Saturday, 1 June 2013

ஆற்றல் முரண்!



சிந்திய பருக்கைகள் 
சில உயிர்களுக்கு உணவாகும்
தெளித்த சில துளிகள் 
ஒரு விதையின் தாகம் தீர்க்கும்
காற்றில் எழும் நாதம் 
சிறு குழந்தைத்  துயிலும் கீதமாகும்
காக்கையின் கழிவும்
ஒரு விருட்சத்தின் விதையாகும்
தூசி துகள்கள் ஒன்று சேர்ந்து
பூமியை வளமாக்கும்
எரிந்து போகும் கரித்துண்டும்
ஒருநாள் வைரமாகும்
பேசாத இயற்கை வினையாற்றும் 
நிற்காமல் பூமி காக்கும் கடமை செய்யும்!

நம்மிடமும் உண்டு அள்ளித் தர
அக்னி கங்குகள் ஆயிரம்
கிள்ளித் தர  மட்டும்
ஏதும் இல்லை இவ்விடம்
ஆற்றல் முரணாய் மானிடர்
வாழ்வே வரம் - வாழ்ந்திடோம் தினம்!

இதய மொழிக் கொண்டு
இயற்கை வழி இசைந்து, வினையாற்றும் அன்பில் 
இயங்கிடும் உலகம்,
இயல்பில் வாழும் மனிதம்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...