Tuesday, 25 July 2017

கமல்

தெர்மாக்கோலில் அணைக்கட்டி
இருக்கும் அணைகளை மண்மேடாக்கி
ஆறுகளில் மணல் கொள்ளையடித்து
ஆறுகளை பட்டா போட்டு
பாலில் கலப்படம் செய்து
நாடு முழுக்க சாராயக்கடைகளைத் திறந்து
துண்டு பிரசுரங்கள் தருபவரை
குண்டர் சட்டத்தில் தள்ளி
வறட்சிக் காலத்தில் மரங்கள் நட்டு
மழைக்காலத்தில் நீரை சாலைகளில் வீணாக்கி
மழைவெள்ளத்தை திறந்து மக்களை பிணமாக்கி
தண்ணீரைப் பெறாமல் திறந்துவிடாமல்
விவசாயிகளை பிச்சைக்காரர்களாக்கி
மாணவர்களை நீட் தேர்வில் ஏமாற்றி
விளைநிலங்களை மத்திய அரசுக்கு தாரைவார்த்து
தமிழகத்தை கூடங்குளம் மீத்தேன் என்று கூறுப்போட்டு
முன்னாள் முதல்வர் சிறையில் இருந்தபோது கண்ணீர்விட்டு
அவரே மர்மமாய் இறந்தபோது கூவத்தூரில் கூத்தடித்து
கோவையில் மதக் கலவரங்கள் உண்டாக்கி
தலித் என்று வேட்பாளர்களை சிறுமைப்படுத்தி
இன்னமும் பின்தங்கிய கிராமம் போல் நகர சாலைகளை நரகமாக்கி
ஓரே வரி என்று பொய்சொல்லி பகல் கொள்ளையடித்து
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமாக
உலகம் சுற்றி
இப்படி எந்த உள்ளூர் சாதனைகளையும்
உலக சாதனைகளையும்
நம் அரசியல்வாதிகளுக்கு இணையாய்
நிகழ்த்தி
பொதுச்சேவை செய்யாத கமலுக்கு
நம் தமிழக மற்றும் மத்திய
தலைவர்களைப் பற்றி பேச
எந்த தகுதியும் இல்லையென்று
வன்மையாக கண்டித்து
வெளிநடப்புச் செய்கிறேன்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...