Thursday, 28 March 2013

குல்மொஹர் மகள்கள்

 

அப்பாவின் கைப்பிடித்து
அவள் சென்றதேயில்லை
சகோதரன் தோள் சாய்ந்து
அவள் ஓய்ந்ததேயில்லை
கணவன் நிழல் சார்ந்து
அவள் வாழ்ந்ததேயில்லை
பிள்ளையின் கைப் பார்த்து
அவள் சோர்ந்ததேயில்லை
நட்பின் நிழல் தோற்று
அவள் தூற்றியதேயில்லை
வாழ்ந்த காலம் முழுக்க
அவள் வாழ்ந்த காலமேயில்லை

உறைந்து விட்ட விழிகளில்
கடந்துவிட்ட வலி இருக்கும்
தனியே வந்த  பாதையில் - அவளின்
ஒற்றை மரம் ஒரு சாட்சியாய் காத்திருக்கும்

கூடு பிரிந்த மகளின் குருதி பூக்களில் கலந்திருக்கும்
இரத்த சிதறல்களாய் குல்மொஹர் பூக்கள்
அவள் மேனி போர்த்தி பார்த்திருக்கும்
மண்ணில் மறைந்த மகளின் நினைவில்
மரம் மேனி சிலிர்த்து உயர்ந்து நிற்கும்
பின் தண்டுகளின் கரம் நீட்டி
மேகம் தட்டி ஆர்ப்பரிக்கும்
இறுதியில் அவள் உயிர்த் தேடி
பூக்களில் விரல் விதைத்து
வானம் துழவி வாடிச் சுருங்கும்
மகள் உடல் தேடி பூமியெங்கும்
மலர்த் தூவி மரம் தினம் வாடும்!

நிறத்துக்கு பின்னே நினைவும்
நினைவின் தேடல்கள் தினமும்!





No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...