Tuesday, 4 August 2015

மாமழை

மழையில் நனைந்து
சன்னலோரம் ஒடுங்கும்
ஒரு பூனையாய்
காற்றில் சிதறிக்கிடக்கும்
குல்மொஹர் மரத்தின் பூக்களாய்
பாதையில் உதிர்ந்து நிறைந்து
மிதிபடும் இலைகளாய்
வெடித்த வெறுப்பில்
துவண்டுப் போய் இருக்கிறது உயிர்
எதையுமே கரைக்கவில்லை
ஆழிக்காற்றுடன் பெய்யும் இம்மழை ,
மாறாய் என்னுடனேயே கரைகிறது
இத்துயரத்தின் அந்திமப்பொழுதில் 
உற்ற ஒரு நண்பனைப்போல்,
இந்த மாமழை!

1 comment:

  1. அருமை...பொதுவாக மழைக்காலம் நிறைய கவிதைகள் கொடுக்கிறது.....

    ReplyDelete

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...