Thursday, 16 April 2020

மீண்டும்_ஒருமுறை

#மீண்டும்_ஒருமுறை
அப்பாவின் தோள் மீதேறி
ஓயாமல் கேள்விகள் கேட்டிட வேண்டும்
அம்மாவின் மீன்குழம்பை
சுவையறிந்து ஆற அமர உண்ண வேண்டும்
வண்ணக்கலவைகளை சிதறடித்து
சுவர்களில் ஓவியம் தீட்டிட வேண்டும்
கண்களை பார்த்துப் பேசிய
உண்மைத் தோழனின் கரங்கள் பற்றிட வேண்டும்
சோவென்று பெய்யும் மழையின் ஓசையில்
புத்தகங்கள் படித்திட வேண்டும்
அம்மாவுக்கு தெரியாமல் பூனைகளுக்கு
பால் ஊற்றிட வேண்டும்
உயர்ந்திருக்கும் கிச்சலிக்காய் மரத்தில்
அண்ணன் கட்டிய ஊஞ்சலில் ஆடிட வேண்டும்
ஆமாம் மீண்டும் ஒருமுறை அன்பு நிறைந்த
மனிதர்களை கண்டிட வேண்டும்!

#மீண்டும்_ஒருமுறை!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...