Thursday, 9 January 2014

உளவியல்


மாசுபட்ட நீரில்,
தோன்றும் பிம்பங்களிலும்
தெரியும் கறை!

அறியாமையின் பிடிவாதத்தில்
காணும் உள்ளங்களிலும்
காண்போம் குறை!
 

Wednesday, 8 January 2014

கீச்சுக்கள்

Photo: மாத சம்பளம் வாங்குவோரின் சலுகைகளை இறுக்கிப் பிடித்து, ஒரு ரூபாய் கூட விடாமல் வரி வாங்கி, எல்லா வழிகளிலும் மக்களிடம் யோசித்துப் பிடுங்கும் புத்திசாலி அமைச்சரவைக்கு, ஒரு குழந்தையின் மாத படிப்புச் செலவு வெறும் நூறு ரூபாய்தான் என்பது முதல், மக்களின் பல்வேறு செலவினங்களை ஆதிகால நினைப்பிலேயே, நிர்ணயித்து வைத்திருக்கும் அளவுக்கோளை மாற்ற என்றுதான் மனம்வருமோ? 
முப்பத்து மூன்று ரூபாயில் வாழ்க்கை நடத்திடலாம் என்று சொன்ன மேதவிகள் நிறைந்ததல்லவா இந்த அரசாங்கம்!? 
# வாய் பேசா தாத்தா, தன் நிதிப் பெருக்கும் பழைய நிதி தாத்தா.....போதும் இந்தக் காங்கிரஸ் படுத்தும் பாடு, போங்கப்பா எல்லாம் வீட்டுக்கு! முடியல!
மாத சம்பளம் வாங்குவோரின் சலுகைகளை இறுக்கிப் பிடித்து, ஒரு ரூபாய் கூட விடாமல் வரி வாங்கி, எல்லா வழிகளிலும் மக்களிடம் யோசித்துப் பிடுங்கும் புத்திசாலி அமைச்சரவைக்கு, ஒரு குழந்தையின் மாத படிப்புச் செலவு வெறும் நூறு ரூபாய்தான் என்பது முதல், மக்களின் பல்வேறு செலவினங்களை ஆதிகால நினைப்பிலேயே, நிர்ணயித்து வைத்திருக்கும் அளவுக்கோளை மாற்ற என்றுதான் மனம்வருமோ?
முப்பத்து மூன்று ரூபாயில் வாழ்க்கை நடத்திடலாம் என்று சொன்ன மேதவிகள் நிறைந்ததல்லவா இந்த அரசாங்கம்!?
# வாய் பேசா தாத்தா, தன் நிதிப் பெருக்கும் பழைய நிதி தாத்தா.....போதும் இந்தக் காங்கிரஸ் படுத்தும் பாடு, போங்கப்பா எல்லாம் வீட்டுக்கு! முடியல!
— feeling angry.
--------------------------------------------------------------------------------------------
Intelligence is a cumulative factor of experience, and it doesn't necessitates age as the only determinant!
-----------------------------------------------------------------------------------------------
திறந்த செவிகளும், ஆர்வம் மிளிரும் கண்களும், உள்வாங்கும் மனமும் இருந்துவிட்டால், வாழும் வரை நம்மை ஆசான்கள் பின் தொடர்ந்து, முன்னடத்தி செல்வார்கள்!
# அனுபவம்
Photo: திறந்த செவிகளும், ஆர்வம் மிளிரும் கண்களும், உள்வாங்கும் மனமும் இருந்துவிட்டால், வாழும் வரை நம்மை ஆசான்கள் பின் தொடர்ந்து, முன்னடத்தி செல்வார்கள்!  
# அனுபவம்  
-------------------------------------------------------------------------------------------------------------------
சில மொழிகளைத் தெரியாது என்று சொல்லி வைப்பது சிலரின் மனங்களைத் தெரிந்து கொள்ள உதவுகிறது! — feeling amused.
----------------------------------------------------------------------------------------------------------------
ஆங்கிலம் என்பது ஒரு பொது மொழி, பல்வேறு மொழிப் பேசும் அனைவரையும் இணைக்கும் ஒரு மொழி, மற்றபடி ஏதோ சந்தேகம் கேட்கும் ஆங்கிலம் தெரியாத ஒருவரை இகழ்ந்து, கேலி செய்து, நம்முடைய அரைகுறை மொழிப்புலமையைக் காட்டப் பயன்படுத்தப்பட வேண்டிய மொழி அல்ல!
# எந்த மொழியும் கருத்துப் பரிமாற்றத்திற்கே அன்றி மற்றவரின் அகத்தைக் கொல்வதற்கு அல்ல!
--------------------------------------------------------------------------------------------------------------------
Photo: உங்கள் பணத்தில் கோடியில் நாங்கள் புரள்வோம், தெருக்கோடியில் உங்களை விடுவோம்! 
ஒவ்வொன்றுக்கும் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும், வரிச் செலுத்த வேண்டும்! 
கல்வி இல்லாமல்,வேலை இல்லாமல், ஆரோக்கியம் இல்லாமல், 
தங்குவதற்கு நிழல் இல்லாமல், பணம் இல்லாமல், அல்லது ஏதோ ஒன்று இல்லாமல் நீங்கள் மனக்கவலைக் கொண்டு வாடுவதால், உங்கள் மிச்ச சொச்ச சில்லறையையும் டாஸ்மாக் கடைகளில் கொடுத்து நீங்கள் மன சாந்தி அடையலாம்!
போனால் போகட்டும் வறுமையில் வாடுகிறீர்கள், நூறோ இருநூறோ தருகிறோம், கொஞ்சம் காய்கறிகளும், அரிசியும் தருகிறோம், சந்தோசமாய்க் கஞ்சிக்  குடியுங்கள்.......அடுத்த தேர்தல் வரும்போது குடித்த சாராயத்திற்கும், கஞ்சிக்கும் நன்றி மறவாமால் ஓட்டளியுங்கள்! 
இந்தப் புத்தாண்டிலும் நீங்கள் மந்தைகளைப் பெருக்கி, மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன்.... 

