Tuesday, 21 February 2017

அசிங்கம்_பார்ட்_4

#அணுக்கதை

சார், பசங்கள அடிக்கச் சொல்றாங்களே என்ன பண்ணலாம்?
அடிச்சுத்தூக்கு!
சார் டிவி காரனுங்க இருப்பானுங்களே?

நாம பசங்களோட வெறுங்கையோட பேசற வரைக்கும் இருக்கட்டும் அதுக்குப்பிறகு அவனுகள தொரத்து
(அடித்து துவைக்கப்படும் முதல் சீனுக்குப் பிறகு)
சார், ஏன் அடிச்சோம்னு கேக்குறாங்க சார்?

நாம வாசல்ல இருக்கற வண்டியெல்லாம் கொளுத்து!
சார் நாமதான் வழியெல்லாம் அடைச்சு, பசங்கள வெளியிலேயே விடலேயே சார், பசங்கன்னு எப்படி சார் நம்புவாங்க?

யோவ் நமக்கு கேஸ்ஸுல ஆள் கிடைக்கலைன்னா என்ன பண்ணுவோம், அந்தக் குப்பத்து பசங்கள தூக்கி உள்ளபோடு!
சார் எங்கயோ போயிட்டீங்க சார்!

(அடித்து துவைக்கும், கொளுத்தும், மண்டையுடைக்கும் காட்சிகள் தொடர்கிறது)

சார் சார் நாம அடிச்சதுல ஒரு பொண்ணோட கர்ப்பம் கலஞ்சுப்போச்சு சார்
யோவ், ஜனத்தொகையில ஒன்னு க்கொறஞ்சுப் போனா ஒன்னும் ஆகாது, வேணும்னா #%$@&

சார் வாங்க சார் நாம "திருட்டு" மீனு சாப்பிடலாம்
(எரிக்கும் உடைக்கும் காட்சிகள் தொடர்கிறது)

சார் சார் ஸ்மார்ட் போன வச்சு சில எழவெடுத்தவனுங்க நாம செஞ்சத படம் புடிச்சு பரவ விட்டுட்டானுங்க, என்ன சார் பண்றது?

ஏன்யா பதர்றே, நம்ம தலம பாத்துக்கும், ஒருத்தனையும் விடாதே!

சார் நீங்க சொன்ன மாதிரியே, வெளியூர்ல இருக்கற பயலுக பூரா நாம அமைதியா பேசினத மட்டும்தான் பாத்து இருக்காணுங்க, நாம பசங்களோட பசங்களா நின்னு போஸ் கொடுத்ததை வெச்சு சில பேரு நமக்காகவும் எழுதுறாங்க சார், நாம கொளுத்தினதைக் கூட நாம இல்லன்னு நம்ம தல அடிச்சுப் பேசிட்டாரு, இப்ப எல்லாரும் பசங்களத்தான் காரி காரி துப்புறாங்க!

இருந்தாலும் ஆதாரம் வெச்சு பேசினா என்ன சார் பண்றது?

யோவ் அதுதான் மொதல்லியே அந்த நாலுபேர நமக்கு சாதகமா நாம சொல்லிக்கொடுத்ததை பேச வெச்சுட்டோம் இல்ல, மேடத்துக்கிட்ட சொல்லி அவனுகள வெச்சு இன்னொரு தடவை அழச் சொன்னா போதும்!

(விழிவிரித்து)நீங்க ஒரு தீர்க்கதரிசி சார்!
(அடித்து துவைக்கும் காட்சி தொடர்கிறது)

சார் சார் கோர்ட் நாம பசங்கள தடை பண்ணக்கூடாதுன்னு சொல்லிடுச்சு!
யோவ் ஆர்டர் நம்ம கைக்கு கிடைக்கல, புரியுதா?
சார் எனக்கு புல்லரிக்குது சார்!

அடித்து துவைக்கும் காட்சிகள் தொடர்கிறது, கோர்ட்டில் நிறுத்தப்படுகிறார்கள் மக்கள்

(கிசுகிசுப்பான குரலில்) சார் சார், அவ்வளவும் செஞ்சது நாமதான்னு ஊரே ஆதாரம் கொடுத்தப்பிறகும், இப்ப எப்படி இவங்களுக்கு தண்டனைக் கொடுப்பாங்க?

யோவ், எல்லாக் கேஸூலயும் யார்யா ஆதாரம் கொடுப்பா?!
?!
நம்ம கேஸூலேயும் நாம கொடுக்கறதுதான் ஆதாரம்!
சார் (சல்யூட் அடிக்கிறார்)!

(தீர்ப்பு எதிர்ப்பார்த்தப்படி அமைகிறது)

வெளியே வந்து: சார் சார்
இன்னும் என்னய்யா?
சார் நிறைய வீடியோ வருது சார், ஜனங்க நம்ம மேல கோபமா இருக்காங்க சார்!
(அதிகாரி நச்சென்று அவர் வாயில் குத்துகிறார்)

(வாயில் பல் உடைந்து இரத்தம் வழிகிறது)

சார் என்ன சார் இப்படி பண்ணீட்டீங்க, நான் கேள்வி கேட்டது புடிக்கலைன்னா சொல்லியிருக்கலாமே சார் ?

யோவ் முண்டம், இப்ப நேரா ஆஸ்பிட்டல் போய் அட்மிட் ஆகு, உணர்ச்சிகரமா நான் சொல்லிக்கொடுக்கற மாதிரி பேசு, அதை வாட்ஸ்ஆப்புல எல்லாருக்கும் அனுப்பு!

சார் திரும்ப அடிச்சிடாதீங்க சார், இத்தனை பேர் நம்ம ஆளுங்க சுத்தி இருக்கும் போது, என் வாயில பசங்க அடிச்சாங்கன்னு சொன்னா யார் சார் நம்புவாங்க?
யோவ், அந்தளவுக்கு யோசிக்கற பயலுக இல்லையா இவனுங்க, நீ தைரியமா அனுப்பு!

(ஆஸ்பத்திரியில்)

சார் சார் இந்த ஹீயூமன் ரைட்ஸ் கமிஷன்லா வந்து விசாரிக்கிறாங்க சார், பயமாயிருக்கு சார்!

யோவ் அவனுங்க விசாரிச்சு கேஸ்போட்டு முடியறதுக்குள்ள நீயும் நானும் ரிடையர்ட் ஆயிடுவோம், பொறந்து வளந்தததுக்குப்புறம் அப்பன்ஆத்தாளையே மறக்கறவனுங்க, ஐஞ்சி வருசத்திலே ஆட்சியை மறந்துடுவானுங்க நம்மளையும் மறந்துடுவானுங்க, பாரு யாருக்காக போராடி இப்ப ஜெயில்ல கிடக்கறானுங்களோ அந்த ஊர்க்காரனுங்களும், அந்தப்பசங்களும் கூட இவனுகள கண்டுக்கல, நம்ம தல சில பேர மட்டும் கண்துடைப்புக்காக கொஞ்ச நாள் தள்ளி வெச்சு அவங்களுக்கு வேற எங்கனா வேல கொடுப்பாங்க! இவனுகள பிரிக்க இருக்கவே இருக்கு சாதியும், மதமும் அப்புறம் நாமளும்!

யோவ் நீ கவலைப்படாதே இந்த மாட்டுக்கார பயலுகல நம்பி இன்னும் நூறு கொலைக்கூட பண்ணலாம்!

#அசிங்கம்_பார்ட்_4
(கதைப் படிச்சவங்க எல்லாம் போய் இளநீர் வாங்கிக்குடிங்க) 😜😜😜

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...