Monday, 21 March 2016

கீச்சுக்கள்!

உண்மையில் இப்போது ஆங்கிலேயர் ஆட்சி வசம் நாம் இருந்திருந்தால், நமக்கு சுதந்திரமே கிடைத்திருக்காது, ஏனெனில் வெட வெடவென்று விடலைகளைப் போல் கையில் இரண்டே அரிவாள்களில் பல நூறு பேர்கள் பார்த்திருக்க அத்தனை நிதானமாய், கொடூரமாக கொலை செய்து போகிறார்கள், இந்தக் கோழைகளுக்கு நடுவே, மிஷின் கன்களும், பீரங்கிகளுமாய் ஆங்கிலேயர் வந்திறங்கியிருந்தால், இந்தியாவிற்கு தலைமுறைகளைக் கடந்தும் சுதந்திரம் என்ற ஒன்று
எட்டாக்கனியாகியிருக்கும்!

---------------------------------------

பதினைந்து வயதில் படிப்பை நிறுத்திவிட்டு, தன் சாதிக்குள் பத்து பதினைந்து வயது வித்தியாசத்தில் தன் பெண்னெனும் நாய்குட்டிக்கு தகப்பன் திருமணம் செய்து வைத்தால் அது தெய்வீகம், அங்கே அந்த பதினைந்து வயது குழந்தையிடம் உடலுறவுக் கொண்டாலும் அது காலச்சாரம்!
இருபது வயதில் சம வயதின் வேறு சாதியில் பெண் மணமுடித்தால் அது அரிப்பு, வெற்றுக் காமம்!
சாதியைக் கூர்தீட்டிய நேரத்தில் பெண்ணுக்கு வாழ்க்கையைப் பற்றி எடுத்துச் சொல்லி அவள் தேர்ந்தெடுத்த வாழ்க்கையை செம்மைப்படுத்தியிருக்கலாம் தானே சாதியைக் கொண்டாடும் தகப்பன்களே?!

---------------------------------------------------------------
ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் நாட்டையே இழந்த உணர்வில்லாமல், அவனுடைய ஊதியத்தில் சுகித்திருந்தது ஒரு கும்பல், அன்றைய நிலைக்கு சற்றும் சளைத்ததல்ல இன்றைய மத, சாதி பிடிவாதங்களில், சதுரங்க ஆட்டம் போல கட்டமைக்கப் படும் மீடியா செய்திகளில் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றிருக்கும் மக்களின் மனநிலை!

--------------------------------------------------
இந்த தேசப் பக்தர்கள், மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், பெரிய நட்சத்திர உணவகங்கள், மாட்டுத்தோலில் காலணிகள், ஆடைகள், இன்ன பிற பொருட்களை விற்கும், ஏற்றுமதி செய்யும் பெரிய பணக்கார வியாபாரிகளை நெருங்காதது ஏன்? அதையே அணிந்து நடக்கும் பேஷன் ஷோக்களுக்கு ஏன் செல்லவில்லை? பசுவை தேசிய விலங்காக அறிவித்து இந்த எல்லா வியாபரங்களையும் தடை செய்வதுதானே?
ஒருவேளை உண்பவதுதான் தவறு, கொன்று ஏற்றுமதி செய்வது தவறில்லையோ?
உண்மையில் மதத்தின் பெயரில், பசுவின் பெயரில் நடக்கும் எதுவும் இந்து தர்மமோ, அரசியல் சட்டத்தின் நியதியோ அல்ல, தனிப்பட்ட காழ்ப்புணர்வில், தனிப்பட்ட அரசியல் வியாபர லாபங்களுக்காகவே நடக்கின்றன வன்முறைகள், அதுவும் எளிய மக்களின் மீது!
----------------------------------------------------


No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...