Saturday, 18 January 2014

கீச்சுக்கள்

தவறான ஒரு பழக்கத்தைக் கைவிடுவதற்கும், புதிதாய் ஒரு நல்ல பழக்கத்தை மேற்கொள்வதற்கும் வயதோ, நேரமோ, தகுதியோ ஒருபோதும் தடையில்லை, முரண்டுப் பிடிக்கும் நம் மனமே ஒற்றைக் காரணம்!
 --------------------------------------------------------
People start thinking about their beloved only during their absence and the world is ready to forego your mistakes and to praise your contributions only when you die!
------------------------------------------------------------
நிழலைக் கூடக் கேள்வி கேட்காமல் இருந்தால் தான்
நிதர்சனதுக்கும் நிம்மதி!

-----------------------------------------------------------------
பிடிக்கும்போது கிடைக்கிறது
பிடிக்காதபோது கிடைப்பதில்லை
#நேரம்
 
 

-------------------------------------------------------
பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு சந்தித்த தோழியின் கடைசித் தங்கையின் திருமணத்திற்குச் செல்ல நேர்ந்தது, உறவுகள் நிறைந்த சபையில், அவளின் மொழி எனக்குத் தெரியாது என்பதற்காக மொத்த உறவுகளும் எனக்குத் தெரிந்த மொழியில் பேசியதும், உறவுகளிடம் பேசினாலும், எனக்குத் தேவையில்லை என்றாலும் உடனே எனக்கு மொழிப்பெயர்த்துக் கூறிய பாங்கும், எனக்குப் பிடித்த உணவு, பிடிக்காத உணவு என்று நானே கூறாமல், நினைவு வைத்துக் கொண்டு மொத்த உறவுகள் செய்த விருந்தோம்பலும், நான்தான் பெரியம்மா, நான் சித்தி என்று தானே முன்வந்து அறிமுகம் செய்து கொண்டு குடும்ப நிகழ்வுகளைத் தங்கள் மகளின் நட்பை மதித்துப் பகிர்ந்து கொண்ட விதமும், பல வருடங்கள் ஆனாலும் சாதிகளையும், மதங்களையும் கடந்து நினைவில் நீக்கமற நிறைந்து விட்ட அன்பைப் பறைசாற்றியது!.

எல்லா எளிய மனிதர்களும் அன்பானவர்களே!
சாதியும் மதமும் பூசல்களும் சண்டைகளும் எளிய மனிதர்கள்
ஒன்று சேராமல் இருக்கவும், பதவிக்காகவும், பணத்திற்காகவும் ஏமாற்றுகாரர்கள் வலியவர்களாய், தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட/படும் காட்சிப் பிழைகளே!

#மதம் இல்லை நல்மனம் மட்டுமே!

Photo: பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு சந்தித்த தோழியின் கடைசித் தங்கையின் திருமணத்திற்குச் செல்ல நேர்ந்தது, உறவுகள் நிறைந்த சபையில், அவளின் மொழி எனக்குத் தெரியாது என்பதற்காக மொத்த உறவுகளும் எனக்குத் தெரிந்த மொழியில் பேசியதும், உறவுகளிடம் பேசினாலும், எனக்குத் தேவையில்லை என்றாலும் உடனே எனக்கு மொழிப்பெயர்த்துக் கூறிய பாங்கும், எனக்குப் பிடித்த உணவு, பிடிக்காத உணவு என்று நானே கூறாமல், நினைவு வைத்துக் கொண்டு மொத்த உறவுகள் செய்த விருந்தோம்பலும், நான்தான் பெரியம்மா, நான் சித்தி என்று தானே முன்வந்து அறிமுகம் செய்து கொண்டு குடும்ப நிகழ்வுகளைத் தங்கள் மகளின் நட்பை மதித்துப் பகிர்ந்து கொண்ட விதமும், பல வருடங்கள் ஆனாலும் சாதிகளையும், மதங்களையும் கடந்து நினைவில் நீக்கமற நிறைந்து விட்ட அன்பைப் பறைசாற்றியது!. 

எல்லா எளிய மனிதர்களும் அன்பானவர்களே! 
சாதியும் மதமும் பூசல்களும் சண்டைகளும் எளிய மனிதர்கள் 
ஒன்று சேராமல் இருக்கவும், பதவிக்காகவும், பணத்திற்காகவும் ஏமாற்றுகாரர்கள் வலியவர்களாய், தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட/படும் காட்சிப் பிழைகளே!

