Monday, 29 February 2016

மறந்த_புன்னகை‬!

#‎அணுக்கதை‬:
கோவிலில், பிரகாரத்தின் முன் நின்றுகொண்டு சிவலிங்கத்தை பார்த்து, சத்தமாய் சிரித்த தன் ஐந்து வயது மகனை, சாமி கும்பிட வந்தவர்கள் தொந்தரவாய் பார்க்க, அவனைக் கண்டித்தான் மணி, "ப்பா, நீதானேப்பா சொன்னே சாமிக்கு குழந்தையைப் புடிக்கும்னு, இங்க யாருமே யாரைப் பார்த்தும் சிரிக்கலே, சாமியப் பார்த்தும் சிரிக்கலே, அதாம்ப்பா நா ஒரு ஜோக் சொல்லி சாமிய சிரிக்க வக்கிறேன்" என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்த மகனை அவஸ்தையாய் நோக்க, கோவிலுக்கு வந்த மனிதர்கள், ஒருவருக்கோர் விழி நோக்கி இப்போது புன்னகைக்க தொடங்கினர், மணிக்கும் அப்போது சிவலிங்கம் சிரிப்பது போல் தோன்றியது!
‪#‎மறந்த_புன்னகை‬!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...