Wednesday, 4 May 2016

இரவின்_விடியல்





அந்த தேவாலயத்தில்
இரவின் கருமையை
மெழுகுவர்த்தியொன்று
மெதுவாய்
தின்றுக் கொண்டிருந்தது

பரமபிதாவின் பாதங்களில்
ஏனையோர் இறக்கி வைத்த
பாவச்சாம்பலும்
கரைந்துக்கொண்டிருந்தது

பசியால் துவண்ட நாயொன்று
வாயிலில் யார் வரவையோ
எதிர்நோக்கி
கண்ணயராமல் காத்திருந்தது

சட்டென்று வீசிய காற்றில்
மெழுவர்த்தி அணைய
காட்சிகள் மறைந்தன
தீர்க்க முடியாச் சுமைகளில்
பரம பிதா இருளில் கரைய
மண்டியிட்டு மடிந்திருந்த நான்
வாசலில் உள்ள நாய்க்கு
அன்னமிடச் சென்றேன்
மெல்லிய வெளிச்சக்கீற்றில்
மனம் மட்டும் விடிந்தது!

#இரவின்_விடியல்

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...