Monday, 29 February 2016

விளம்பர_நோய்மை

#‎அணுக்கதை‬
பரபரப்பான சாலையில், பாதையோரத்தில் கண்பார்வை மங்கி, ஒரு தீனக்குரலில் இரந்துக் கொண்டிருந்த யாரோ ஒரு மூதாட்டியை, விரைவாக அப்புறப்படுத்துமாறு காவலரிடம் கடுமையாக சொல்லிவிட்டு, கட்சித் தலைவியின் பிறந்தநாள் வாழ்த்துக்கொண்ட ஆளுயர விளம்பர பலகையை அங்கே வைக்குமாறு உத்தரவிட்டுக் கொண்டிருந்தான், வார்டு உறுப்பினர் நண்டு முருகன்!
உயர்த்திக் கட்டிய பலகையில் "தாய்மையைப் போற்றுவோம்!" என்ற கோஷம் நண்டு முருகனின் புகைப்படத்தோடு பளிச்சென்றிருந்தது!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...