Tuesday, 29 August 2017

மனப்பறவை

No automatic alt text available.

 உட்புகுந்த மணற்துகள்கள்
உறுத்தியதில் சிப்பிக்குள்
முத்து உருவானது
வேய்ந்திருந்த கூடுடைந்ததும்
பட்டாம்பூச்சியொன்று
பறந்துச்சென்றது
அடைக்காத்த அண்மையில்
முட்டையுடைந்து
பறவைக்குஞ்சு வெளிவந்தது
உளியால் காயப்பட்ட கற்கள்
செதுக்கப்பட்ட சிலைகளானது
யாரோ கொட்டிய கடுமையான
வார்த்தைகள்
யாருக்கோ நெஞ்சுரமானது
உடையும் பொழுதுகளிலெல்லாம்
உருப்பெறும் அஃறிணைகளும்
சில உயர்திணைகளும்
விடாது நடத்தும்
வாழ்க்கைப்பாடத்தை
நெஞ்சில் வழியும் குருதியோடு
கையில் தேநீர் குவளையோடு
மழைச்சாரலின் வழி
ரசித்துக்கொண்டிருக்கிறேன்
உன் கத்திகளை நீ இன்னமும்
கூர் செய்துக்கொள்ளலாம்
சிதிலமாகும் புள்ளிவரைச்
செதுக்கிக்கொள்ளலாம் / கொல்லலாம்
வா, வாழ்க்கையே
இக்கூட்டினுள்ளேயொரு மனம்
எப்போதோ சிறகடிக்கும்
பறவையானது!!!

#மனப்பறவை

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...