Monday, 10 August 2015

யோகப் பயிற்சி


யோகப் பயிற்சி நாளும் செய்தால் உங்கள் உடல் வலிமை பெரும், நிறைய யோகப் பயிற்சிகள் இருந்தாலும், அதில் ஓர் இரண்டை மட்டும் இங்கே காண்போம், உடலுக்கு மட்டுமல்ல இங்கே குறிப்பிட்டுள்ள பயிற்சிகள் தொடரும்போது உங்கள் வாழ்க்கையும் வளம் பெரும், மேற்கொண்டு படியுங்கள், பின்குறிப்பை கவனமாய்ப் படியுங்கள்
புஜங்காசனா
------------------------
தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து, சற்றே தோள்பட்டையை உயர்த்தி, கரங்களைத் தரையில் அழுத்தி, தலையை நிமிர்த்திப் பாருங்கள்
இந்தப் பயிற்சியில் உங்கள் வயிற்றுப் பகுதி வலிமையாகும், உங்கள் முதுகும் தோள்பட்டையும் வலிமையாகும், நெஞ்சுப்பகுதி விரியும், ரத்த ஓட்டம் சீராகும்
இதை ஆங்கிலத்தில் கோப்ரா போஸ் என்பார்கள், இதைப்பற்றிக் கோப்ரா என்ன நினைக்கிறது என்பது இங்கு முக்கியமில்லை
நீங்கள் அதிகம் சிந்திக்கும்முன் அடுத்த யோக முறையைப் பார்ப்போம்
உட்டனாசனா மற்றும் அர்த்த உட்டனாசனா...
------------------------------------------------------------------------------
நேரே நின்று, வயிற்றை உள்ளிழுத்து (நீங்கள் போட்டோவுக்குப் போஸ் கொடுக்கும்போது சட்டென்று தொப்பைக்கு ஒன் ஸ்டே பேக் என்று செய்வீர்களே....ம்ம் ....அதே அதேதான்) அப்படியே முன்னே குனியுங்கள், முழுதாய் முழங் காலை மடிக்காமல், எவ்வளவு குனிய முடியுமோ அவ்வளவு குனிந்து, முட்டிவரை, கணுக்கால் வரை, அல்லது பாதம் வரை வந்து தரைதொடலாம்.....
இதுவும் உங்கள் முதுகு வயிற்றுப் பகுதியை உறுதிப் படுத்தும், உங்கள் உடலின் வளையும் தன்மையை அதிகரிக்கும்.
உங்களுக்குக் கழுத்து வலி இருந்தால் இந்த இரண்டு பயிற்சிகளைச் செய்யும்போது கவனம் தேவை.....இந்தப் பயிற்சியைக் குழந்தைகள் பெற்றோரிடம் செய்தால் அவர்களுக்கு நிறைய ஆசிகளும் அன்பும் கிடைக்கும், பூரிப்பில் பெற்றோர்களிடம் இருந்து அன்பில் தோய்ந்தக் கவிதைகளும், நிலைத்தகவல்களும் முகபுத்தகத்திற்குக் கிடைக்கும், கணவன்மார்கள் மனைவியிடம் செய்தால், காலமெல்லாம் காதல் வாழ்க என்று உங்கள் மைண்ட் வாய்சில் ஒரு ரீவைண்ட் ராகம் ஓடிக்கொண்டே இருக்கும்.....
பின்குறிப்பு:
---------------------
வளம் என்பது எத்தனை தூரம் குனிந்தால் இன்னோவா கிடைக்கும், ஆசிர்வதிக்கப்பட்ட பதவிக் கிடைக்கும் என்றெல்லாம் நீங்கள் நினைத்திருந்தால் அதற்குக் கம்பெனிப் பொறுப்பேற்காது, இந்த வயதிலும் விடாது யோகப் பயிற்சியைச் செய்கின்ற இவர்களின் ஆர்வம் உங்களுக்கு ஊக்கமாய் அமையவே இந்தப் படங்கள் இணையத்திலிருந்து
feeling crazy.

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...