Wednesday, 19 February 2014

மணக்காத மாலை!

உனக்காகக் காத்திருந்தேன்,
உசுரு வலி பொறுத்திருந்தேன்,
உருகி உருகி கரைஞ்சிருந்தேன்,
உலையிலிட்ட அரிசி போல!

ஊருக்குள்ள பேரெடுத்து,
உறவுக்கெல்லாம் சொல்லிவிட்டு,
உசிரத் தேடி நீ வருகையிலே
உருகுலைஞ்சு போனேனே,
உன்னைப் பாக்கும் நினப்பே விட்டு!

ஊரோட எல்லையிலே
காத்திருக்கேன் பாடையிலே,
மாமா நீ கொண்டுவந்த மாலையிலே,
தாலியோட மஞ்சளும்,
சேர்த்து வெச்சு போயிடு!
நீ கொண்டு வந்த மாலையும்
இனி மணக்குமா சொல்லிடு?

1 comment:

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...