Thursday, 16 April 2020

கலியுகம்

வா என்றால் வரவேண்டும்
போ என்றால் போக வேண்டும்
அன்பு
கேட்டால் தரவேண்டும்
கொடுத்தப்பின் மறந்துவிடவேண்டும்
கடன்

அவ்வப்போது மாறும்
சூழலுக்கு தக்க நிறம் மாற்றிக்கொள்ளும்
மனம்
பாதகங்கள் சாதாரணம்
நேர்மையே அசாதாரணம்
அரசியல்
இன்னமும் சொல்ல
ஏராளமுண்டு கலியுகத்தில்
நியதிகள்
எனினும் கலியுகம்
எங்கோ பிழைத்திருக்கும்
அன்பில் நேர்மையில்
மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறது
மெதுவாய்!
#கலியுகம்

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...