இப்படிக்கு உங்கள் தொகுதிதான்...உங்கள் ஊர்தான்.... 
ஹி ஹி ஹி அரசியல்வாதி 
உங்கள் பணத்தில் கோடியில் நாங்கள் புரள்வோம், தெருக்கோடியில் உங்களை விடுவோம்!
ஒவ்வொன்றுக்கும் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும், வரிச் செலுத்த வேண்டும்!
கல்வி இல்லாமல்,வேலை இல்லாமல், ஆரோக்கியம் இல்லாமல்,
தங்குவதற்கு நிழல் இல்லாமல், பணம் இல்லாமல், அல்லது ஏதோ ஒன்று இல்லாமல் நீங்கள் மனக்கவலைக் கொண்டு வாடுவதால், உங்கள் மிச்ச சொச்ச சில்லறையையும் டாஸ்மாக் கடைகளில் கொடுத்து நீங்கள் மன சாந்தி அடையலாம்!
போனால் போகட்டும் வறுமையில் வாடுகிறீர்கள், நூறோ இருநூறோ தருகிறோம், கொஞ்சம் காய்கறிகளும், அரிசியும் தருகிறோம், சந்தோசமாய்க் கஞ்சிக் குடியுங்கள்.......அடுத்த தேர்தல் வரும்போது குடித்த சாராயத்திற்கும், கஞ்சிக்கும் நன்றி மறவாமால் ஓட்டளியுங்கள்!
இந்தப் புத்தாண்டிலும் நீங்கள் மந்தைகளைப் பெருக்கி, மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன்....

இப்படிக்கு உங்கள் தொகுதிதான்...உங்கள் ஊர்தான்....
ஹி ஹி ஹி அரசியல்வாதி
------------------------------------------------------------------------------------------------------------
1. எந்த இடையூறும் இல்லாமல் தங்கள் கடமைகளை நேர்மையாகச் செய்யும் காவல்துறை அதிகாரிகள்

2. வாங்குகிற ஊதியமும், சலுகைகளுமே போதும் என்று, செய்ய வேண்டிய வேலைகளைச் செவ்வனே விரைந்து முடிக்கும் அரசாங்க அலுவலர்கள்.

3. மதங்களில் சொல்லப்பட்டுள்ள நல்லுணர்வை, மனிதாபிமானத்தை மட்டும் போதிக்கும் ஆன்மிகவாதிகள்.

