Thursday, 29 August 2013
Friday, 23 August 2013
பதுக்கல்
சூழும் கருமேகங்களைக்
காற்று கடத்தத் துடிக்க
நீண்ட நெடு மரங்கள்
பாங்காய் அதனைச் சிறை பிடிக்க
காற்றில் நெகிழ்ந்து,
மரங்களின் வருடலில் சிலிர்த்து
மேகம் உருகிடும்...
மழையாய்
தோட்டத்தில் துள்ளும் கன்று
ஆடிக் கலைத்திட
அம்மா என்ற குரலில்
பசுவின் அருகில் சென்றிட
கன்று நாவால் மடி வருட,
தாய்மையில் நிறைந்து
பசு, அன்பை சுரந்திடும்
பாலாய்
எந்திர உலகத்தில்
நாளை வரும் என்ற சோம்பலில்
அன்பைக் கூட அளவிட்டு
மனமில்லாமல் மடிந்த பின்
தரும் நம் பதுக்கல்
ஆற்றல் மட்டும் கைவரவில்லை
ஏனோ இயற்கைக்கு இயற்கையாய்
காற்று கடத்தத் துடிக்க
நீண்ட நெடு மரங்கள்
பாங்காய் அதனைச் சிறை பிடிக்க
காற்றில் நெகிழ்ந்து,
மரங்களின் வருடலில் சிலிர்த்து
மேகம் உருகிடும்...
மழையாய்
தோட்டத்தில் துள்ளும் கன்று
ஆடிக் கலைத்திட
அம்மா என்ற குரலில்
பசுவின் அருகில் சென்றிட
கன்று நாவால் மடி வருட,
தாய்மையில் நிறைந்து
பசு, அன்பை சுரந்திடும்
பாலாய்
எந்திர உலகத்தில்
நாளை வரும் என்ற சோம்பலில்
அன்பைக் கூட அளவிட்டு
மனமில்லாமல் மடிந்த பின்
தரும் நம் பதுக்கல்
ஆற்றல் மட்டும் கைவரவில்லை
ஏனோ இயற்கைக்கு இயற்கையாய்
Monday, 12 August 2013
Thursday, 8 August 2013
Tuesday, 6 August 2013
ஒன்றின் ஆளுமை!
எனக்கு பிடித்தமானது
உனக்கு பிடிக்கவில்லை
உனக்கு பிடிக்காதது
எனக்கு பிடித்தமானதில்லை
எனக்கென்ன பிடிக்கும்
உனக்கு தெரியவில்லை
உனக்கென்ன பிடிக்கும்
எனக்கு தெரியாததேயில்லை
உன்னில் குறையேதும் கண்டதில்லை
என்னில் நீ குறைக்காணும் குணத் தைக் கூட
எல்லாம் கடந்து மறந்து கடந்து
உனக்கு என்னை மட்டுமே பிடித்துப்போனது
என்னில் என்னையே நான் தொலைத்தப்பிறகு!
உனக்கு பிடிக்கவில்லை
உனக்கு பிடிக்காதது
எனக்கு பிடித்தமானதில்லை
எனக்கென்ன பிடிக்கும்
உனக்கு தெரியவில்லை
உனக்கென்ன பிடிக்கும்
எனக்கு தெரியாததேயில்லை
உன்னில் குறையேதும் கண்டதில்லை
என்னில் நீ குறைக்காணும் குணத்
எல்லாம் கடந்து மறந்து கடந்து
உனக்கு என்னை மட்டுமே பிடித்துப்போனது
என்னில் என்னையே நான் தொலைத்தப்பிறகு!
குலதெய்வம்

என்னில் கேள்விகள் இருந்தது
பள்ளி முடிந்து வந்து கேட்க
பாடம் முடிந்து கேட்க
காதல் சொல்வதற்கு முன் கேட்க
கைப்பிடிக்கும் முன் கேட்க
கரு சுமக்கும் முன் கேட்க
பிள்ளைப் பெறுகையில் கேட்க
அக்கேள்விக்கும் முன் கேட்க
காத்திருப்பில்,
கட்டமைத்த சமூக அமைப்பில்
கேட்காமல் கேள்விக்குள் புதைந்துப் போனேன்
பதில் இல்லாக் கேள்வியென்று
எனக்குள் பலமுறை மறுகிப் போனேன்
கேள்விகளோடே ஒருநாள் எரிந்தும் போனேன்
இதோ என் சாம்பலை முன்வைத்து
என்னை சாமி என்று போற்றி
குலதெய்வம் என்றே வாழ்த்துகின்றீர்
வாழும் காலத்தில்,
நான் பெறாத வரங்களை
கைப்பிடி உணவு தந்து,
தா என்றே வேண்டி தொழுகின்றீர்
பெண்ணைக் கொன்று விட்டு
தியாகத்தில் திரு வுரு செய்து
பெண்மை போற்றுகின்றீர்
ஓங்கி அறைந்து
ஓர் உண்மை சொல்வேன்
மதித்து வாழ்தலே வரம் - அதுவே
வாழ்தலுக்கான அறம்!
இறையில் பெண் போற்றி -
உங்கள் அறையில் தூற்றதீர்!
பாடம் முடிந்து கேட்க
காதல் சொல்வதற்கு முன் கேட்க
கைப்பிடிக்கும் முன் கேட்க
கரு சுமக்கும் முன் கேட்க
பிள்ளைப் பெறுகையில் கேட்க
அக்கேள்விக்கும் முன் கேட்க
காத்திருப்பில்,
கட்டமைத்த சமூக அமைப்பில்
கேட்காமல் கேள்விக்குள் புதைந்துப் போனேன்
பதில் இல்லாக் கேள்வியென்று
எனக்குள் பலமுறை மறுகிப் போனேன்
கேள்விகளோடே ஒருநாள் எரிந்தும் போனேன்
இதோ என் சாம்பலை முன்வைத்து
என்னை சாமி என்று போற்றி
குலதெய்வம் என்றே வாழ்த்துகின்றீர்
வாழும் காலத்தில்,
நான் பெறாத வரங்களை
கைப்பிடி உணவு தந்து,
தா என்றே வேண்டி தொழுகின்றீர்
பெண்ணைக் கொன்று விட்டு
தியாகத்தில் திரு வுரு செய்து
பெண்மை போற்றுகின்றீர்
ஓங்கி அறைந்து
ஓர் உண்மை சொல்வேன்
மதித்து வாழ்தலே வரம் - அதுவே
வாழ்தலுக்கான அறம்!
இறையில் பெண் போற்றி -
உங்கள் அறையில் தூற்றதீர்!
Monday, 5 August 2013
Friday, 2 August 2013
Subscribe to:
Posts (Atom)
The Unheard
There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...
-
My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...
-
தினம் பிறக்கும் மணம் பரப்பும் - மலர்கள் வாடி உதிரும்வரை! ஒரே நாள் வாழும் மகரந்தம் பரப்பும் - பட்டாம்பூச்சிகள் உயிர் பிரியும்வரை! நூறு ஆண்டுக...







%5B1%5D.jpg)