Monday, 29 February 2016

மருத்துவமனையில்

மருத்துவமனையில் அமர்ந்திருக்கிறேன், பக்கத்தில் ஒரு கிராமத்துப் பெரியவர் அமர்ந்திருக்கிறார், சத்தமாக கைபேசியில், "ம்ம் சொல்லு, எந்த ஊரு பொண்ணு?
...
கோயம்புத்தூரா? எவ்வளவு தேறும்?
....
நிலம் இருக்கா ?
...
அப்பா என்ன பண்றாரு?...

இப்படியே ஓடுகிறது, பொண்ணு
என்ன படிச்சிருக்கு, குணம் எப்படி...ஹ்ஹூம் இதெல்லாம் கேக்கவேயில்ல
பொண்ணு வீட்டுக்காரங்களும் இப்படித்தான்!
சில வருஷங்களுக்கு முன்னாடி என் மாமாவும் தன் மகனுக்கு இப்படித்தான் பொண்ணுப் பார்த்தார், சில மாதங்களுக்கு பிறகு, கிளி ஜோடியோடு ஆத்தை விட்டு பறந்துப் போய்டுச்சு, மதம் மாறி காதல் திருமணம் செய்த இரண்டாவது மகனின் மனைவி, அவர்களுடன் அன்போடு இயைந்து வாழ்கிறார்!
இதுனால காதல் திருமணம்தான் சிறந்ததுன்னு சொல்ல வரலே பெரியவங்களே, நீங்க முதியோர் இல்லம் போறது, உங்களுக்கு அமைஞ்ச பிள்ளைகளைப் பொறுத்த விதி! அவ்வளவுதான்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...