரித்தான்”
“பதவிக்காக என் அப்பன் பல நூறு பேர்களையும், சில ஊர்களையும் கொன்றான்”
“சில ஆயிரங்களுக்காக என் உறவுகள் தங்கள் உரிமையை விற்றாரகள்”
“சில முதலாளிகளுக்காக என் அப்பன் புற்றுநோயை இந்த மக்களுக்குத் தந்தான், அது இப்போது எனக்கும் இருக்கிறது”
இப்படித்தான் வருங்காலம் மாறும், இந்த அரசியல் நன்கொடைகளை உடனே தடைசெய்யாவிட்டால்! அதற்கு சட்ட அமைப்பே மாற வேண்டும், மக்களுக்காக மாற வேண்டும் என்றால் ஒரு நூற்றாண்டேனும் ஆகும், இது அரசியல்வாதிகளின் சம்பளம் ஏற்றும் பிரச்சனையில்லையே!

ஓர் அடிமைத்தேசம்

1. பெரு வெள்ளமொன்று வந்தது, மக்கள் உறக்கத்திலேயே மூழ்கி இறந்தார்கள், அப்போதும் யார் செத்தால் என்ன என்று இதே மக்கள் ஓட்டுப்போட்டார்கள்,

2. நீட்டினால் உரிமைகள் இழந்து, பிணங்கள் விழுந்தபோது, “நீட் பொணம்” விழுந்திடுச்சா என்று கேலி பேசினார்கள்,

3. இப்போது சுடப்பட்டு சொந்தங்கள் இறந்தபோது, “கடைசிவரைக்கும் சுட்டு சாகடிங்க நாய்கள” என்று தைரியமாக பதிவிடுகிறார்கள்,

4. ஆட்சியாளர்கள் மாறுவார்கள் அதிகாரிகள் அப்படியேதான் இருப்பார்கள், நாளை இதே மக்களிடையேதான் நடமாட வேண்டும் என்று தெரிந்தும், கண்டபடி சுட்டுத்தள்ளுகிறார்கள், காவலர்கள்

5. தலைமைச்செயலகம் என்ன அமெரிக்காவிலா இருக்கிறது, இருந்தாலும் துணை ராணுவம் வரட்டும் என்று சென்னையிலிருந்து ஆட்டம் ஆடுகிறார் தலைமைச்செயலர்.

6. தன்னை விசாரிக்க தானே விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிடுகிறார் முதல்வர். அதுவும் வெற்றிகரமாக ஊழல் வழக்குகளில் இருந்து முன்னாள் முதல்வரை விடுவித்தவரை

7. இத்தனை கலவரங்கள் வேறு ஆட்சியில் நடந்திருந்தால் ஆட்சிக்கலைக்கப்பட்டிருக்கும், இங்கே தனியார் ஆலை இயங்க தூத்துக்குடியை மொத்தமாக கொன்றாவது பாதுகாப்பு தருவோம் என்கிறது அரசு

8. யார் செத்தால் என்ன “பேஷா சாவட்டும்” என்று நரித்தனம் ஊறிய கும்பல் பதிவிடுகிறது, ஆங்கிலேயே காலத்தில் இந்த நரிகளால் முன்னோர்கள் என்ன பாடுப்பட்டு இருப்பார்கள் என்று உணர முடிகிறது, மொத்தமாய் காட்சிகளைத் திரித்து, இதே மக்களிடையே வாழ்ந்துக்கொண்டு சில பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன, ஐயோ பாவம் அப்பாவி காவலர்கள் என்று ஊடகங்கள் செய்தி திரிக்கின்றன

9. செத்த கணக்கு என்ன, காயக் கணக்கு என்ன, வந்து வரிசையாய் காசு வாங்கிக்க என்று சொல்வது எல்லாம் ஆவணத்தின் உச்சம்

10. அத்தனையும் செய்துவிட்டு, வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து ஓட்டுக்கேட்க வருவார்கள், “அட நம்ம சாதிக்காரன், எவ்வளவு சாமர்த்தியமா ஆட்சி செஞ்சு இருக்கான், எத்தனை கொலைகள் “, என்று ஒரு கண்மூடித்தனமான சாதிப்பாசம் இரத்த வாசனையை இரசித்துக்கொண்டே ஓட்டுப்போடும், இன்னொரு கும்பல் டோக்கனோட தன் அன்றாட பாடுகளுக்காய் பிச்சையெடுக்கும், “பேஷா செஞ்சேள் போங்கோ”, என்று ஒரு கும்பல் இரத்தம் தொய்ந்த தாமரைகளை முகர்ந்து ஆனந்தமடையும், மொத்தத்தில் இது வெறும் அறச்சீற்றத்தாலும், உணர்ச்சியை “சாராயத்தாலும்” ஆற்றிக்கொள்ளும் ஓர் அடிமைத்தேசம், அப்படித்தான் நினைக்கிறார்கள் ஆட்சியும், அதிகாரமும், அரசுப்பதவியும் அடைந்தவர்கள்!

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...