Tuesday, 25 July 2017

ஆழ்கடல்_மனது



உனக்கு
ஆற்றொண கோபம்
வரும்
எனக்கு
தாங்க முடியா ஆற்றாமை
பெருகும்


உன் காரியங்களுக்காக
எனக்களித்த நேரத்தை
நீ தவறுவதுண்டு
நான் உனக்காக
காரியங்களைத்
தள்ளிப்போடுவதுண்டு

உன் பணிகளுக்கிடையே
நீ என்னை மறந்துபோவாய்
என் அயர்ச்சியிலும்
நான் உன் நினைவில்
தொலைந்து போவேன்
அதையும் நீ
அப்படியாயென்று
எளிதாய் கடந்துபோவாய்

கட்டுக்கடங்கா உணர்ச்சிகளை
துவண்டுப்போகும்
என் மனதைப் பற்றிய
கவலையின்றி
நீ என்மீது கட்டவிழ்த்ததுண்டு
துவண்டுப்போய் நின்றாலும்
உனக்கு புன்னகையைப்
பரிசளிக்க
நான் வேதனைகளை
மறைத்ததுண்டு

நான் வாக்கு தவறியதில்லை
உனக்கு என் ஆசைகளைப்
பற்றிய எந்த நினைவுமில்லை

உன் நலத்தில்
நான் உன் தாதி
என் நலமறிய விழையா
நீ என் காதல்
என்பதே ஒரு விநோத சேதி

மனதால் இணைந்த
மணத்தில் வீசும் என் சாமரம்
ஒருநாள் ஓய்ந்துப்போகும்போது
நெடுமரமாய் என் கல்லறையில்
நின்று நீ என்ன செய்வாய்
என்பதே பெரும்
கவலையெனக்கு!
#ஆழ்கடல்_மனது

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...