Wednesday, 15 April 2020

கல்வி

இந்தக் கல்வியையும், மருத்துவத்தையும் இலவசம் என்று அறிவித்துவிட்டால் போதும், இந்தச் சாதிய, இடஒதுக்கீடு, ஏழை பணக்காரன் பிரச்சனை பாதியளவு தீர்ந்துவிடும்! யோசித்துப்பாருங்கள், அடிப்படையான இந்த இரு தேவைகளையும் தீர்த்துவிட்டால் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பாதி ஏழைகளாகிவிடுவார்கள், மதவாத கட்சிகளுக்கு அரசியல் செய்யும் வாய்ப்பும் கொஞ்சம் குறைந்துவிடும்! முடியாது என்று நினைத்தால், கோடிகளை மிஞ்சும் வாரா கடன்கள் இந்தியாவில் எவ்வளவு என்று பாருங்கள், ஓடிப்போகும் முதலாளிகளுக்கும், ஊரைச்சுற்றும் அரசியல்வாதிகளுக்கும் ஆகும் விரயங்களில் இந்த இலவசக்கல்வியும், மருத்துவமும் 72 ஆண்டுகாலச் சுதந்திரத்தில் சாத்தியமாகாதா?
700 கோடியில் ஒரு திருமணம் நடக்கிறது, சில நூறுகள் இல்லாமல் தன் மனைவியின் பிணத்தை தோளில் சுமக்கிறான் ஒருவன், 4000 கோடியில் ஒருவர் சுற்றுலா செல்கிறார், 10 லட்சப் பாக்கிக்காக சில நூறு குழந்தைகளை ஒர் அரசு சாகவிடுகிறது, சில ஆண்டுகால ஆட்சியில் சில நூறு பணக்காரர்கள் கோடிசுவர குபேரன்களாக, பல கோடி ஏழைகள் இன்னும் ஒரு மோசமான வறுமைநிலைக்கு தள்ளப்படுகிறார்கள், 72 ஆண்டுகால சுதந்திரத்தில் மக்களுக்கான அடிப்படைத்தேவைகள் இன்னமும் சாத்தியப்படவில்லை!
இருந்தும் என்ன இது தேர்தல் காலம், நேற்றுவரை அம்பானிகளிடத்திலும் அதானிகளிடத்திலும் மட்டுமே கைகோர்த்த ஏழைத்தாயின் புதல்வர்கள், ஆட்சிக்காக மக்களை மறந்து குளுகுளு ரிசார்ட்டில் பதுங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள், நேற்றுவரை ஒருவரையொருவர் இகழ்ந்தவர்கள், விவசாயிகளை அழித்தவர்கள், என்று எல்லோரும் தங்கள் வசதியான ரதங்களை விட்டு உங்களிடம் கையெடுத்துக்கும்பிட்டு, “தேர்தலுக்காக” மட்டும் சேவை செய்ய வருகிறார்கள், வருவதை வாங்கிப்போட்டுக்கொண்டு நாம் அரசியல் பேசுவோம் வாருங்கள்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...