Saturday, 10 November 2012

நிமிட நேர வாழ்க்கை


ஆசையுடன் வரும் பிள்ளைகளுக்கு
நாளைக்கென எதுவும் சேர்க்கவில்லை
இன்று வேண்டிய அன்பைத்
தவறாமால் தந்துவிடுகிறேன்!

தேடி வந்த காகங்களை
போவேனச் சொல்லவில்லை 
இன்று வேண்டிய உணவைத் 
தயங்காமல் தந்துவிடுகிறேன்!

காசுக்காக கை நீட்டியவர்களிடம்
நியாய தர்மம் பேசவில்லை
அவருக்கு வேண்டிய ஒரு ஒற்றைத்தாள் 
மறைக்காமல் தந்துவிடுகிறேன்!

துயரம் கொட்டியத் தோழமைகளிடம் 
தோளில் வலி என்று சொல்லவில்லை
அவருக்கு வேண்டிய நட்பை 
நட்போடு தந்துவிடுகிறேன்!

நாளைக்கென என்னிடம் எதுவுமில்லை
நாளை வரும் என்ற நம்பிக்கையை தவிர!

இன்று மட்டும் காண்கிறேன்
இயன்றவரை வாழ்கிறேன்!


No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...