Wednesday, 1 June 2016

சென்னை‬

சாலையில் புளிச்சென்று
பான்பராக் எச்சில் துப்பினவன்
இந்த ஊர் இல்லை

பெண்களின் தாலிக்கு
வட்டிப்பிடித்துக் கடன் தருபவன்
இந்த ஊர் இல்லை 


வேலைக்குப் போன பெண்ணை
வன்கொடுமை செய்து கொன்றவன்
இந்த ஊர் இல்லை

சிக்னல் தோறும் குழந்தைகளை
வைத்துப் பிச்சையெடுப்பவர்
இந்த ஊர் இல்லை

அதைக் கண்டும் காணாமல்
போகும் அதிகாரிகளும்
இந்த ஊர் இல்லை

பெரும் வணிக நிறுவனங்களில்
குறைந்த கூலியில்
உழைப்பை உறிஞ்சும் முதலாளிகள்
இந்த ஊர் இல்லை

சில வணிகக் கட்டிடங்களில்
விபத்தென்றப் போர்வையில்
விழுந்து செத்தவர்கள்
இந்த ஊர் இல்லை

அந்த மரணங்களுக்குப் பின்னே இருந்த
முதலாளிகளும்
இந்த ஊர் இல்லை

அரசு அலுவலகங்களில்
ஊழியர்கள் பலர்
இந்த ஊர் இல்லை

சாலையோரம் தங்கியிருந்து
ரோடு போடும் வறியவர்கள்
இந்த ஊர் இல்லை

ஓங்கி வளர்ந்து நிற்கும்
கட்டிடங்களைக் கட்டியவர்கள்
இந்த ஊர் இல்லை

மாறி மாறி
ஆண்டவர்களில் சிலர் கூட
இந்த ஊர் இல்லை

எந்த ஊர் என்றாலும்
எல்லோரின் சங்கமம்தான்
சென்னை
வசவுகளையும்
கேலிகளையும்
எள்ளல்களையும்
தாங்கித் தாண்டி
வந்தாரை வாழ வைக்குமே இந்த
‪#‎சென்னை‬

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...