4. பதவி என்பது, மக்களின் கடமையை நிறைவேற்ற, மக்கள் தந்தது, தன் வளத்தைப் பெருக்கிடக் கிடைத்த குறுக்குவழி அல்ல என்று உணர்ந்து, நாட்டு மக்களுக்காகச் சிந்தித்துச் செயல்படும் அரசியல்வாதிகள்.

5. ஆக்கபூர்வமான கண்டுப்பிடிப்புகளை அஃது எல்லோருக்கும் பயன்தரும் வகையில் கண்டுபிடித்துப் பணியாற்றும் விஞ்ஞானிகள்.

6. குடியை மறந்து, தெளிவுறக் கல்விக் கற்று, இலவசங்களுக்கு விலைபோகாமல் யாரையும் கேள்விக் கேட்டும் உறுதிக் கொண்ட மக்கள்.

7. மக்கள் மனதில் நம்பிக்கையை விளைவிக்கும் வண்ணம் செய்திகளை, செய்திகள் போலவே தரும் பத்திரிக்கைகள்.

8. மொழிக் கடந்து, மதம் கடந்து, செல்வ நிலைக் கடந்து, மக்களை ஒன்றுபோலவே கருதிப் பாதுகாக்கும் அரசாங்கம்.

9. பதுக்கலைத் தவிர்த்து நேர்மையாய் தொழில் செய்யும் வணிகர்கள்!

10. காடு நிறைந்து, மும்மாரிப் பொழிந்து, விவசாயத்தில் தன்னிறைவு அடையும் நாடு!

11. அத்தியாவசியப் பொருட்களைப் பங்குசந்தையில் இருந்து விடுவிக்கும் நாள்.

12. கல்வி, ஆரோக்கியம், அத்தியாவசியப் பொருட்கள் என அரசாங்கம் இயங்கும் அனைத்துத் துறைகளிலும் சிறந்த தரமான சேவை.

#குறைந்தது இவையெல்லாம் நடந்தால், வல்லரசு ஆவதற்கு நமக்கு அணுகுண்டுத் தேவையில்லை!

ஏதோ ஒரு வருடத்தில் இவையெல்லாம் நடக்கலாம், எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Photo: 1. எந்த இடையூறும் இல்லாமல் தங்கள் கடமைகளை நேர்மையாகச் செய்யும் காவல்துறை அதிகாரிகள் 

2. வாங்குகிற ஊதியமும், சலுகைகளுமே போதும் என்று, செய்ய வேண்டிய வேலைகளைச் செவ்வனே விரைந்து முடிக்கும் அரசாங்க அலுவலர்கள். 

3. மதங்களில் சொல்லப்பட்டுள்ள நல்லுணர்வை, மனிதாபிமானத்தை மட்டும் போதிக்கும் ஆன்மிகவாதிகள். 

4. பதவி என்பது, மக்களின் கடமையை நிறைவேற்ற, மக்கள் தந்தது, தன் வளத்தைப் பெருக்கிடக் கிடைத்த குறுக்குவழி அல்ல என்று உணர்ந்து, நாட்டு மக்களுக்காகச் சிந்தித்துச் செயல்படும் அரசியல்வாதிகள். 

5. ஆக்கபூர்வமான கண்டுப்பிடிப்புகளை அஃது எல்லோருக்கும் பயன்தரும் வகையில் கண்டுபிடித்துப் பணியாற்றும் விஞ்ஞானிகள். 

6. குடியை மறந்து, தெளிவுறக் கல்விக் கற்று, இலவசங்களுக்கு விலைபோகாமல் யாரையும் கேள்விக் கேட்டும் உறுதிக் கொண்ட மக்கள். 

7. மக்கள் மனதில் நம்பிக்கையை விளைவிக்கும் வண்ணம் செய்திகளை, செய்திகள் போலவே தரும் பத்திரிக்கைகள். 

8. மொழிக் கடந்து, மதம் கடந்து, செல்வ நிலைக் கடந்து, மக்களை ஒன்றுபோலவே கருதிப் பாதுகாக்கும் அரசாங்கம். 

