Wednesday, 1 June 2016

துறவியாக!



அக்கானகத்தில்
ஏதோ ஒரு பறவையின் எச்சத்தில்
எழுந்த மரமது
அருகிருந்த ஆப்பிள் மரம்
சிறுவனிடம் பற்றுக் கொண்டு
பட்டப் பாட்டைக் கண்ட நாள் முதல்
மனிதர் அதன் கிளை முறித்தாலும்
கவலையுறுவதில்லை
அதன் கனி கொய்தாலும்
வேதனைகொள்வதில்லை
யாரோ ஒரு மரம்வெட்டி
அதன் கழுத்தை அறுக்கலாம் நாளை
அதைப் பற்றிய சலனமும் அதற்கில்லை
அம்மரம் வானம் பார்த்தே நிற்கிறது
உயிர் உறிஞ்சும் மனிதர்களிடம்
பற்று வைக்காத #துறவியாக!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...