Tuesday, 21 February 2017

நல்ல ஆட்சி

ஒருவர் ஒருமுறை முதல்வராகி ஐந்து வருடம் ஆட்சிசெய்தபின் மறுமுறை முதல்வராக முடியாது

குறைந்தப்பட்ச கல்வித்தகுதியில்லாமல் ஒருவர் முதல்வராக முடியாது
தேர்தலில் நின்று வெற்றிப்பெறாமல் எத்தனை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆதரவு தந்தாலும் ஒருவர் முதல்வராக முடியாது
குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் அவர் பொதுச்சேவைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்

அவருக்கோ அவரின் வாரிசுகளுக்கோ நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசாங்க ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருக்கக்கூடாது
அவருக்கோ அவரின் வாரிசுகளுக்கோ சாராயக் கடைகளில் உரிமை இருக்கக்கூடாது

தேர்தலில் நிற்பவர்கள் தங்கள் சாதியினர் மிகுதியாக உள்ள இடங்களில் நிற்கக்கூடாது

தேர்தலின் போது, கட்சிகள் ஒரு ரூபாய்கூட பணமாக செலவழிக்கக்கூடாது
தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் தேர்தல் முடியும்வரை எந்த மதுக்கடையும் திறந்திருக்கக்கூடாது

தேர்தலின் பிராச்சாரக் கூட்டங்களில் பிற வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை, அதிலும் பெண்களைத் தரக்குறைவாக பேசக்கூடாது, பேசினால் அப்போதே அந்த வேட்பாளரை நீக்கிவிட வேண்டும். பத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் அப்படியே பேசினால் அந்தக்கட்சியையே செல்லாது என்று அந்தத்தேர்தலில் இடைநீக்கம் செய்யவேண்டும்

தேர்தல் சமயத்தில் ஒரு குண்டூசிக்கூட இலவசமாய் மக்களுக்கு வழங்கப்படக்கூடாது, செய்தால், மேலே சொன்ன இடைநீக்கத்தைச் செய்யவேண்டும்

கல்வியை மருத்துவத்தை அரசுடைமையாக்க வேண்டும்

இப்போதிருக்கும் அத்தனை அரசு அலுவலகங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படவேண்டும், கழிவறையைத்தவிர!

கட்சி சாராமல், அரசுக்கென்று ஒரு பத்திரிக்கையும், தொலைக்காட்சியும், சமூகவலைத்தள பக்கங்களும் இயங்கவேண்டும்! அரசு சார்ந்த அத்தனை செய்திகளையும், அரசு அலுவலக சிசிடிவி கேமரா நிகழ்வுகளையும் மக்களுக்கு அதன் மூலம் எடுத்துச் செல்ல வேண்டும்!

அரசு நிறுவனங்களுக்கான டெண்டர் விடும் நிகழ்வுகளை, அது தொடர்பான சந்திப்புகளையும் நேரடியாக ஒளிப்பரப்புச் செய்ய வேண்டும்

அரசு வங்கிகள், நீதிமன்றங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்திலும் நுகர்வோர் குறைக்கேட்பு மையம் அமைத்து உடனுக்குடன் குறைகளைக் களைய வேண்டும்
............................................................................................................................................
இன்னும் நிறைய இருக்கு திட்டங்கள், நல்ல ஆட்சி அமையும்போது சொல்லலாம்! 😍
#SaveTN

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...