9. பதுக்கலைத் தவிர்த்து நேர்மையாய் தொழில் செய்யும் வணிகர்கள்! 

10. காடு நிறைந்து, மும்மாரிப் பொழிந்து, விவசாயத்தில் தன்னிறைவு அடையும் நாடு! 

11. அத்தியாவசியப் பொருட்களைப் பங்குசந்தையில் இருந்து விடுவிக்கும் நாள். 

12. கல்வி, ஆரோக்கியம், அத்தியாவசியப் பொருட்கள் என அரசாங்கம் இயங்கும் அனைத்துத் துறைகளிலும் சிறந்த தரமான சேவை. 

#குறைந்தது இவையெல்லாம் நடந்தால், வல்லரசு ஆவதற்கு நமக்கு அணுகுண்டுத் தேவையில்லை! 

ஏதோ ஒரு வருடத்தில் இவையெல்லாம் நடக்கலாம், எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!   
-------------------------------------------------------------------------------------------------------------------
When everyone neglects you, tears you apart, belittle you and make a mockery of your feelings, believe me there is always one who loves you, who is no better than you, your life!
----------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்ந்து தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாளடைவில் பெரும் மனச்சிதைவு வந்துவிடுமோ என்று அச்சப்படும் அளவுக்கு இருக்கிறது கதையும் அதன் போக்கும்.....குழந்தைகளையும் கூட்டுச் சேர்த்துப் பார்ப்பது பெரும் கொடுமை!

உறவுகள் அனைத்தும் பகைக் கொண்டவர்கள், ஒவ்வொருவரும், ஒவ்வொருவர் வீழக் காத்திருக்கிறார்கள், உண்ணும் உணவில் விஷம் இருக்கலாம், எச்சரிக்கை!

# சாராயம், கஞ்சா, புகை, மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள்!
— feeling sick. 
------------------------------------------------------------------------------------------------------------
ஒரு வெறிபிடித்த நாய் மனிதரை கடித்து விட்டால், உடனே அதைக் கொல்கிறோம்.
காட்டை அழித்தால், தடம் மாறி வரும் விலங்குகளையும் ஆபத்தெனப் பிடித்துக் கூண்டில் அடைக்கிறோம்! ஆனால், பெண்களை வேட்டையாடும் மனித விலங்குகளை மட்டும் சாதி என்றும், அரசியல் என்றும் இல்லாத காரணக்காரியங்களை முன்னிருத்தி சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று, எல்லோரும் சாகும் வரை வேடிக்கை பார்க்கிறோம்!

அடக்க முடியாமல் திரியும் ஆண்களுக்கு அறுவை சிகிச்சை செய்துவிடுங்கள், பெண்ணைப் போகப்பொருளாய் இழிவு படுத்திக் காட்டும் பத்திரிக்கைகளை, தொலைக்காட்சித் தொடர்களை, விளம்பரங்களை, திரைப்படங்களை எல்லாம் தடைச் செய்யுங்கள்.....

#அடிப்படையில் மாற்றம் காணாத வரை, தம்மை வேட்டையாட வரும் மிருகங்களைப் பெண்களே வேட்டையாட வேண்டும்! தற்காப்பு!
----------------------------------------------------------------------------------------------------------------
"சரி, முதலில் நான்தானே அந்த ஐடியா சொன்னேன்....... "

"அடக் கேளேன்..... "

"சரி, நீ பேசினதை நான் கேட்டேன், இப்போ நான் சொல்றதை நீ கொஞ்சம் கேளு ....ஒரே ஒரு நிமிஷம் பா...."

"ஐயோ, சரி, இன்னைக்குப் பேசினா சரியா இருக்காது, நீ கேட்க மாட்டே, நீ நாளைக்கு வா, நான் பேசுறேன்!"

நான்கரை வயது மகள் ஓர் எட்டு வயது தோழியுடன் யார் முதலில் விளையாடுவது என்ற விவாத்தில் கூறியதுதான் மேற்கூறியே வாக்கியங்கள்.....
அம்மாவிடத்தில் விட்டுகொடுக்காமல் குறும்பு செய்யும் குழந்தை, தோழியுடன் ஒரு பெரிய மனுஷத் தோரணையில் பேசும்போது புரிகிறது, இந்தக் காலக் குழந்தைகள் ரொம்பத் தெளிவாய் இருக்கிறார்கள்!
feeling blessed.
Photo: "சரி, முதலில் நான்தானே அந்த ஐடியா சொன்னேன்....... "

"அடக் கேளேன்..... "

"சரி, நீ பேசினதை நான் கேட்டேன், இப்போ நான் சொல்றதை நீ கொஞ்சம் கேளு ....ஒரே ஒரு நிமிஷம் பா...." 

