Monday, 20 February 2023

நரகத்தின்_கட்டமைப்பு

கதிர்வீச்சின் வெம்மையில்
குருவிகள் காணாமல் போனது
வாய்க்கால்கள் சாக்கடையானதில்
தவளைகள் இல்லாமல் ஆனது
இரையே அருகிப்போனதில்
பாம்புகளும் அருகிவிட்டது
மின்சார வேலிகளில்
யானைகளும் மரித்துப்போனது
வண்ணமயமான சிட்டுக்குருவிகள்
கூண்டுகளுக்குள் அடைப்பட்டது
பேசும் கிளிகள் பேசுவதனாலேயே
மனிதர்களிடம் சிறைப்பட்டது
பூச்சிக்கொல்லிகளில்
புழுக்களும் மக்கிப்போனது
கடைகளின் இனிப்புப்பண்டங்களில் கூட
எறும்புகள் தள்ளிப்போனது
பிற உயிர்களை அழித்து
தமக்கென வடிவமைத்துக்கொள்ளும்
உலகத்தை நகரமென்றும் நாடென்றும்
மனிதர்கள் இப்படித்தான்
அறிவித்துக்கொல்(ள்)கிறார்கள்!

No photo description available.

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...