Thursday, 16 April 2020

அம்மா

வாழ்வின் சோதனைகளை
நீந்திக் கடந்து
சாதனைகளை மனத்தெளிவுடன்
எதிர்க்கொள்ள கற்றுக்கொடுத்தவள்
தன் விசால அறிவையும்
பிள்ளைகளுக்காக அஞ்சறைபெட்டிகளில்
சுருக்கிக்கொண்டவள்
கடவுள் ஊருக்கு பொதுவானதால்
வீட்டிற்கொரு தாயாக பிள்ளைகளுக்குத்
அனுப்பி வைக்க
பிள்ளைகளோ அவளை
தொலைத்தப்பின்னரே
தேடுகின்றனர்!
#அம்மா

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...