Wednesday, 1 June 2016

May 7th 2016



இன்று விடுமுறை தினம் எனக்கு, குழந்தைகளுக்கும் விடுமுறை என்பதால், நேற்று வேலைகள் முடித்து, படித்துவிட்டு, மகளுக்கு ஏழாவது பிறந்த நாள் வாழ்த்து கூறிவிட்டு உறங்கச் சென்றபோது, மணி இரண்டை தாண்டிவிட்டது! விடியலில் ஐந்து மணிக்கே எழுப்பினாள், "அம்மாவை தூங்கவிடுமா" என்று வேண்டுகோள் விடுத்து, கணவர் உறக்கம் தொடர, அவள் என்னை விடுவதாயில்லை. எழுந்து வந்தவுடன், இன்று என்ன சமைக்கலாம் என்ற யோசனையுடன், அதிகாலையில் அவளுடன் சேர்ந்து மிக்கி மௌஸ் பார்த்துக் கொண்டிருந்தேன். "ஏம்மா பவி, இன்னைக்கு லீவு தானே, கொஞ்ச நேரம் தூங்கவிடமாட்டியா?" "ம்ம் ஸ்கூல் இருக்கும்போது எங்களைத் தூங்கவிடாம எழுப்பி விடுறே இல்லே, நீ எழுப்பினா நாங்க எழுந்திருக்கிற மாதிரி, நீயும் எழுந்திருக்கணும் (!?)" (அம்மாவை மட்டும் எழுப்பறதுக்குத் தீயா வேலை செய்யுது புள்ளே) :-(

May 7th 2016 

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...