Saturday, 18 January 2014

பொங்கல்


பள்ளியில் எழுதியது நட்புக்காக...இப்போது நட்புகளுக்காக; மீள்!

வாழ்வின் இன்னல்கள் பனிபோல் விலகி,
புதுமலர் போல் மலர்ந்து மணம் வீசி,
கண்களில் நம்பிக்கை ஒளி பொங்கி
உள்ளத்தில் ஊக்கம் நிறைந்தோங்கி
என்றும் மகிழ்வுடன், மனம் நிறைந்து நீ வாழ
இத் தைத் திருநாளில்,
உழவர்களின் மகிழ்ச்சிப் பெருநாளில்
தமிழர்களின் வாழ்வில் ஒளிக்கூட்டும் இந்நாளில்
"பொங்கலோ பொங்கல்" என்று உரத்துக் கூவி
கதிரவனை வரவேற்று மகிழும் நன்னாளில்
இவளின் மனம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...