Monday, 16 December 2013

பூக்கள் மென்மையானவை!


புதிதாய் ஒரு பக்கம்
தினம் திறக்கிறேன்
புன்னகையோடே - உனக்காக
இந்த வாழ்க்கைப் புத்தகத்தில்!

கடுமையும் இனிமையும்
மாறி மாறி கண்ணீர் நிரப்பும்
எழுதுகோலில் - ஏனோ
கசிகிறது சிவப்பு,
விரல்களின் வழியே
எப்போதும்!

கசிகின்ற குருதியிலும்
பூ மணம் ஒன்றே வீசும்
பூக்கள் மென்மையானவை
புரிந்துகொள்ளேன் ஒரு நாளில்?

1 comment:

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...