Saturday, 20 April 2019

பொய்யின் ஆட்சி

கூடங்குளம்
மீத்தேன் - கெயில்கள்
நியூட்ரினோக்கள்
மாயமான கண்டெனைர்கள்
மறைந்த முதல்வரின் 72 நாட்கள்
ஜல்லிக்கட்டு வன்முறைகள்
ஸ்டெர்லைட்கள் ஸ்னைப்பர் குண்டுகள்
மீனவர்களின் படுகொலைகள்
காவிரி வாரியப் பொய்கள்
நீட் படுகொலைகள்
மாட்டின் பெயரில் படுகொலைகள்
ஆக்ஸிஜன் இன்றி இறந்த குழந்தைகள்
பெண் குழந்தைகள் மீதான வக்கிரங்கள்
உயிர் பிழைக்க பாலியல் பலாத்காரத்தை 

எதிர்க்காமல் இருந்திருக்கலாம் என்ற
அமைச்சர்களின் வக்கிர அறிவிப்புகள்
தெர்மாக்கோல் அணைகள்
ஸ்காட்லாந்துயார்ட் காவல்துறைக்கு
சவால்விடும் நடிகர்கள் அரசியல் ரவுடிகள்
சாராயம் நிறுத்த உயிர்கொடுத்த பிள்ளைகள்
கந்துவட்டியால் தீக்குளித்த குடும்பங்கள்
சாதியால் கொல்லப்பட்டவர்கள்
நசிந்துப் போன தொழில்கள்
விலை உயர்ந்துபோன கல்விக்கொள்ளைகள்
ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல் டீசல் விலைகள்
கை மீறிச்செல்லும் விலைவாசி
ராணுவத்தில் நிகழும் ஊழல்கள்
உரிமையை விலைபேசும் மக்கள்
இப்படி எல்லாவற்றையும்
அடுக்கினாலும்
“ஐயையோ, கொலை மிரட்டல்!?”
என்று நீங்களும் அவர்களும்
வேஷம் போடுவது போதுமானதாய்
இருக்கிறது
மக்களை மடைமாற்றும்
உங்கள் தேர்தல் யுத்திக்கு!
யாருக்கு தெரியும்
ஊழலில் திளைத்தக்கூட்டம்
பதவிக்காக இன்னொரு
மருத்துவமனை நாடகத்தை
பின்னாளில் உங்களுக்கும்
தயார் செய்யக்கூடும்
ஆசைதீர சுற்றிவாருங்கள்
உலகத்தை
ஆசைதீர சுட்டுக்கொல்லுங்கள்
மக்களை!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...