Thursday, 20 April 2017

கொண்டாடுங்கள்!

சிவப்புச் சிக்னலில் நிற்க வேண்டிய
சில நொடிகளைக் கூட வீணடிக்காமல்
மக்கள் விரைகிறார்கள்
மதி மந்திரிகளும் உடன் வலது இடது கைகளும்
போக்குவரத்தில் கலக்காமல் பறக்கிறார்கள்

பிரதமர் அவர்கள் உலகம் முழுக்கச் சுற்றுப்பயணம் செய்து உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்
பிரதமரும் மந்திரிகளும் புதிதுப்புதிதாய்த் திட்டங்களை அறிவித்துக்கொண்டு மட்டுமே வாழ்கிறார்கள்

நூறு ரூபாய் சம்பாதித்து எண்பது ரூபாய் செலவழித்து
இருபது ரூபாய் சேர்த்தவர்கள்,
டிஜிட்டல் இந்தியாவில் செலவுக்கும் சேர்த்து
பிளாஸ்டிக் அட்டைக் கம்பெனிகளுக்குக்
கப்பம் காட்டுகிறார்கள்

தடுக்கி விழுந்தால் கூடத் தெருவெங்கும்
பன்மதச் சின்னங்கள் - ஆலயங்கள்
மக்கள் நாள்தோறும் கூடுகிறார்கள்
அத்தனை கடவுளர்கள் இருந்தும்
சாமியார்கள் இருந்தும்
சாதி மதக் குற்றங்களில் சாகிறார்கள் மனிதர்கள்

பள்ளிக்குச் செல்லும் வயதில்
பணிக்கு விரைகிறார்கள் பிள்ளைகள்
எத்தனை குடிகள் அழிந்தாலும்
டாஸ்மாக் குடி அழியாமல்
பார்த்துக்கொள்கிறார்கள் ஆட்சியாளர்கள்

எத்தனை வரிகள் கட்டினாலும்
தேய்த்துக்கொண்டே போகிறது வாழ்வாதாரங்கள்
என்ன ஆடை அணிந்தாலும்,
எங்கே இருந்தாலும்
புணரப்பட்டுச் செத்துக்கொண்டே இருக்கிறார்கள் வயதுவித்தியாசமில்லாமல் இந்தப்பெண்கள்

அதானிகளும் அம்பானிகளும்
வளர்ந்துக்கொண்டே இருந்தாலும்
தேய்ந்து கொண்டேயிருக்கிறார்கள் விவசாயிகள்
சுத்தத்திற்குத் திட்டம் என்று பிரதமர் சொல்லியும்
இன்னமும் கழிவறை இல்லாமல்
வறண்ட ஏரிப்பக்கம் ஒதுங்குகிறார்கள்
கொழுப்பெடுத்த ஏழை மக்கள்

சுவிஸ் வங்கி இந்தியர்களின் பணத்தைச்
சேர்ந்துக்கொண்டே இருக்க,
நான்காயிரம் ரூபாய்க்கு
ஓட்டுக்களை விற்கிறார்கள் இந்தியர்கள்
இந்த மக்களின் மந்திரிகளின் அயராத உழைப்பில்
இந்தியா வல்லரசாகி பலகாலம் ஆகிறது,
கொண்டாடுங்கள்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...