Thursday, 16 November 2017

கீச்சுக்கள்!

அம்மா என்பவர்கள் இரண்டுமுறை சிந்திக்கிறார்கள், முதலில் தனக்காக, பிறகு தம் பிள்ளைகளுக்காக, ஆதலால் தற்கொலையை தவிர்க்கிறார்கள்!!!

--------------
நாடெங்கும் டெங்கு, தினம் தினம் மரணம், ஆனால் ஒர் "ஊழல்" அரசியல்வாதி பெயர் கூட இல்லை, கொசுக்களும் மக்கள் இரத்தத்தை பெரும் தொகைக்கு காண்ட்ரக்ட் எடுத்திருக்கலாம், யார் கண்டது, கேடு கெட்ட "கொசுக்கள்" 😏😜
----------------------

பிற மாநிலங்கள் மறுக்கும் எல்லாத்திட்டத்தையும், தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளும் நிலையை பற்றிய பேச்சில், "காசு கொடுத்தா, அம்மாவ கூட உங்க ஊர் ஆளுக வித்துடுவாங்க" ஒரு நண்பர் சொன்னது! :(((
---------------

#Flipkart #ப்ளிப்கார்ட் விளம்பரம், விலை "குரையுமாம்", தமிழ்நாடுதானே சின்ன "ர" போதும் என்று நினைத்திருப்பார்கள்!
-------------
மலையின் வளங்களை அழித்து, காட்டை ஆசிரமமாக்கிய ஜக்கி, நதிநீர் இணைப்பைப் பற்றி பேசுமுன், தன் ஆசிரமத்தை அகற்றி, வெட்டிய அளவுக்கு மரங்களை நட்டுவிட்டு, காடுப்போற்றி பின் நடிகர்கள், அரசியல்வாதிகள் புடைசூழ "சொகுசு" கார்களில் வலம் வரலாம்!
அரசியல்வாதிகள் மக்களுக்காக கண்ணீர் விடுவதும், இதுபோன்ற சாமியார்கள் இயற்கைக்காக கண்ணீர் விடுவதும் ஒன்றுதான், இரண்டுமே நம்புவதற்கில்லை!
--------------------

ராஜஸ்தானில் நகரமெங்கும், மிகச்சில இடங்களைத்தவிர, மற்ற எல்லா இடங்களிலும் இந்தி மட்டுமே இருந்தது, ஏன் இப்படி என்று கேட்டதற்கு, காரோட்டியும், அங்கு இருந்த சில பூர்வகுடிகளும் வருத்தப்பட்டு சொன்னது, "ஆரம்பத்தில் இந்தி மட்டுமில்ல, உங்க தாய்மொழியும் இருக்கும்ன்னு சொன்னாங்க, அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஆங்கிலத்தையும், தாய்மொழியையும் அழிச்சிட்டு, இப்போ இந்தி மட்டும்தான் எங்கேயும்"
வெறும் உத்திரபிரதேசத்திலும், மத்தியப்பிரதேசத்திலும் இருந்த மொழியை, சுதந்திரம் வாங்கிய காலகட்டத்திலேயே ஏற்றுக்கொள்ளப்படாத மொழியை, பல்வேறு அரசியல் செய்து திணித்த மொழியை நாடு முழுக்க பரப்பியிருக்கிறார்கள், மொழியிலேனும் தனித்தன்மையோடு இருந்த தமிழ்நாடு, முதலாளிகளின் பேராசையால், அரசியல்வாதிகளால், வந்திறங்கும் வடநாட்டவருக்கு ஏற்ற வகையில் இந்திநாடாக மாறிக்கொண்டிருக்கிறது! நாற்காலி மட்டும் போதும், மற்றதை நீ (மத்திய அரசு) எடுத்துக்கொள் என்று பெருந்தன்மையாய் இருக்கிறார்கள் அரசியல்வாதிகள்!
இவர்களின் உள்மனதின் இருட்டை மறைக்கத்தானோ வெள்ளை வேட்டியும், சட்டையும்???
---------------------

இன்னும் இரண்டு வருடத்தில் தமிழ்நாட்டில் தமிழ் மிஞ்சுமா?! ஏதாவது ஒரு தெருவில் சாராயம் இல்லாமல் இருக்குமா? அரசாங்கப்பள்ளிகள் இருக்குமா? ஏதாவது ஏழைப்பிள்ளை கல்லூரி வாசல் மிதிக்குமா?
வரலாற்றுப் பிழையான ஆட்சி!
----------------------------
ஒரு பெண்ணின் / ஆணின் அகால மரணம்
இந்தியர்களின் மனதை உலுக்க
அவள்/ அவன் அங்கமங்கமாய் வெட்டிப்புணரப்படவோ
படுகொலைச் செய்யப்படவோ
அல்லது உயர்ந்த சாதியாய் இருக்கவோ
தலைகுனிந்து நாணத்தோடு வாழ்ந்தவளாகவோ / வீழ்ந்தவனாகவோ
இருக்க வேண்டியிருக்கிறது!

-------------------
உலக மன்னிப்புத்தினமாம், நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு எல்லா தேர்தலும் மன்னிப்பு தினம்தானே? 😜
-------------------
யாரோ நீரூற்ற துளிர்க்கும் நம்பிக்கையே வாழ்க்கை!
---------------------
கதிரொளியில் மலரும் கதிர்களைப்போல்
தாயைக்கண்டு துள்ளும்
சேயைப்போல்
இருக்கவேண்டும் காதல்!

--------------------

ஒரு பெண்ணின் முதல் காதல் அவள் தகப்பனிடம், அவனின் அன்பை பெரும்பாலும் வேறு யாரிடமும் அவள் காண்பதில்லை, பெரும்பாலான அப்பன்களும் தம் பெண்ணைத்தாண்டி, உண்மையான அன்பை வேறொரு பெண்ணுக்கும் தருவதில்லை! எனினும் உண்மை எதுவெனில் "அன்பு" என்பது யாரிடம் என்றாலும், எந்தப்பெயரில் என்றாலும் அது அம்மையின் அன்பைப்போல, அப்பனின் பரிவைப்போல உண்மையானதாக, கருணையுடையதாக, உரிமைக்கொண்டதாக, உணர்வுகளை மதிப்பதாக, நினைவுகளைச் சுமந்ததாக, விட்டுக்கொடுக்கும் தன்மை உடையதாக, சுயத்தைக் காயப்படுத்தாததாக இருக்க வேண்டும்!
அத்தகைய அன்பைப்போல இருக்க வேண்டும் காதலும் நேசமும்! அது இந்த பிரபஞ்சத்தில் நம்மைச்சுற்றியுள்ள இயற்கையிடமும், மிருகங்களிடமும் நிறைந்திருக்கிறது, ஒருவேளை நீங்கள் தேடும் மனிதர்களிடமும்!
-------------------
Design of democracy states that Irresponsible people will be ruled by irresponsible politicians!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...