Monday, 20 February 2023

தோழமை

 

எங்கேயோ நிற்கிறாய்
திக்கு தெரியாமல் தவிக்கிறாய்
யார் யாரையோ உறவென்றாய்
எவர் எவரையோ நட்பென்றாய்
காற்று வீசும்போது
கலைந்திடும் மேகம் போல
மோகம் தீர்ந்ததும்
விலகும் காதல் போல
தேவை தீர்ந்ததும்
பறந்திடும் உறவுக் காகிதங்கள்
இதில் உண்மைத்தேடி
நீயும் தவிப்பதென்ன?
பொய் பிம்பங்களை நாடி
நாளும் களைப்பதென்ன?
மழைநாளில் மின்னும் வானவில்
காணாமல் போகும் கோடையில்
எதற்காகவோ இந்தச் சோகம்
தீருமோ மனதின் தாகம்
வண்ணத்துப்பூச்சி வாழ்க்கையில்
உணர்வுகளின் தேடலில்லை
கடமைகளை கடக்கையில்
தேடல்களில் அர்த்தமில்லை
மழைத்துளியை பருகிவிடு
வெப்பக்கதிரில் கரைந்துவிடு
மனங்களை கடந்துவிடு
அன்பினை மட்டும் தந்துவிடு
மலரும் பூப்போல வாழ்ந்துவிடு
விழும்போது ஆசையும் விடு
மெல்லத் தணியட்டுமே பூமி
சுமைகளை விட்டுவிடு!
எங்கேயும் நிற்காதே
திசையின்றி் தவிக்காதே
உறவெல்லாம் உறவல்ல
இரவுகள் எல்லாம் இருட்டல்ல
நீயே உந்தன் நம்பிக்கை
வாழ்ந்து கடக்கவே வாழ்க்கை!

 

May be an image of 1 person, outdoors and text

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...