Monday, 21 March 2016

சாதி‬

ஒரு தொலைக்காட்சியின் செய்தி சேனலில், தலித் இளைஞர் படுகொலை பற்றிய விவாதம், அதில் யாரோ ஒரு சாதியின் பிரதிநிதி, "காதல் என்பது காமம்" என்கிறார், அடடா, பெற்றோர்கள் பார்த்து அல்லது சாதி பார்த்து செய்யும் திருமணங்களில் உங்கள் மனைவியை நடுவீட்டில் வைத்து யாகம் வளர்த்தா குழந்தையைப் பெற்றுக் கொள்கிறீர்கள்?
வெறும் காமம் திருமணத்திற்குச் செல்லாது, காமமா காதலா என்று புரியாத திருமணங்கள் பாதியில் முறிந்து விடும் அது காதல் திருமணம் என்றாலும் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் என்றாலும்,
ஒரு மண்ணும் இல்லை என்று ஒட்டிக் கொண்டிருக்கும் சில திருமணங்களும், குழந்தைகளுக்காக ஒட்டிக் கொண்டிருக்கும், பரஸ்பரப் புரிதலில் சில திருமணங்கள் நீடிக்கும், இதில் சாதி சாதி என்று குதித்து அட ஏனடா வெறிப் பிடித்த விலங்குகளைப் போலத் திரிகிறீர்கள்?!

தன் சாதி மட்டுமே உயர்ந்தது, பிற சாதி ஆணோ பெண்ணோ தன் சாதியுடன் காதலோ திருமணமோ செய்து கொள்ளக்கூடாது என்று நினைப்பவர்கள் உடனடியாக,

"1. ஏதோ சாதியைச் சார்ந்த கொத்தனார்கள் கட்டிய வீட்டை இடித்து விட்டுத் தங்கள் சாதியைச் சார்ந்தவர்களை வைத்து வீடு கட்டிக் கொண்டு, பற்பசை முதல் படுக்கும் பாய் வரை, எல்லாப் பொருட்களையும் உங்கள் சாதிக்காரன் உற்பத்தி செய்ததா என்று பார்த்து வாங்குங்கள்,

2.உடல்நிலை சரியில்லாமல் மருத்துவரிடம் செல்லும்போது, அந்த மருத்துவர் உங்கள் சாதியா, அந்த மருத்துவமனை உங்கள் சாதியைச் சார்ந்தவனுடையதா என்று பார்த்துச் செல்லுங்கள்,
அடிபட்டு இரத்தமோ உறுப்புகளோ தேவைபட்டால் உங்கள் சாதியுடையது தான் வேண்டும் என்று கேட்டுப் பெறுங்கள்,

3. உங்கள் வீட்டின் கழிவுகளை நீங்களே சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்,

4. அணுவுலை முதல் கெயில் வரை உங்களை நோக்கி வரும் அத்தனை பயங்கரத் திட்டங்களையும் உங்கள் சாதிக்காரக் கும்பலை வைத்தே தடுத்துக் கொள்ளுங்கள்,

5. இயற்கைச் சீற்றங்களில் உங்களுக்கு ஆபத்து நேரிடும் போது, உங்கள் சாதிக்காரனையே உதவிக்குக் கூப்பிடுங்கள்,

6. இறுதியாக உங்கள் தனிமை போக்க விலைமகளிரை நீங்கள் நாட நேரிட்டால் அப்பெண்டிர் உங்கள் சாதியை சேர்ந்தவரா என்று உறுதி செய்துவிட்டு உங்கள் காமத்துக்கு வடிகால் தேடுங்கள் ...."

இனிவரும் காலங்களில் அரசாங்கம், சாதி மறுப்புத் திருமணம் செய்யும் மனிதர்களுக்குத் துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசென்ஸ் வழங்கிவிடலாம்!
‪#‎சாதி‬

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...