#மதம் இல்லை நல்மனம் மட்டுமே! 
------------------------------------------------------------------------------------
எல்லாம் கிடைக்கப் பெற்றவர்களுக்கு
ஏதோ ஒன்று இல்லாதவர்களின்
தேவை என்பது நகைப்புக்குரியதாகவே தோன்றும்!
#சோறு இல்லைனா பிரட் சாப்பிடுங்க!(இப்பவும் அப்படிதான்!)
feeling இங்கே எல்லாமே அப்படிதான்!
----------------------------------------------------------------------------------------
மனம் புரியா நேரத்தில்
மௌனத்தில் அர்த்தம் இல்லை!
--------------------------------------------------------------------------------------------
பசிக்கு உணவை நாள் நட்சத்திரம் பார்த்துதான்
தரவேண்டும் என்றால் - குறித்த முஹுர்த்தத்தில்
பால் மற்றுமே ஊற்ற முடியும்!
#அன்னதான அலம்பல்கள்
--------------------------------------------------------------------------
Photo: வெறுப்பை 
யார் வேண்டுமானாலும் விதைக்கட்டும், 
எதிர்கொள்ளும் நிலம் 
அன்புடையதாய் இருக்கட்டும்-அதில் 
நிறைந்திருக்கும் 
அன்பின் விதைகள் மட்டுமே முளைக்கட்டும்! 
  
வெறுப்பை
யார் வேண்டுமானாலும் விதைக்கட்டும்,
எதிர்கொள்ளும் நிலம்
அன்புடையதாய் இருக்கட்டும்-அதில்
நிறைந்திருக்கும்
அன்பின் விதைகள் மட்டுமே முளைக்கட்டும்!

------------------------------------------------------------------------------------------------
Photo: எச்சரிக்கை: 
இது பேக் (Fake) "ஐ.டி" களுக்கு மட்டும்! நண்பர்களுக்கும், இதயம் பலகீனமானவர்களுக்கும் அல்ல! :-)
---------------------------------------------------------------------------------
எதிரே இருக்கும் பெண்ணைப் பார்த்தப் போது, இந்தக் குழந்தை பொண்ணா (பின்னாளில் சொல்லக் கேட்டது) அந்தப் பிசாசோட சண்டைப்  போட  போகுது? எதிராளின் உயரம் கூட இல்லையே, "மாஸ்டர் நீங்க உண்மையாத்தான் சொல்றீங்களா?", அவனுக்குப் பலத்த சந்தேகம், "இங்கே பாரும்மா, மூக்கு உடையலாம், அங்கே இங்கே அடிபடலாம், அப்புறம் இப்படி ஆயிடுச்சுன்னு வருத்தப்படக் கூடாது, சரியா? 
"அண்ணா நீங்க பயப்படாதீங்க, அவங்களுக்கு எதுவும் ஆகமா நான் பார்த்துக்குறேன்" என்று சொல்லி ஈயென்று இளித்த பெண்ணை, பார்த்துச் சிரித்துக்கொண்டே அவன், கலையைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான்.... 

கொஞ்ச நேரத்தில் அண்ணனுடைய மூக்கு உடைந்து, வயிற்றில் அடிபட்டு, அந்தப் பெண்ணின் கைகளில் ரத்தம்...... 
உடையில் ஆங்கங்கே சிந்திய ரத்தத்தோடு, களம் இறங்கி, இங்கேயும் அங்கேயும் போக்குக் காட்டி, எதிரே பிசாசு என்று வர்ணிக்கப்பட்ட ஒரு மலை மங்கை, போட்டியில் தடை செய்யப்பட்ட ஓர் உதையை அந்தப் பெண்ணின் வயிற்றில் ஆழமாய் இறக்க?! 

....அப்புறம் என்ன?.....தங்கச்சிக்கு கராத்தேவோடு, தெருச் சண்டை, அண்ணனோட இட்ட சண்டை, தோழியோடு நடந்த குடுமிப்புடிச் சண்டை எல்லாம் நினைவில் வந்து...கொஞ்ச நேரத்தில் டண்டனக்கா டனக்குனக்கா தான்.... பிசாசின் மூக்கு உடைந்து, உதடு கிழிபட்டு, கீழே சாய்ந்தவள் ரொம்ப நேரம் எழுந்திருக்கவே இல்லை.... 

