Tuesday, 29 August 2017

உறுத்தாத இடைவெளியில்



தேடாத அம் மனதை
தேடாதே என்று
தேடும் என் மனதை
துண்டித்து வைத்தல்
மாபெரும் தண்டனைதான்
துரத்தும் மனதை
துறத்தல்
துறவாகினால்
மனம்
சிறகு விரிக்கும்
தனிமைச்
சுதந்திரமாகும்
ஆதலால்
பறந்து போகலாம்
வா மனமே
தூரத்தாத தூரத்தில்
யாருக்கும் உறுத்தாத
இடைவெளியில்
தனியாக!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...