Wednesday, 15 April 2020

தேர்தல்_வியாபாரமும்_அடியாட்கள்_வளர்க்கும்_தேசமும்!

#தேர்தல்_வியாபாரமும்_அடியாட்கள்_வளர்க்கும்_தேசமும்!
“2000 தருகிறோம்
6000 தருகிறோம்”
கட்சிகள் வண்ணமயமான அறிக்கைகள் விடுகிறார்கள், அடேங்கப்பா, மக்களின் வரிப்பணத்தை வாய்க்கூசாமல் ஏலம் விடுவதற்கு பதில், குறைந்த பட்சம் “நாடு முழுக்க கல்வியை இலவசமாக்குவோம்” என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்? செய்ய மாட்டார்கள், ஏனென்றால்;

1. ஓரே கல்வி அதுவும் இலவசம் என்றால் “வர்ணாசிரம” தர்மம் அதிர்ந்து விடும்

2. எல்லோரும் படித்துவிட்டால், அடிதடி செய்ய, தீக்குளித்துச்சாக அடியாட்கள், அடிமைகள் கிடைக்க மாட்டார்கள்

3. கல்விக்கொள்ளைக் கும்பல் அனுமதி தராது

4. அரசியல்வாதிகளின் வாரிசுகள் நடத்தும் தனியார் பள்ளிகள் கல்லூரிகள் அதிகம், வருமானம் பாதிக்கும்

5. “நான் ஏழைத்தாயின் மகன்” என்று மேடையில் விடும் கண்ணீர் நாடகங்களை நம்ப ஆட்கள் இல்லாமல் போய் விடுவார்கள்

6. பள்ளிகளில் கல்லூரிகளில் புதிய மாணவர்கள் சேர்க்கை தொடங்கி, புத்தக விற்பனைவரை, தாளாளர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அடிக்கும் கொள்ளைகள் நின்றுவிடும்

7. சாராயக்கடைகளில் வியாபாரம் குறைந்துவிடும்
இதெல்லாம் நடந்தால், கட்சி நடத்த பணம் இருக்காது, இதுநாள் வரைக்கும் பொதுச்சேவைக்காக (?!) பாடுபடும் அரசியல்வாதிகள் அரசியலை விட்டுவிட்டு வேறு தொழில் பார்க்க போய்விடுவார்கள்!
யோசித்துப்பாருங்கள், இன்றைய இந்தியாவில், லஞ்சம் லாவண்யம், நேர்மையற்ற அமைப்பு, தொடர் குற்றங்கள் என்று எத்தனையோ பலகீனங்களுக்கு காரணங்கள் பலவாக இருந்தாலும், 72 ஆண்டு காலங்கள் ஆகியும் இன்னமும் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு சாத்தியமாகவில்லை, கல்வியைக்கூட எட்டாக்கனியாக ஆக்கிவைப்பதே ஆட்சியாளர்களின் சாதனை!

சாதாரண ரவுடியாகவோ, வியாபாரியாகவோ வலம் வரும் மனிதர்கள் ஆட்சிக்கு வந்ததும் தலைநகரில் சொத்துகளை குவிக்கிறார்கள், உயர்ரக கார்களில் வலம் வருகிறார்கள், வாரிசுகள் உறவினர்கள் எல்லோரும் எளிதாக தொழிலதிபர்கள் ஆகிறார்கள், ஒருபக்கம் மக்களிடம் வரிகளாக சுரண்டி, மறுபக்கம் மலிவான இலவசங்களை வீசி, மக்களை மந்தையாடுகளாகவே வைத்திருக்கிறார்கள், இவர்களிடம் கல்விப்புரட்சியை எப்படி எதிர்ப்பார்க்க முடியும்? பாலியல் வன்கொடுமைகளின் புரட்சியை வேண்டுமென்றால் எதிர்ப்பார்க்கலாம்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...