Saturday, 20 April 2019

சீனப்பயணம்

ஆமா நான் என்ன கேட்டேன், நான் குடிக்க ஒரு ஜூஸ் கேட்டேன், ப்ரேக் பாஸ்ட் சாப்பிட ஒரு பிரட் கேட்டேன், அது ஒரு குற்றமா? ஒரு பெரிய கோப்பையில் ஆரஞ்சு பழச்சாறும், இரண்டு பிரட்களுக்கு பதில் மூன்று பிரட்களை வைத்து, முட்டையை வைத்து பின் காய்கறிகள், இலைதழைகள் வைத்து நிறைய சான்ட்விச்சுகளும், ஃப்ரென்ச் ஃப்ரைஸ்களும் தட்டை நிறைத்திருந்தது!

புதிய ஹோட்டல் அத்தனை அழகாய், அமைதியாய் இருக்கிறது, வரவேற்பறையில் இருக்கும் பலருக்கு ஆங்கிலம் தெரிகிறது, மற்றப்படி சிங் சுங் ஹாங் தான்! வெள்ளிக்கிழமை ஆதலால் அலுவலகத்தில் எல்லோரும் செர்ரி பழத்தோட்டத்திற்கு அழைத்துச்செல்ல, ஒரு சிறிய ப்ளாஸ்டிக் வாளியில் நீர் நிறைத்து கையில் கொடுத்துவிட்டார்கள், எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு செர்ரி பழங்களைப் பறித்து அந்த வாளியில் உள்ள தண்ணீரில் அலசி சாப்பிட வேண்டும், “நோ நோ எனக்கு செர்ரியெல்லாம் வேண்டாம்” என்றேன் ஒரு பழத்தின் புளிப்புச்சுவை சர்ரென்று மூளையை எட்டியதும்! “ஹா ஹா திஸ் தி லன்ச் பார் டுடே (இன்றைக்கு இதுதான் மதிய உணவு) என்றார்கள், நம்ம ஊரு ரூபாயில் 275 ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட, அந்தச் சூழ்நிலையிலும் ரம்மியமாய் இருந்தது, ஏதோ ஒரு சிறிய ஊட்டிமலையின் மீது சிலுசிலுவென்ற காற்றாட நடந்தது போல் இருந்தது அந்தச் சிறிய பயணம், கிட்டதட்ட 4 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைப்பயணம்! ஆளாளுக்கு அத்தனைப்பழங்களை எளிதாய் சாப்பிட பத்துப்பழங்களுக்கு மேல் வயிறு போடாதே என்றது, நாக்கு எல்லாவற்றையும் வெளியே தள்ளிவிடுவேன் என்றது, இந்தச் சில நாட்களில் இரண்டு கிலோ குறைந்திருக்கிறேன், இப்படியெல்லாம் டயட் இருந்தாத்தான் உண்டு என்ற மைண்ட் வாய்ஸை அடக்கி பசி மறந்த துறவி நிலைக்கு தயார் படுத்திக்கொண்டிருக்கிறேன்! 

தொடர்ந்த நாட்களில் இன்னமும் இந்த ஊரின் சுத்தத்தை வியந்துகொண்டிருக்கிறேன், நம்முடைய பிரதமர் சீனப்பயணம் மேற்கொண்டு “சுவச் பாரத்தை” சீனாவில் பரப்பியதால்தான் இந்த மாற்றம் என்று இந்தியச் சங்கிமங்கிகளைப் போல் யோசித்துக்கொண்டிருக்கிறேன்!
#சீனப்பயணம்4

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...