Tuesday, 21 February 2017

நிம்மதியான உறக்கம்

இனம் குலம் சாதி மதம்
தேடி, அன்புபாராட்டி
நீங்கள் வாழ்த்துப்பாடி முடிக்க
சக மனிதத்தின்
நற்செயல்கள் யாவும்
நீர்த்துப்போகும்!
களைத்த வேளையில்
கிடைத்த உணவு
யார் சமைத்ததோ
விழுகையில்
எழுப்பி விட்டது
யார் கரமோ
துவள்கையில்
வாய்ப்பளித்தது
எம் மனமோ
மரணப் படுக்கையில்
பிழைக்க வைத்தது
யார் உதிரமோ
ஊமையாய்ப்
பொங்கிய கண்ணீரை
துடைத்தது எந்தக் காதலோ
ஒரு புன்னகையை
பரிசளித்தது
எந்த விழிகளோ
வசவுகளை உடனுக்குடன்
கொட்டிவிடுதல் போல
வாழ்த்துக்களையும் உடனுக்குடன்
தெளித்தாவது விடுங்கள்
முன்னதில் உறக்கம்
தொலைத்தாலும் தொலைந்தாலும்
பின்னதில்
நிம்மதியான உறக்கம்
இருவருக்கும் வரும்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...