Sunday, 17 February 2019

தப்பிவிடும் வாய்ப்புகள்

கூரிய ரம்பமொன்று
அறுப்பதையறியாமல்
கிளையின்
முனையிலொரு அணில்
பழத்தினை சுவைக்கிறது
மாற்றம்
எத்தகையதென்பதை
உணராமல்
வாக்குச்சாவடியில்
ஓட்டை விற்றுப்பெற்ற
மூலதனத்தினை
மக்கள் மனம் ரசிக்கிறது
முன்னதில் அணில்
தப்பிவிடும் வாய்ப்புகள்
அதிகம்!
Image may contain: outdoor

எனினும்_விடியலழகு!

எகிறிநிற்கும் விலைவாசியில்
மாதச்சம்பளக்காரனின்
வருமானத்தில்
துண்டுவிழுவதற்குப்பதில்
வேட்டியே விழுந்திருக்கிறது
பொய்த்துப்போன மழையில்
கிடப்பில் கிடக்கும்
நதிநீர் இணைப்பில்
விவசாயிகளின்
கோவணம் என்பது
அம்மணமாய்
உருமாறியிருக்கிறது
சாராயத்தில் மூழ்கிய
தேசத்தில்
வீதிக்குவீதியும் வீட்டிலேயும்
சாராயமென்ற முன்னேற்றத்தில்
பிள்ளைகளின் கல்விக்கனவு
கேட்பாரற்று
நசிந்திருக்கிறது
பாரம்பரிய
உணவுகளும் மருந்துகளும்
கார்ப்பரேட் கைகளுக்கு
போனதில்
இந்தியர்கள் எல்லாம்
சோதனை எலிகளானதில்
பாரதத்தின் ஆரோக்கியம்
மருத்துவமனைகளை
நிரப்பிக் கொண்டிருக்கிறது
ஆண்டாளென்றும்
ஆரியனென்றும்
நாள்தோறுமொரு சர்ச்சையில்
சாதியும் மதமும்
இடைச்செருகலில்
அமோகமாய் நீர்ஊற்றி
வளர்க்கப்பட்டு
மக்களின் மனங்கள்
பகைமையால்
வார்த்தெடுக்கப்படுகிறது
நீரோ மன்னன்
வாசித்த ஃபீடிலின் சாயலில்
இந்திய மன்னர்களின்
அவசரக் கோல வரிவிதிப்பில்
அம்பானிகள் அதானிகள்
சாமியார்களின் வருமானம்
ஏற்றம் கண்டு
நாட்டின் தொழில்துறை
வீழ்ந்திருக்கிறது
எது எப்படியிருந்தாலும்
எனக்கென்ன வென்ற
சுரணையற்ற
மந்திரிகளைப்போல
இந்த விடியலில்
அந்த இயற்கையும்கூட
எப்போதும் போல்
விழித்தெழுந்திருக்கிறது
#எனினும்_விடியலழகு!
Image may contain: one or more people, ocean, sky, outdoor and nature

அதே மணம்தான்

பூவின் இதழ்களை
பிய்த்தெரிவது போல
ஓர் மனதை
காயப்படுத்துவது
எளிதாக
இருப்பதன் காரணம்
அந்த மனம்
பூவாய் இருப்பது
மட்டுமே
காய்ந்த சருகாய்
மாறினாலும்
அதே மணம்தான்
அந்த மனதில்!

Image may contain: one or more people, flower, plant and nature

நிகழ்வுகள்

அவசரத்திற்கு, இரண்டு கிலோமீட்டர் குறைவான தூரத்திற்கு ஆட்டோ வை அழைத்தால் 50 ரூபாய் என்றார், அதற்கு பஸ் கட்டண உயர்வை காரணம் காட்டினார், “வெயில், மழை, திரும்பும் போது சவாரிக் கிடைக்காது, ஐடி ஊழியர், ஸ்டிரைக் வரிசையில சம்பந்தமேயில்லாம பஸ் ஃபேர் காரணம் காட்டுறீங்க?!” என்றால், “ஹி ஹி ஆட்டோ டிரைவர்னா அப்படித்தான்மா” என்கிறார் ஆட்டோ டிரைவர்!
என்ன செய்வது, சட்டமன்ற ஏழைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாய் ஊதிய உயர்வு அளித்துவிட்டுதான் எடப்பாடி அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது, இதுபோன்ற முன்யோசனையுடன் செயல்படும் மக்களுக்கான அரசை குறை சொல்லவா முடியும்?!”

புள்ளிகள்


ஒரு புள்ளியில்
முற்றுப்பெறும் எதுவும்
அதே புள்ளியில்
தொடங்கவும் செய்யலாம்
வாழ்க்கையின்
புள்ளிகள் யாவும்
அவரவர் நெஞ்சுரத்தைப்
பொறுத்தே
முற்றுப்புள்ளிகளாகவும்
தொடக்கப்புள்ளிகளாகவும்
மாறுகிறது!!!

விதி

சில கற்கள்
தகுந்த கரங்களில்
சிலைகளாக
உருப்பெறுகிறது
சில சுயம்புச்சிலைகள்
தகுதியில்லாத
கரங்களில்
கற்களாக
உடைபடுகிறது!

கீச்சுக்கள்

பழைய வழிப்பறி கொள்ளை என்பதின் நவீன வடிவம்தான் சாலையின் சுங்க வரிக் கட்டணம்!

--------------------
ஓட்டுக்கேட்பவனும்
ஓட்டுப்போடுபவனும்
போதையில் தள்ளாடும்
தேசத்தில்
சமத்துவம் என்பது
நாற்றத்தில் மட்டும்
உள்ளது!


---------------------
எல்லா பாவமூட்டைகளையும்
மரணத்தருவாயில்தான்
இறக்கி வைக்கத்தோன்றுகிறது
மனிதர்களுக்கு!
---------------

தேவைப்படும்போது கிடைக்காத எதுவும், கிடைக்கும்போது தேவைப்படுவதில்லை, அது அன்பென்றாலும் கூட!
-------------

கோபத்தையும், அலட்சியத்தையும் உடனுக்குடன் செவ்வனே செய்கிறோம், அன்பையும் அரவணைப்பையும் தருவதற்கு மட்டும் நேரம் தேடுகிறோம்!
-------------

காணும் காட்சியாவும்
கிடைக்கும் இடைவெளியில்
கவிதையாகிறது!
-----------------

எந்தவொரு அநீதிக்கு வித்திடும் எவனொருவனும் தாம் விதைப்பது பிறரை மட்டுமே பாதிக்கும் என்று ஆணித்தரமாக நம்புகிறான், அது தன் வருங்கால சந்ததி மீதும் ஆணியடிப்பதை உணராமலேயே!
 

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...