"ஐயோ, சரி, இன்னைக்குப் பேசினா சரியா இருக்காது, நீ கேட்க மாட்டே, நீ நாளைக்கு வா, நான் பேசுறேன்!" 

நான்கரை வயது மகள் ஓர் எட்டு வயது தோழியுடன் யார் முதலில் விளையாடுவது என்ற விவாத்தில் கூறியதுதான் மேற்கூறியே வாக்கியங்கள்.....
அம்மாவிடத்தில் விட்டுகொடுக்காமல் குறும்பு செய்யும் குழந்தை, தோழியுடன் ஒரு பெரிய மனுஷத் தோரணையில் பேசும்போது புரிகிறது, இந்தக் காலக் குழந்தைகள் ரொம்பத் தெளிவாய் இருக்கிறார்கள்! 
-----------------------------------------------------------------------------------------------------------------
ஊக்கபடுத்தும் வார்த்தைகள் குழந்தைகளின் முகத்தையும், உலகத்தையும் இன்னும் சற்று அதிகமாகப் பிரகாசிக்கச் செய்கிறது! 
---------------------------------------------------------------------------------------------------------------------
ஒருவரின் சோம்பலை இன்னொருவரின் உழைப்பு ஈடு செய்யும்!
-------------------------------------------------------------------------------------------------------------------
எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் ஒருவருக்குக் கடைசியில் கிடைப்பதென்னவோ தனிமையும், ஏமாளி பட்டமும் தான்!
--------------------------------------------------------------------------------------------------------------------
ஓர் அரசு அலுவலகம், வரிசையில் மக்கள், கௌண்டரின் அருகே இரண்டு கண்காணிப்புக் காமெராக்கள்....ஒருவர் வருகிறார், "சார் நான் கிளம்பறேன்" என்று நகர, ஒரு கௌண்டரில் இருந்தவர் அவசரமாக இன்னொரு ஊழியரை அழைத்து, சென்றவர் பின்னே அனுப்புகிறார். விடைப்பெற்றுச் சென்றவர் மீண்டும் வருகிறார், ஒரு புத்தகத்தைக் கௌண்டரில் இருப்பவரிடம் கொடுத்து, "அப்புறம் படிங்க சார், நான் வரேன்!" என்கிறார்! மேட்டர் ஓவர்!

#2G, 3G எல்லாம் கடந்தாச்சு, யார்கிட்ட?! 
---------------------------------------------------------------------------------------------------------------------
சுட்டுவிடுவான் என்று தெரிந்தும் வெள்ளையனை வீரத்துடன் எதிர்த்தவர்களின் வாரிசுகளா (நாம்) இந்தியர்கள்?
#பணம், பதவி என்று சொன்னவுடன் நிறையப் பேரைக் காணோம், யார் காலில் யாரோ!
— feeling amused அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!
------------------------------------------------------------------------------------------------------------------------
ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்ற அறிவிப்பு/சலுகைத் தாங்கி வரும் பெரும்பாலான பொருட்கள் யாவும், இரண்டின் விலையை ஒன்றில் தாங்கியே வருகிறது!
# வியாபாரத் தந்திரம்!
-------------------------------------------------------------------------------------------------------------------------
 
    
 
  
 

