Thursday, 16 May 2019

பூமி

ஆழப் புதைந்தவைகளை
தோண்டியெடுத்து
விலைமதிப்பற்ற உலோகங்கள்
என்று கொண்டாடி
கண்ணெதிரே நிறைந்திருந்த
பசுமையையும்
உயிர்களையும்
நாளை பற்றிய சிந்நனையின்றி
கொன்று தீர்த்த
மனிதர்களையெண்ணி
அவ்வப்போது
புலம்பி வெடிக்கிறது
பூமி!

மீண்டும் மீண்டும்
வருகிறது கடலலைகள்
பற்றிக்கொள்ளாமல்
தாங்கி நிற்கிறது
பூமி

காயங்களை
தாங்கி நிற்கும்
மனிதர்களை போல
தன்னைக் குடையும்
மரக்கைகளை
வெட்டிச்சாய்க்கும்
மனிதர்களை
தாங்கி நிற்கிறது
பூமி

எத்தனை வேண்டுமெனாலும்
ஆடிக்கொள்
இறுதியில் என்னிடம்தான்
என்கிறது
பூமி

காதலோடு
மொழியும் மழையை
மரங்களில் வேர்களில்
பதுக்கிக்கொள்கிறது
பூமி

சாய்ந்த மரங்களும்
உதிர்ந்த வன உயிர்களும்
மண்ணில் உரமாக,
சிதையில் விழும்
மனிதர்களை
என்ன செய்வதென்று
திகைக்கிறது
பூமி

வருகிறார்கள்
போகிறார்கள்
முளைக்கிறார்கள்
மடிகிறார்கள்
எல்லாவற்றையும்
தின்று விடுகிறது
#பூமி

பொறுமையாய்
இருக்கிறது
என்கிறார்கள்
உண்மையில்
இயங்கிக்கொண்டேயிருக்கிறது
தனியாக
இந்தப் பூமி!



Image may contain: sky

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...