Tuesday, 29 August 2017

தன் சாதி

அதிகம் படிக்காத பல கிராமத்து / நகரத்து பெரியவர்களிடம் கண்ட பெரிய மனதையும், சாதிப்பாராட்டாத மாண்பையும் சில நகரத்து இளைஞர்களிடம் காண முடிவதில்லை, தன் சாதியை முன்னிறுத்தி அறிமுகப்படுத்திக்கொள்வதும், நட்பு பாராட்ட விழைவதும், குறுக்கு வழியில் ஆதாயம் தேட முனைவதையும் காணும்போது, இந்தக்கல்வி இவர்களுக்கு வெறும் பட்டங்களை மட்டுமே தந்திருக்கிறது என்றே தோன்றுகிறது! இன்றும் கூட, "என் திருமணம், இன்ன சாதிப்பெண்ணுடன் என்ற ஒரு பகிரங்க அறிவிப்பை கண்டேன், "_____
சாதின்னு சொல்றதே ஒரு கெத்துதான்" என்று இன்னொரு பதிவில் ஒருவரின் சுயத்தம்பட்டத்தைப் பார்த்தேன்! அவரவர் சாதியில் அவரவர், அவரவர் சாதியைத் தொங்கிப்பிடித்துக்கொண்டிருப்பது அவரவர் விருப்பம், எனினும், சில இளைஞர்கள், சுய சாதிப்பெருமையின் பின்னே இரண்டே குறிக்கோள்கள்களை முகநூலில் தெளிவுப்படுத்துகிறார்கள், ஒன்று தம் சாதியைச் சேர்ந்தவன் இருக்கும் பதவியோ பின்புலமோ தனக்கு உபயோகப்படும் என்ற நோக்கில் அறிமுகத்தை விரிவுப்படுத்திக்கொள்வது, இரண்டு, தம் பெருமை மட்டும் பேசாமல் பிற சமூகத்தினரை கேலி பேசி காயப்படுத்துவது! 

நட்பில் லாப நோக்கையும், பிறரைக் காயப்படுத்தி தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் காழ்ப்பும், வீண் வன்முறையைத் தூண்டும் மனநிலையும் தவிர நீங்கள் வேறு எதற்கு சாதியைப் பொதுவெளியில் உபயோகப்படுத்துகிறீர்கள்?? அவரவர் மனசாட்சியைத் தொட்டு பதில் கூறிக்கொள்ளுங்கள்!

சாதியில்/ சாதிகளால் உறவுகள் வரலாம், எனினும் நல்ல நட்பு என்பது நல்ல மனங்களால் மட்டுமே வரும்! மனிதர்களை மனம் திறந்து பார்ப்போம், மனம் நிறைந்து நட்பு பாராட்டுவோம், நன்றி கூறுவோம், சாதித்தெரிந்து அல்ல!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...