நல்மனம் மட்டுமே


பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு சந்தித்த தோழியின் கடைசித் தங்கையின் திருமணத்திற்குச் செல்ல நேர்ந்தது, உறவுகள் நிறைந்த சபையில், அவளின் மொழி எனக்குத் தெரியாது என்பதற்காக மொத்த உறவுகளும் எனக்குத் தெரிந்த மொழியில் பேசியதும், உறவுகளிடம் பேசினாலும், எனக்குத் தேவையில்லை என்றாலும் உடனே எனக்கு மொழிப்பெயர்த்துக் கூறிய பாங்கும், எனக்குப் பிடித்த உணவு, பிடிக்காத உணவு என்று நானே கூறாமல், நினைவு வைத்துக் கொண்டு மொத்த உறவுகள் செய்த விருந்தோம்பலும், நான்தான் பெரியம்மா, நான் சித்தி என்று தானே முன்வந்து அறிமுகம் செய்து கொண்டு குடும்ப நிகழ்வுகளைத் தங்கள் மகளின் நட்பை மதித்துப் பகிர்ந்து கொண்ட விதமும், பல வருடங்கள் ஆனாலும் சாதிகளையும், மதங்களையும் கடந்து நினைவில் நீக்கமற நிறைந்து விட்ட அன்பைப் பறைசாற்றியது!.

எல்லா எளிய மனிதர்களும் அன்பானவர்களே!
சாதியும் மதமும் பூசல்களும் சண்டைகளும் எளிய மனிதர்கள்
ஒன்று சேராமல் இருக்கவும், பதவிக்காகவும், பணத்திற்காகவும் ஏமாற்றுகாரர்கள் வலியவர்களாய், தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட/படும் காட்சிப் பிழைகளே!

#மதம் இல்லை நல்மனம் மட்டுமே!

வாழ்க்கைக் கோல்கள்


ஆர்வம் மட்டுமே திறவுகோல்,
நம்பிக்கை என்பது நெம்புகோல்,
தேவை என்பது ஊன்றுகோல்
எதையும் புதிதாய்க் கற்றிட!

மூன்று கோல்களில்
எது பழுதடைந்தாலும்
கற்றல் பயணம் முடிந்துவிடும்!
 

Tuesday, 7 January 2014

புன்னகை


மறதி என்பது
இல்லாமல்
போயிருந்தால் - இந்த
புன்னகையும் இல்லாமல்
போயிருக்கும்

அந்தப் புன்னகை
இல்லாமல்
போயிருந்தால் - இந்த
வாழ்க்கை ஒன்றும்
வறண்டு போயிருக்கும்

அந்த வாழ்க்கை என்பது
வறண்டு போயிருந்தால் - இந்த
நம்பிக்கை என்பது
துவண்டு போயிருக்கும்

இந்த நம்பிக்கை ஒருநாள்
துவண்டு சாய்கையில் - அந்த
வாழ்க்கையும் முடிந்துபோகும்
பெரும் புன்னகையின் விதைகளை
மண்ணில் ஈந்து!

Saturday, 4 January 2014

தாய்மை

 

இரண்டு சம்பவங்கள்:

1. படிக்காத ஒரு கிராமத்துப் பெண், தன் இரண்டு வயது குழந்தையைக் கவனக்குறைவால் கவனிக்காமல் விட, குழந்தைச்  சாலையின் அந்தப் பக்கம் ஒரு கடையில் நின்று கொண்டிருந்த தந்தையை நோக்கி ஓடி, ஒரு காரின் குறுக்கே விழுந்து, எப்படியோ ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் வண்டியில் அடிபடாமல் தப்பியது.....

2. ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், சென்சார் சரிவர வேலை செய்யாத ஒரு லிப்டில், ஒரு படித்த நகரத்துத் தாய், இரண்டு குழந்தைகளை (இரண்டு மற்றும் ஐந்து வயது இருக்கலாம்) அழைத்துக் கொண்டு லிப்டின் உள்ளே வரும்போதும், வெளியில் செல்லும்போதும் குழந்தைகளைப் பின்னே விட்டு விட்டு, அந்தப் பெண் மட்டும் பொருட்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே முன்னே சென்றார். குழந்தைகளின் பாதுகாப்புக்காக அந்த லிப்டின் கதவை அவர்கள் வெளியேறும் வரை நான் பிடித்துக்கொண்டு நிற்க, அந்தத் தாயின் அக்கறையின்மை எனக்குப் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

இந்த இருவேறு சம்பவங்களிலும், அந்த இரண்டு பெண்களிடமும் பேசுகையில், கிராமத்துப் பெண் தன் தவறை சரி செய்யக் குழந்தையை அடித்தார், நகரத்துப் பெண் தன் தவறையே உணராமல், பெரும் அலட்சியத்தோடு சென்று விட்டார்.

