Tuesday, 29 August 2017

நீட் நுழைவுத்தேர்வு எதற்கு

சிபிஎஸ்சி என்றாலும் மெட்ரிக் என்றாலும் +1, +2 வில் பிள்ளைகள் படிக்கும் பாடங்கள் என்பது அவர்களின் விருப்பத்தைப் பொறுத்துதான், மருத்துவர் என்றால் சயின்ஸையும், பொறியாளர் என்றால் அதனுடன் கணிதத்தையும், கணக்களார் என்றால் வணிகவியலையும், இப்படித் தனித்தனியே குருப் என்று எடுத்துதான் படிக்கிறார்கள், அந்த அடிப்படையில் இடம் கொடுப்பதை விட்டுவிட்டு இந்த நீட் நுழைவுத்தேர்வு எதற்கு??

படிக்காதவர்கள், டீ விற்றவர்கள், சாராய வியாபாரிகள், குவாரித் திருடர்கள் என்று பிள்ளைகளின் படிப்பையும், கனவையும் பற்றித் தெரியாத தற்குறிகளுக்கெல்லாம் ஓட்டுப்போட்டால் இப்படித்தான் வியாபாரம் செய்ய வழிக்கண்டுப்பிடிப்பார்கள்! 

ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்தாலும், "இந்திய சட்டம், இந்திய அரசியல், பொருளாதாரம், உலக அரசியல், பொருளாதாரம், வரலாறு, புவியியல், வேதியியல், இயற்பியல், கணினி, கணக்கு, வணிகவியல்" என்று எல்லாப்பாடங்களிலும் இருந்து ஒரு இரண்டாயிரம் மதிப்பெண்களுக்கு ஆறு மணிநேரம் பரீட்சையெழுதி, கட் ஆப் 1999 வாங்கினால் தான், மக்கள் தேர்ந்தெடுத்தது செல்லும் என்று சட்டம் இயற்றினால் என்ன??

அப்படிச்செய்தால் இங்கேயிருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் வீட்டுக்குத்தான் செல்லவேண்டும்
நீட் பரீட்சை எழுதாதவன் மருத்துவன் ஆக முடியாது என்றால், ஐஏஎஸ் மற்றும் மேலே சொன்ன பாடங்களின் பரீட்சையில் தேறாதவன் எப்படி அமைச்சராக முடியும்??

கல்வித்தகுதி இல்லாதவர்கள் கல்வி அமைச்சராகவும், சாராய வியாபாரிகள் மக்கள் நல அமைச்சராகவும், விளையாட்டைப் பற்றி எதுவுமே தெரியாதவர் விளையாட்டு அமைச்சராகவும், அறுபதை கடந்தவர்கள் இளைஞர்கள் நலத்துறை அமைச்சர் என்பதும், மதக் கட்சியைச் சார்ந்தவர், பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்களுக்கு பிரதமர் என்பதும் இந்தியாவில் நடக்கும் கேலிக்கூத்து! இவர்கள் இருக்கும்வரை கல்வியென்பதே வெறும் கடைச்சரக்கு!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...