Thursday, 21 April 2016

கீச்சுக்கள்

உண்மையில் எந்தக் கட்சி தலைமைக்கும், மதத் தலைமைக்கும் அறிவாளிகள் தேவையில்லை, ஆட்டு மந்தைகளே தேவை! மதச் சாயங்கள், மனிதர்களை உருவாக்குவதில்லை!

**************************

ஆயாவும் அப்பத்தாவும் "பல்லுல வேப்பங்குச்சிய தேயு, பல்வலிக்கு லவங்கத்தையும், உப்பையும் எடு"ன்னு சொன்னதெல்லாம் பழையகாலக் குப்பைன்னு ஒதுக்கி வெச்சு, "ஓ பல்வலியா, இந்தா உப்பு பேஸ்டு, பற்கூச்சமா இந்தா லவங்க பேஸ்ட்னு" நடிகைகள் நடிகர்கள் பறந்து வந்து கூவி கூவி விக்குற அதேதான் நமக்கு நாகரீகமா தெரியுது!
பாருங்க பாருங்க நாடு போகுற போக்குல சீக்கிரமே "வாவ் இதுதான் அரிசி இதுல நிறைய கார்ப்போஹைட்ரேட்ஸ் இருக்கு, இது கேழ்வரகு, இந்தக் கூழு உங்களுக்கு நிறைய சக்தித் தரும்"ன்னு மைதாவில் மார்க்கெட் பண்றவங்க எல்லாம் தானியங்களை ஒருநாள் மார்க்கெட் பண்ணுவாங்க, யாராவது நடிகையோ நடிகரோ வந்து அப்போ விளம்பரம் செய்வாங்க, விலையும் கூடிப்போகும்!
‪#‎விளம்பரம்‬!
******************************

மாற்றம் வந்துவிட்டதாய் சொல்கிறார்கள், எந்த பக்கம் பார்த்தாலும் அதே அரசியல்வாதிகள்தான், நிற்கும் திசைகளை மட்டுமே மாற்றிக்கொள்கிறார்கள்!
குடும்ப அரசியல், ஏகாதிபத்திய தலைமை, உளறல் அரசியல், சாதி அரசியல், திரை அரசியல், கோஷ்டி அரசியல், மத அரசியல்.....
மாற்றம் மாற்றம் ஏமாற்றம் இந்த ‪#‎ஓட்டரசியல்‬!

******************************
அவரவர் மனசாட்சியை மீறிய ஒரு நீதிபதி இருந்துவிட முடியாது
அந்த நீதிபதியால் மட்டுமே உலகம் இயங்குகிறது இன்னமும்!

****************************


No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...