இருவேறு சம்பவங்களில் என்னுடன் இருந்த உறவும் நட்பும், இவங்க எல்லாம் இப்படிதான், நீ உன்னுடைய வேலையைப் பாரு என்றே  அறிவுறுத்தினார்கள்.
அட, என்னதான் நடக்குது இங்கே, ஒன்பது மாதங்கள் சுமந்துப் பெற்று, அதன் ஒவ்வொரு அசைவுக்கும், அழுகைக்கும் காரணம் தேடி, ஈ, எறும்பு அண்டாமல், கொசு கடிக்காமல் பாதுகாத்து, பிரசவத்திற்கு முன்பும், பால் கொடுக்கும் போதும் குழந்தைக்கு எது சேரும் எது சேராது என்று தன் விருப்பத்தை மறந்து, குழந்தை நலம் ஒன்றே பேணி, பார்த்துப் பார்த்துப் பெற்று வளர்க்கும் போது, எல்லாத் தாய்மையும் இப்படிதானே என்று ஒரு தாயாய் நான் எப்போதும் நினைத்துக் கொள்வது உண்டு. ஆனால் நாகரிகம் வளர வளர குழந்தைகள் என்பதும் இங்கே ஏதோ ஒரு தேவைக்காக ஆகிவிட்டதோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

திருமணம் ஆகிவிட்டால் மட்டுமே குழந்தைப் பெற்றுக் கொள்ளும் தகுதி வந்துவிடாது, தாய்மை உணர்ந்து, மனம் முழுக்கத் தாய்மை நிறைந்து, தன்னையும் தன் குழந்தைகளையும் நல்லபடி வளர்க்கும் மனப்பக்குவமும், உழைப்பிற்குச் சுணங்காத உடல் வலிமையையும், தெளிவான சிந்தனையும் இப்போதுள்ள சூழலில் எந்தத் தாய்க்கும் அவசியம்.

சுயநலம் மிகுந்த பெண்கள், தன் அழகை மட்டுமே போற்றிப் பாதுகாக்கும் பெண்கள், உழைக்க மறுக்கும் பெண்கள், வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் நம்பும் பெண்கள், படிப்பறிவே இல்லாமலும், தெளிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லாத பெண்கள், கொடுமைப்படுத்தப்படும் பெண்கள், மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்கள், சரியான வழிக்காட்டுதல் இல்லாத பெண்கள் என நீண்டு செல்லும் இந்த வரிசையில், இவர்கள் சுமந்துப் பெரும் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது எப்போதும் கேள்விக்குறிதான்.

இப்படிகூட அம்மாக்கள் இருக்க முடியுமா என்ற கேள்வியில் இருந்து என்னால் விடுபடவே முடியவில்லை.....ஒன்று மட்டும் தெரிகிறது, இப்பெண்களுக்குத் ஏதோ ஒரு குறை இருக்கிறது, அவர்களுக்குத்  தேவையான ஒரு வழிகாட்டுதலை, நல்ல முறையில் அந்த வீட்டில் உள்ள பெரியவர்களோ, அல்லது கணவன் எனும் உறவோ காட்டுதல் அவசியம்! அல்லது தன்னை மட்டுமே மையப்படுத்திக்கொள்ளும் பெண், இன்னொரு உயிரைப் பிரசவிக்காமல் இருத்தல் நலம்!

பெண்மையைப் போற்றுங்கள், நாளை சந்ததி நல்லபடி வாழ! 

Friday, 3 January 2014

வெட்டி விமர்சனம்!

வேர்வையில் நலிந்து,
மஞ்சளில் மிளிர்ந்து,
ஒப்பனையில் ஒளிர்ந்து,
உழைக்கும் மகளிர்க்குண்டு  
எத்தனையோ முகங்கள்
அந்த முகங்களின் பின்னே
உள்ள மனம் தெரியாமல்,
அவர்களின் தோற்றத்தையே
நடத்தையாக உருவகித்து
விமர்சிக்கிறீர் 
அழுக்கடைந்த மனங்களை
மறைத்துக் கொண்டு!
# வெட்டி விமர்சனம்

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...