Wednesday, 3 September 2014

டாஸ்மாக்

இருவேறு செய்திகள் :

1. கணவன் சாராயக்கடையில் குடி இருந்து, குடும்பத்தின் தேவைகளைக் கவனிக்காததால் மனமுடைந்துப் பெண் தற்கொலை, குழந்தைக்  கவலைக்கிடம்......

 2. டாஸ்மாக் வருமானம் ............கோடியைத் தொட்டது (ஏறிக்கொண்டே இருப்பதால் அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை)

 பணத்தைச் சுரண்டி, மூளையை மழுங்கடித்து, பெண்களைக் கோழைகளாக்கி,  தற்கொலைக்குத் தூண்டி, குழந்தைகளைக் கொன்று அல்லது அனாதைகளாக்கி, நாளை வாடிக்கையாளர்களையும் இன்றே தயார் செய்கிறது.....

கருத்துரிமை எல்லாம் குற்றம் என்று சொல்லப்படும் நாட்டில், இதெல்லாம்
குற்றம் இல்லையா???  குடியினால் தினம் தினம் நடக்கும் விபத்துக்களும், தற்கொலைகளும் உண்மையில் கொலைகளே அன்றி வேறென்ன?

அனாதைகளாகி நிற்கும் எல்லா வயது குழந்தைகளுக்கும் தொட்டில் குழந்தைத் திட்டம் துவக்கும் எண்ணம் இருக்கிறதோ என்னவோ???

 எந்தக் கோவிலில் செய்யும் வழிபாடு இந்தப் பாவங்களைப் போக்கும்??

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...