Saturday, 1 March 2014

முகமூடி


வார்த்தைகளில் எரிந்து
சினத்தில் வெந்து
தோல்வியில் புழுங்கி
பசியில் வதங்கி
அவமானத்தில் குறுகி
சுயத்தை எரித்து
கண்ணீர் மறைத்து
உழைத்துக் கலைத்து
முகமூடி ஒன்று பற்றி
எரிகிறது இடுகாட்டில்
முகமூடி விலக்கி
முகமூடி மாற்றி - சில
முகங்கள் தெரிகிறது
பொய்யோ மெய்யோவெனும்
கண்ணீர்த்துளிகளோடு!

1 comment:

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...