Tuesday, 7 January 2014

புன்னகை


மறதி என்பது
இல்லாமல்
போயிருந்தால் - இந்த
புன்னகையும் இல்லாமல்
போயிருக்கும்

அந்தப் புன்னகை
இல்லாமல்
போயிருந்தால் - இந்த
வாழ்க்கை ஒன்றும்
வறண்டு போயிருக்கும்

அந்த வாழ்க்கை என்பது
வறண்டு போயிருந்தால் - இந்த
நம்பிக்கை என்பது
துவண்டு போயிருக்கும்

இந்த நம்பிக்கை ஒருநாள்
துவண்டு சாய்கையில் - அந்த
வாழ்க்கையும் முடிந்துபோகும்
பெரும் புன்னகையின் விதைகளை
மண்ணில் ஈந்து!

1 comment:

  1. அருமை...

    ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...