வாங்கிய கோப்பையோடு, கட்டுகளோடு படுத்திருந்த சீனியரிடம் போய், "அண்ணா உங்க மூக்கு ரொம்ப ராசியான மூக்குன்னா.....இது உங்களுக்குதான்னா என்று பவ்வியமாய் நீட்ட...." அண்ணனின் முகம் கவுண்டமணியின் பாவனையில் போனது.....மாஸ்டர் இடி இடியென்று சிரிக்க ஆரம்பித்தார் அன்றிலிருந்து! 

பயபுள்ளைகள எதெல்லாம் சொல்லி பயமுறுத்த வேண்டி இருக்கு! இதுக்கும் அடங்கலைனா அப்புறம் டெக்னாலஜிய யூஸ் பண்ண வேண்டியதுதான்   

எச்சரிக்கை:
இது பேக் (Fake) "ஐ.டி" களுக்கு மட்டும்! நண்பர்களுக்கும், இதயம் பலகீனமானவர்களுக்கும் அல்ல!
---------------------------------------------------------------------------------
எதிரே இருக்கும் பெண்ணைப் பார்த்தப் போது, இந்தக் குழந்தை பொண்ணா (பின்னாளில் சொல்லக் கேட்டது) அந்தப் பிசாசோட சண்டைப் போட போகுது? எதிராளின் உயரம் கூட இல்லையே, "மாஸ்டர் நீங்க உண்மையாத்தான் சொல்றீங்களா?", அவனுக்குப் பலத்த சந்தேகம், "இங்கே பாரும்மா, மூக்கு உடையலாம், அங்கே இங்கே அடிபடலாம், அப்புறம் இப்படி ஆயிடுச்சுன்னு வருத்தப்படக் கூடாது, சரியா?
"அண்ணா நீங்க பயப்படாதீங்க, அவங்களுக்கு எதுவும் ஆகமா நான் பார்த்துக்குறேன்" என்று சொல்லி ஈயென்று இளித்த பெண்ணை, பார்த்துச் சிரித்துக்கொண்டே அவன், கலையைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான்....

கொஞ்ச நேரத்தில் அண்ணனுடைய மூக்கு உடைந்து, வயிற்றில் அடிபட்டு, அந்தப் பெண்ணின் கைகளில் ரத்தம்......
உடையில் ஆங்கங்கே சிந்திய ரத்தத்தோடு, களம் இறங்கி, இங்கேயும் அங்கேயும் போக்குக் காட்டி, எதிரே பிசாசு என்று வர்ணிக்கப்பட்ட ஒரு மலை மங்கை, போட்டியில் தடை செய்யப்பட்ட ஓர் உதையை அந்தப் பெண்ணின் வயிற்றில் ஆழமாய் இறக்க?!

....அப்புறம் என்ன?.....தங்கச்சிக்கு கராத்தேவோடு, தெருச் சண்டை, அண்ணனோட இட்ட சண்டை, தோழியோடு நடந்த குடுமிப்புடிச் சண்டை எல்லாம் நினைவில் வந்து...கொஞ்ச நேரத்தில் டண்டனக்கா டனக்குனக்கா தான்.... பிசாசின் மூக்கு உடைந்து, உதடு கிழிபட்டு, கீழே சாய்ந்தவள் ரொம்ப நேரம் எழுந்திருக்கவே இல்லை....

வாங்கிய கோப்பையோடு, கட்டுகளோடு படுத்திருந்த சீனியரிடம் போய், "அண்ணா உங்க மூக்கு ரொம்ப ராசியான மூக்குன்னா.....இது உங்களுக்குதான்னா என்று பவ்வியமாய் நீட்ட...." அண்ணனின் முகம் கவுண்டமணியின் பாவனையில் போனது.....மாஸ்டர் இடி இடியென்று சிரிக்க ஆரம்பித்தார் அன்றிலிருந்து!

பயபுள்ளைகள எதெல்லாம் சொல்லி பயமுறுத்த வேண்டி இருக்கு! இதுக்கும் அடங்கலைனா அப்புறம் டெக்னாலஜிய யூஸ் பண்ண வேண்டியதுதான்
feeling determined. 
------------------------------------------------------------------------------------
 
 

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...