Tuesday, 25 July 2017

மெல்லிய_மனங்கள்





கடன் கட்ட
மறுத்து ஏய்த்தவன்
பிறரை வார்த்தையால்
காயப்படுத்திச் சென்றவன்
அன்பென்ற பெயரில்
வஞ்சித்து சென்றவன்
அனிச்சம் போன்ற மனதை
சவால் விட்டுக் கொன்றவன்
பிறர் பொருளை
வழிப்பறி செய்தவன்
ஒர் உயிரை
இரக்கமின்றி களவாடியவன்
ஓர் உடலை
விருப்பமின்றி சூறையாடியவன்
வாய்கூசாமல் பிறர் மீது
அவதூறு பரப்புவன்
என்று
அத்தனை நல்ல மனிதர்களும்
மிகுந்த திறமைசாலிகளாய்
கொஞ்சமும் உறுத்தலின்றி
வாழ்க்கையை
அதன் எல்லா சுவைகளுடனும்
வாழ்வாங்கு வாழ
எங்கோ திறமையற்று
இவர்களிடம்
ஏமாந்த கூட்டம் மட்டும்
அவ்வப்போது தாளாமல்
செத்து வீழ்கிறது!!!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...